Showing posts with label #மனதோடுயாகம். Show all posts
Showing posts with label #மனதோடுயாகம். Show all posts

Saturday, November 16, 2024

மனதோடுயாகம் - பகுதி 14

பகுதி 14

அவர் என்னை பூந்தோட்டத்திற்கு போகச் சொல்லியும் நான் போகவில்லை. தயங்கியபடி நின்றுகொண்டே இருந்தேன்.

'என்ன தோட்டத்துக்கு போகலையா?'

'இல்ல மாமா. எனக்கு ஒரு பேப்பரும் பேனாவும் தரேளா?'

'ஏன்? என்ன விஷயம்? யாருக்காவது கடுதாசி எழுத போறியா?'

'கொடுங்கோளேன். நான் என்னமோ எழுதப் போறேன். அது சீக்ரெட்.'

'சரி. அந்த ஷெல்ஃப் மேல இருக்கு பார். நீயே எடுத்துக்கோ. எட்டலைனா அந்த கணக்குப்பிள்ள டெஸ்க போட்டுண்டு கீழ விழுந்துடாம ஜாக்கிரதையா எடுத்துக்கோ.'

பேப்பரும் பேனாவும் கிடைத்துவிட்டது. அந்த கணக்குப்பிள்ளை டெஸ்கையே கையால் ஒரு துடை துடைத்துவிட்டு எழுதுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.

எழுத ஆரம்பித்த சில நொடிகளில் அவர் என்னருகில் வருகிறார். அவருக்கு ஒரு ஆர்வம். நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள.

'மாமாஆஆஆஆஆ. நீங்க பூஜ பண்ண போங்கோ. நான் காமிக்க மாட்டேன்.'

இப்படி சொல்லிவிட்டு டெஸ்கில் குனிந்து கொண்டு எழுதும் பேப்பரை மறைக்கிறேன். என்னுடைய இந்த செயலால் சற்று சிரித்துவிட்டு பூஜை ஏற்பாடுகளில் கவனம் செலுத்த சென்று விடுகிறார்.

நான் எழுத நினைத்து எழுதிக் கொண்டிருந்தது இந்த ப்ராஸனம் சம்பந்தமாக எனக்கு எழுந்த சில சந்தேகங்களின் குறிப்புகள் தான்.

படபட என்று குறிப்புகளை எழுதிவிட்டு பேனாவை எடுத்த இடத்தில் வைத்து விட்டு உடுத்தியிருந்த டிராயரில் எழுதிய பேப்பரை மடித்து வைத்துக்கொண்டு பூந்தோட்டத்தை நோக்கி செல்கிறேன்.

பூந்தோட்டத்தில் செடிகளோடு பேசிக்கொண்டிருந்தபோது பூஜையில் அவர் அசைத்த வெண்கல மணியின் ஓசை எனக்கு பூஜையின் இறுதிக்கட்டத்தை உணர்த்தியது. மடத்திற்குள் வந்துவிடுகிறேன்.

பாண்டுரங்கனுக்கு அவர் காட்டிய தூப தீப ஆராதனைகளை பார்க்கும் பாக்கியம் எனக்கும் கிடைக்கிறது.

நிவேதனம் செய்த இரண்டு வாழைப் பழங்களில் ஒன்று அவருக்கு மற்றொன்று எனக்கு.

'என்ன பாஸு. ஆரம்பிக்கலாமா?'

'காத்துண்டு இருக்கேன்'

'யாருக்கோ லெட்டர் எழுதினியே. அதை என்கிட்ட காமிச்சா தான் மேற்கொண்டு பாடம்.'

'மாமாஆஆஆஆஆ. அது சஸ்பென்ஸ். இப்ப சொல்ல மாட்டேன். நீங்க கிளாஸ் முடிச்சோண்ண தான்.'

'நீ என்ன எழுதினேன்னு சொல்ல வேண்டாம் என்கிட்ட. யாருக்கு கடுதாசி எழுதின அப்படின்னு சொல்லணும் இப்பவே. அப்பத்தான் க்ளாஸ்.'

'அது ஒண்ணும் இல்ல மாமா. நான் மறக்காமல் இருக்கறதுக்கு என் சந்தேகங்கள குறிச்சி வைச்சிண்டேன்.'

'அப்படியா. என்ன சந்தேகம் சொல்லு. உன்னோட குறிப்ப பார்த்துண்டே கூட சொல்லலாம்.'

'நீங்க கையால காலால மனசால பேச்சால ... அப்படின்னு தினுசு தினுசா நாம பாவம் செய்யதா சொன்னேள் இல்லையா. அது எப்படி? விளக்கமா சொல்ல முடியுமா உங்களால?'

ஓ.. தாராளமா சொல்லலாமே. ஒவ்வொண்ணுக்கும் உதாரணம் சொன்னா போருமோன்னோ?'

'போதும்னு தான் நினைக்கிறேன் இப்ப சப்திக்கு.'

'சரி முதல்ல மனஸ எடுத்துக்கறேன். பொதுவா மனசு எண்ணங்களத்தானே கொடுக்கறது. ஒருத்தனோட எண்ணம் அல்லது சிந்தனை நன்னா இருந்தா அவனுக்கு நல்ல மனசு அப்படின்னு சொல்லுவோமோன்னோ? குறிப்பா நீ ஒருத்தன் மேல கோபமா இருக்கிற சமயத்தில அவன் என்ன அடிச்சிட்டான், அவன் பரிட்சையில் ஃபெயிலாகணும்னு நினைச்சிட்டாலே அது உன்னோட பாப கணக்குல சேர்ந்துடறது. அதனால கூடிய வரைக்கும் நாம யாரையும் மனசால சபிக்க கூடாது.'

'ஏன் மாமா. அவன் என்ன அடிச்சதால தானே நான் சாபமிட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு?'

'அவன் உன்ன அடிச்சான். அடிச்சதுக்குண்டான பாவம் அவனுக்கு சேரும். அதுக்காக நீ அவன சபிச்சா அதுக்குண்டான பாவம் உனக்கும் வரும். எதிர்மறையா நீ அவன் சபிக்காம பகவான் கிட்ட விட்டுட்டு போறது தான் நல்லது.'

'எனக்கு என்னவோ இது பிராக்டிகலா சரியா வருமா அப்படிங்கிறது டவுட்டா இருக்கு மாமா.'

'நீ சொல்றது கூட சரிதான். அதுக்காகத்தான் இந்த பிராஸன மந்திரத்துல மனசால அறியாம செஞ்ச பாவங்களையும் சேர்த்து க்ஷமிக்க சொல்றோம்.'

'ஏத்துப்பாரா மாமா பகவான்?'

'ஏத்துப்பார் அப்படிங்கிற நம்பிக்கை இருக்கிறதால தானே விண்ணப்பங்கள வைக்கிறோம் இல்லையா?'

'இது மாதிரியே கையால ஒருத்தர அடிக்கிறது காலால ஒருத்தர ஒதைக்கறது இதெல்லாமும் பாவக் கணக்குல சேர்ந்துடும். வயிற பொருத்தவரைக்கும் கண்ட கண்ட நேரங்கள்ல சாப்பிடறது நாம சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிடறது .... இதெல்லாம் கூட பாவங்கள் அப்படின்னு சாஸ்திரங்கள் சொல்றது. அதனாலதான் இந்த வயிற்றையும் இந்த லிஸ்ட்ல சேர்த்திருக்கா. ஏன், நம்மளோட அந்தரங்க உறுப்பால கூட பாவங்கள மனுஷா செஞ்சுடறதால அதைவும் இந்த மந்திரத்தில சேர்க்கப்பட்டிருக்கு.'

'புரிஞ்சுது மாமா. பாவங்கள் என்ன செஞ்சாலும் பகவான் இருக்கார் பாவத்தைப் போக்க. இல்லையா?'

'ஏய் படவா. பகவான் காப்பாத்துவார்னு தெரிஞ்சே தப்பு செஞ்சுண்டே போனா மன்னிப்பு கொடுக்க மாட்டார். மண்டைல இரண்டு போடுவார். நம்மள அறியாம யதார்த்தத்தில தப்பு செஞ்சிட்டு பின்னாடி ரியலைஸ் பண்ணும்போது பகவான சேர்த்துண்டு பிரார்த்தனை பண்ணனும். புரிஞ்சுதா?'

சிரித்துக்கொண்டே, 'புரிஞ்சது மாமா. சும்மா உங்ககிட்ட சித்த விளையாடினேன்.'

'நேக்கும் தெரியுமாக்கும் இது. நம்ம பாஸு எப்படிப்பட்டவன்னு நேக்கு தெரியாம இருக்குமா?'

இருவருமே சிரிக்கிறோம் இப்போது.

'சரிடா பாஸு. மேலோட்டமா நான் சொன்ன மந்திர விளக்கம் நோக்கு புரியலன்னா பதம் பிரிச்சு வேணா சொல்லட்டுமா?'

'எனக்கும் பதம் பிரிச்சு தெரிஞ்சுண்டா நல்லதுன்னு தான் தோணறது மாமா.'

'சரி பார்த்துடுவோம். நானே ஒரு தடவை இந்த பிராஸன மந்திரத்த இப்ப சொல்றேன். நீயும் ஃபாலோ பண்ணு.'

'ஸூர்யஸ்ச்ச
மாமன்யுஸ்ச்ச 
மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய:

பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம்

மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்னா

ராத்ரிஸ் ஸ்தவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா'

'இதுதானே ப்ராஸன மந்திரம்? இப்ப நான் உனக்கு இந்த மந்திரத்தை பதம் பிரிச்சு அர்த்தத்தை சொல்லப்போறேன். கவனமா கேட்டுக்கோ.'

ஸூர்யஸ்ச்ச : அனைத்தையும் இயக்குகிற சூரியனும்

மாமன்யுஸ்ச்ச: அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும்

மந்யு பதயஸ்ச்ச: கோபத்தை கையாளும் தெய்வ சக்திகளும்

மன்யுக்ருதேப்ய: கோபத்தால் செய்யப்பட்ட

பாபேப்யோ ரக்ஷந்தாம் :: பாவங்களிலிருந்து காப்பாற்றட்டும்

ராத்ர்யா : இரவில்

மனஸா: மனத்தாலும்
வாசா: வாக்காலும் ஹஸ்தாப்யாம்: கைகளாலும் பத்ப்யாம்: கால்களாலும் உதரேண: வயிறாலும் 
சிஸ்னா: ஆண் குறியாலும்

யத் :: எந்த
பாபம் :: பாவத்தை
அகார்ஷம் :: செய்தேனோ
கிஞ்ச :: இன்னும்
மயி :: என்னிடத்தில்
யத் :: எந்த
துரிதம் :: பாவம் உண்டோ
தத் :: அதையும்
ராத்ரி: இரவின் அதிதேவதை
அவலும்பது :: நீக்கி அருள வேண்டும்

இதம் மாம் :: இப்படி பாவம் நீக்கிய என்னை

அஹம் :. நான்

அமிர்தயோநௌ : மோட்சத்திற்கு காரணமாகிய

ஸுர்யே ஜ்யோதிஷி :: சூரிய வடிவான பரஞ்சோதியில்

ஜுஹோமி :: ஹோமம் செய்கிறேன்

ஸ்வாஹா :: இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

'இதுதாண்டா பதம் பிரிச்சு பார்த்தாக்க கெடைக்கிற அர்த்தம். செய்யுள்லேந்து பதம் இருக்கும் போது ஒண்ணு ரெண்டு பதங்கள் முன்ன பின்ன வரும். ஆர்டரா வரணுங்கர அவசியமில்ல. தமிழ் செய்யுள்கள பதம் பிரிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கும் போது கூட இப்படி முன்ன பின்ன வருமோன்னோ?'

'நான் பூஜைக்கு முன்னாடி நான் நோக்கு சொன்ன பொருள் பதம் பிரிச்சு சொன்னபோதும் வந்ததோண்ணோ?'

என் மனம் முழுவதும் இப்போது மின்சாரம் பாய்ந்த ஒரு உணர்வு. எப்படி எல்லாம் மந்திரத்தை வெச்சிருக்கா? என்னையும் மீறி வந்த ஓரிரு சொட்டு கண்ணீர் துளிகள்.

'இந்தப் ப்ராஸன மந்திரம் எப்படி பாஸு இப்ப நோக்கு?'

'வார்த்தைகளே வரமாட்டேங்கறது மாமா. இப்பவே சமஸ்கிருதம் கத்துக்கணும்னு தோண்றது.'

'கண்டிப்பா தோணும். தோணனும். எப்ப கத்துக்கணும்னு தோண ஆரம்பிச்சுடுத்தோ நேரமெல்லாம் கூடி வரும்போது தானா கத்துக்க ஆரம்பிச்சுடுவ.'

'ரொம்ப தேங்க்ஸ் மாமா. எனக்குள்ளே இருந்து நானே வெளிப்படற மாதிரி இருக்கு. ஒண்ணுமே சொல்ல தெரியல மாமா.'

'மேற்கொண்டு பாடம் வேண்டாம். இன்னிக்கு முழுதும் இதே மாதிரி உணர்வோட சுகப்பட்டுண்டு இரு. ஈஸ்வரன் உன்ன ரக்ஷிப்பார்.'

நமஸ்கரிக்கிறேன் அவர் பாதங்களை தொட்டு. இன்றைக்கு என்னமோ சற்று கூடுதல் நேரம் பிடித்தது அவர் பாதங்களிலிருந்து என் கைகளை விலக்கிக் கொள்ள. ஏதோ என்னிடமிருந்த அத்தனை பாவங்களும் விலகிய ஒரு உணர்வு.

'அபிவாதயே...' ஆரம்பிக்கிறேன். இன்று என்றுமில்லாமல் அக்ஷரப் பிழைகள் சொல்லும்போது. என் ஃபோக்கஸ் முழுவதும் ப்ராசனம் மந்திரத்தில் லயித்திருந்தது தான் காரணமோ ஒருவேளை!

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 13

பகுதி 13

மடத்தின் வாசல் கதவு திறந்து இருந்தது. உள்ளே நுழைகிறேன். ஆனால் மடத்துக்குள் ஆசான் இல்லை. தோட்டத்து கதவு திறந்திருந்தது.

'அங்குதான் போயிருக்க வேண்டும்?'

'வாடா பாஸு. இப்பதான் வரியா?'

'ஆமாம் மாமா'

'கார்த்தால ஏதாவது சாப்பிட்டு வந்தியா?'

'அம்மாவுக்கு இன்னைக்கு ஒத்தை தெருவுல வேலை இருக்காம். அதனால கஞ்சிதான் வெச்சிருந்தா. மத்தியான சாப்பாட்டுக்கு நான் ஒத்த தெருவுக்கு வரணுமாம். நான் போகப் போகறதில்ல. போர் மாமா. அவ்வளவு தூரம் யார் போவா?'

'நீ வரலைன்னா அம்மா கவலைப்பட மாட்டாளா?'

'அம்மா வேலைக்கு போகறதும் நானும் அங்கு சாப்பாட போறதும் எனக்கு சுத்தமா புடிக்கவே இல்லை.'

'புரியிறதுடா ஒன்னோட கஷ்டம். கொஞ்ச நாள் தான. நீ நன்னா படிச்சு நல்ல உத்தியோகத்தில உக்காந்துட்டா எல்லாம் சரியாப் போகும்.'

'எனக்கு இன்னிக்கு மனசே சரியில்ல மாமா. என் பிரெண்டு வீட்டுக்கே சாப்பாட்டுக்கு போறது எனக்கு பிடிக்கவே இல்ல.'

'சரி வருத்தப்படாத. சந்தியாவந்தன க்ளாஸ் முடிஞ்சோண்ண நாம ரெண்டு பேரும் எங்காத்துக்கு போய் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம். சரியா?'

சரி என்று சொல்லவில்லை. ஆசை மட்டும் வந்து போனது.

பூக்களை பறித்துவிட்டு பூக்கூடைகளோடு மடத்திற்குள் வருகிறோம். பறித்த செம்பருத்திகளையும் செவ்வந்திகளையும் அங்குள்ள சுவாமி படங்களுக்கு வைக்கிறோம்.

பவளமல்லி, நந்தியாவட்டை, பன்னீர் மற்றும் சங்குப் பூக்களை அர்ச்சனைக்காக தனியாக வைக்கிறேன்.

'உங்களோட நித்திய பூஜை முடிஞ்சோண்ணதானே நம்ம கிளாஸ்?'

'இன்னைக்கு ப்ராஸனம் மட்டும் தான சொல்லித்தரப்போறேன். அத முடிச்சுட்டே பூஜய ஆரம்பிக்கிறேன். நீ இன்னிக்கு கோபமா வேற இருக்கியே?'

'அதெல்லாம் இல்ல மாமா.'

சொல்லும்போதே என் வருத்தம் என் கோபத்தையும் சேர்த்தே அவருக்கு காண்பித்திருக்க வேண்டும்.

'சரி பாஸு. ஆசனங்கள ரெடி பண்ணு. ஆரம்பிச்சுடலாம்.'

அவர் அமரும் பலகை சத்தத்தோடு தரையில் உட்காருகிறது. அந்த சத்தம் உணர்த்திய என் கோபம் அவருக்கு லேசான சிரிப்பை கொடுத்தது.

ஃபாஸ்டாக அவருக்கு நமஸ்காரம். ஜெட் ஸ்பீடில் அபிவாதயே. பிறகு சட்டென்று என் இருக்கையான கோரைப் பாயில் உட்காருகிறேன்.

'எதுக்கு இவ்வளவு அம்மா மேல இன்னமும் கோபம் ஒரு சின்ன விஷயத்துக்குப் போய்? கோபத்தோடு இருந்தா எப்படி பாடங்கள் புரியும்? வேணும்னா நாளைக்கு கிளாஸ் வெச்சிக்கட்டுமா?'

'வேண்டாம் மாமா. நீங்க ஆரம்பிங்கோ. நான் கவனமா கேட்கறேன்.'

'சரி. ப்ராஸனம் அப்படின்னா என்ன தெரியுமா?'

பதில் என்னிடம் இல்லை என்பது அவருக்குப் புரிந்து அவரே தொடர்கிறார்.

'ப்ராஸனம் அப்படின்னா தமிழ்ல உட்கொள்ளுதல்னு அர்த்தம். ப்ராஸனம் செய்யும் போது என்ன சாப்பிடப்போறோம்?'

'தீர்த்தத்தை தான சாப்பிட போறோம் மாமா? சந்தியாவந்தனம் பண்ணும்போது மந்திரத்தை சொல்லி தீர்த்தத்தை சாப்பிடறதுக்கு பேர்தான் பிராஸனமா மாமா?'

'அதே தான். ப்ராஸனத்துக்கான மந்திரத்த சொல்லிட்டு ஜலத்த உட்கொள்ளுவது அப்படிங்கறது ப்ராஸனம் தலைப்பில வர்ரது.  

'இந்தப் பிராஸனம் அப்படிங்கற வார்த்தை வேற எதுல வருதுன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்தி சொல்லு பாப்போம்?'

யோசிக்கிறேன். என் யோசனை அவரைச் சற்று மௌனமாக வைத்திருக்கிறது.

'எஸ் மாமா. இப்போ ஞாபகம் வந்துடுத்து மாமா. அன்னப்பிராஸனம்?'

'கெட்டிகாரண்டா நீ. சட்டுன்னு புடிச்சுட்டியே? அன்னத்தை உட்கொள்வதால் அன்னப்பிராஸனம். குழந்தைக்கு முதல் முதல்ல அன்னத்தை ஊட்டுகிற வைபவத்திற்கு பேரு அன்னப்பிராசனம். முதல் முதல்ல அந்த குழந்தை அன்னத்தை உட்கொள்ளும் போது அதுக்கு எதுவும் கெடுதி வந்துடக் கூடாதுன்னு பகவான பிரார்த்திச்சிண்டு மந்திரங்கள சொல்லிண்டே ஊட்டறாளோன்னோ?'

'அதே மாதிரி வாத்தியார்கள் எல்லாம் ஜபம் சொல்லிட்டு கலச தீர்த்தத்தை பூஜையில கலந்துண்டவாளுக்கு உத்தரணியால கொடுக்கும்போது சில மந்திரங்களை சொல்லிண்டே கொடுக்கறத கூட நீ பார்த்திருப்பியே? 'அகால ம்ருத்யு ஹரணம் (1), ஸர்வ வ்யாதீ நிவாரணம் (2), சமஸ்த பாப சமனம்(3) - மந்த்ர பூதோதக ப்ராஸனம் சுபம்'

'பிராஸனம் அப்படிங்கிற வார்த்தை இங்க கூட வர்ரது பார். இதிலேந்து ப்ராஸனம்னா உட்கொள்வது அப்படின்னு புரிஞ்சிக்க முடியறதோல்யோ?'

'இதுலேந்து இன்னொண்ணையும் தெரிஞ்சுக்கிறோம். நாம எத ப்ராஸனம் பண்ணினாலும் பகவானை பிரார்த்திச்சுண்டு மந்திரங்களை உச்சரிச்சிண்டு சாப்பிடும்போது நம்மளோட பாபங்களை போக்கி ப்ராஸனம் பண்ற அந்த வஸ்து நம்ம உடலையும் மனசையும் சுத்தப்படுத்தறது அப்படின்னும் புரிஞ்சுக்கணும்.'

'இப்ப நாம சந்தியாவந்தனத்தில வர ப்ராஸன மந்திரத்துக்கு உள்ளேயும் மந்திரத்தினுடைய அர்த்தங்களுக்கு உள்ளேயும் போகலாமா? எங்கே உன் வாயால சொல்லு ஒரு தடவ ப்ராசன மந்திரத்த? நேர ஜம்முனு உக்காந்து கணீர்னு சொல்லணும் என்ன?'

'கார்த்தால சொல்ற மந்திரமா மத்தியான்னிகம் போது சொல்றதயா இல்ல சாயந்திரம் சொல்வதயா மாமா?'

'அப்படி போடு. எங்க பாஸுன்னா பாஸு தான். நீ இந்த கேள்வி கேட்டதால மூணு சந்தியாவந்தன வேளைகள்லயும் இந்தப் பிராசன மந்திரம் வித்தியாசப்படறது அப்படிங்கிறது நோக்கு நன்னா புரிஞ்சுருக்குன்னு அர்த்தமாகிறது. சபாஷ். சரி, கார்த்தால சந்தி பண்ணும்போது சொல்ற ப்ராசன மந்திரத்தையே சொல்லு பாப்போம். அதுக்கப்புறம் மத்த ரெண்டு வேளைகள்ல சொல்றத எடுத்துக்கலாம்.'

முதுகை நேராக்கி மார்பை விசாலமாக்கி மந்திரத்தை சொல்கிறேன்.

'ஸூர்யஸ்ச்ச
மாமன்யுஸ்ச்ச 
மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய:

பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம்

மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்னா

ராத்ரிஸ் ஸ்தவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா'

'பிரமாதம் பாஸு. மந்திரத்துக்கான அர்த்தம் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயம் உனக்கு சொல்றேன். கேட்டுக்கோ.'

'மனுஷாளோட கஷ்டங்களுக்கு காரணங்களா ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு கோபம். இன்னொண்ணு நாம செய்யற பாவங்கள். என்னதான் ஜாக்கிரதையா இருக்கணும்னு நெனச்சாலும் கோபத்தை சில சமயம் தவிர்க்க முடியாம போயிடறது. அதே மாதிரி நம்மளையும் அறியாம பாவங்களை சேர்த்துண்டே போயிடறோம். மூட்டை மூட்டையா பாவங்கள சேர்த்துண்டே போனா ஒரு கட்டத்துல நமக்கு அந்த பாரம் ஜாஸ்தியாகி சுமக்க முடியாம கஷ்டங்களை கொடுத்துடறது. அதுலயும் நாம செய்யற சில பாவங்களை நாமளே பாவங்களா ஏத்துக்க வேற மாட்டேங்கறோம் இல்லையா?'

'இதுக்கு என்ன தீர்வு? பகவான் கிட்ட ஆத்மார்த்தமா வேண்டிண்டு அப்பைக்கப்ப நம்ம பாபங்கள போக்கிக்க முயற்சிக்கணும். நாம தெரிஞ்சே செய்யற பாவங்களை உன்னிப்பா கவனிச்சா அவைகள் நம்மளோட மனசாலையோ பேச்சாலயோ கைகளாலேயோ கால்களாலேயோ வயிறாலேயோ இல்ல நம்மளோட அந்தரங்க உறுப்பாலயோ தான் நடக்கறது. யோசிச்சு பார்த்தா உனக்கே இது நன்னா புரிபடும்.'

'நீ இப்ப சித்த முன்னாடி சொன்னியே பிராஸன மந்திரம் .... ஸுர்யஸ்ச மாமன்யஸ்ச... அப்படின்னு ஆரம்பிச்ச மந்திரம்.... நான் கூட சொன்னேனே இது பிராஸன மந்திரம்னு.... அந்தப் பிரார்த்தனை மந்திரத்தோட முழு அர்த்தமும் நான் சொன்ன விஷயங்கள் தான்.'

'என் கோபத்தால செஞ்ச பாவங்களையும், நான் மனசால வாக்கால கையால காலால வயிறால அந்தரங்க உறுப்பால செஞ்ச பாவங்கள் அனைத்தையும் சூரிய தேவரான நீங்கள் அவைகளை பஸ்பமாக்கி என்னை ரக்ஷிக்க வேண்டும்.'

'என்ன அழகான பாவமன்னிப்பு கேட்கிற மந்திரமா இருக்கு பாரு? மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்யும் போது இந்த மந்திரத்தையும் சேர்த்து சொல்வதால சூரிய பகவானோட கருணை நம்ம மேல விழுந்து நம்முடைய பாவங்கள் அவ்வப்போது களையப்படறதா புரிஞ்சிக்கணும்.'

'இந்த மந்திரத்தில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா இது ஒரு ஹோம மந்திரமாகவே வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். ஒரு ஹோமத்துல தீயவைகளை நெருப்பிலிட்டு பஸ்பமாக்கி நல்லவைகள் தோன்றுவதற்காக பிரார்த்தனை பண்றது மாதிரியே மந்திரம் சொல்லி நான நம்ம உடம்புக்குள்ள தீர்த்தத்தை உள்வாங்கி குறித்து மனசைக் தூய்மையா வெச்சிக்கறோம்.'

'இதோட கொஞ்சம் நிறுத்திப்போம். நாம பறிச்ச பூவெல்லாம் வாடி போயிடறதுக்கு முன்னாடி அர்ச்சனை பண்ணிட்டு வந்துடட்டுமா? நீ வேணா தோட்டத்துக்கு போயி செடிகளோட விளையாடிண்டு இருக்கியா?'

தொடரும்...

மனதோடுயாகம் - பகுதி 12

பகுதி 12

மடத்திற்கு அன்று நான் வந்தபோது ரகு சாஸ்திரிகள் கொஞ்சம் பிஸியாக இருந்தார்.

'பிஸியா மாமா?'

'அதெல்லாம் ஒண்ணுமில்லடா.  நாளைக்கு அமாவாசையோன்னோ.  அதான் பவித்ரங்களும் கூர்ச்சங்களும் கொஞ்சம் பண்ணிண்டு இருக்கேன்.'

'மாமா இந்த தர்ப பவித்ரம் கூர்ச்சம் இதெல்லாம் எதுக்கு,  எந்த மாதிரி அர்த்தம்லாம் கொடுக்கறது அப்படிங்கற தெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசை.  ஒவ்வொரு தடவையும் அமாவாஸ்ய தர்ப்பணம் பண்ணும் போது உங்ககிட்ட இதப்பத்தி கேட்கணும்னு தோணும்.'

'ஓ.  தர்ப்பய பத்தி பேச ஆரம்பிச்சா ஒரு பெரிய லெக்சரே கொடுக்கலாம்.  இன்னொரு நாள் சாவகாசமா இதை பத்தி பேசலாம்.  இருந்தாலும் கேட்டேங்கரதுக்காக ஒரு சில விஷயம் சொல்றேன்.'

'தர்ப்பைப் புல்லுக்கு இன்னொரு பேரு குசா.  ஸ்ரீ ராமனுடைய இரண்டு கொழந்தைகள் லவ, குசா இல்லையா?  அதுல ரெண்டாவது கொழந்தை பேர இந்த தர்ப்பைப் புல்லுக்கு வெச்சிருக்கா.'

'இந்த தர்ப்பை புல்லுக்கட்டை கீழ தரையில வைக்கறச்ச வடக்கு தெற்காக தான் வைக்கணும்.  நார்த் ப்போல் ஸவுத் ப்போல்னு சொல்வாளே.  அந்த மாதிரி.  அதுலயும் குறிப்பா தர்ப்பைப்புல் நுனிகள் வடக்க பார்த்துத்தான் இருக்கணும்.'

'பொதுவா  இந்த தர்ப்பைப் புல்கள் தீய சக்தியை அழிக்க கூடிய சக்தி படைச்சது.  நீ கூட பார்த்திருப்பியே.  கிரகண காலங்கள்ல சாப்பிடற பொருட்கள்ல தர்ப்பைகள கிள்ளி கிள்ளி போட்டு வைப்பாளே.   அதெல்லாம் இந்த அர்த்தத்திலதான்.'

'தர்பைகள நம்ம கால்ல படாம வெச்சுக்கணும்.  ஒருவேளை காலுல பட்டுடுத்துன்னா அந்த தர்பைகள யூஸ் பண்ண கூடாது.'

'பூஜைகள் பண்ணும்போதும் அமாவாசை மாதிரியான கர்மா காரியங்கள் பண்ணும் போதும் பவித்ரத்தை போட்டுண்டு தான் பண்ணனும்.  ஏன்னா இந்த தர்பைகளுக்கு தடைகளை எதிர்க்கிற அசாத்திய சக்தி இருக்கு.'

'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு மாமா.  கண்டிப்பா இன்னொரு நாள் இதப்பத்தி எனக்கு நீங்க சொல்லி கொடுக்கணும்.  சொல்லித் தரலைன்னா இந்த மடத்து பக்கமே வரமாட்டேன்.'

'இப்படி சொன்னா நான் பயந்துடுவேனாக்கும்?  உன்னை எப்படி இங்க வேற வரவழைக்கறதுன்னு எனக்கு தெரியும்.  புதுசா வெச்ச ரெண்டு செடியில பூ பூத்திருக்குன்னு  சொன்னா வச்சுக்கோ, நாலு கால் பாய்ச்சல்ல ஓடி வந்துடப் போற.  எனக்கா தெரியாது?'

ஒரே சிரிப்பு எங்கள் இருவரிடத்திலும்.

'சரி பாஸு.  வேல முடிஞ்சுடுத்து.   நீ ஆசனங்கள ரெடி பண்ணு.  ஆரம்பிச்சுடலாம் கிளாஸ. இன்னிக்கி மார்ஜனம் தான சொல்லித் தரணும்?'

'ஆபோஹிஷ்டா அப்படின்னு ஆரம்பிக்கிற மந்திரம் தானே மார்ஜனம்?'

'அதே தான் டா'

கிழக்கும் மேற்குமாக ஆசனங்கள் வழக்கம்போல.  அவர் பலகையில் நான் ப்பாயில் அமர்கிறேன்.  பிறகு ஆரம்ப நமஸ்காரம் ஆசீர்வாத பரிமாற்றங்கள்.

'ரெண்டு நாள் முன்னாடி மார்ஜனம் பத்தி ஏதோ சொன்னேனே, ஞாபகம் இருக்கா நோக்கு?'

'இருக்கு மாமா.  அஞ்சு தினுசு ஸ்நாங்களை பத்தி சொல்லிட்டு மார்ஜனம் கூட அதுல ஒரு வகை அப்படின்னு சொன்னேள்.'

'அந்த அஞ்சு தினுஸு ஸ்நானங்கள்ல மார்ஜனம் எந்த தினுஸுக்கு கீழ வருதுன்னு சொன்னேனோ?'

'ஓ.  ஞாபகம் இருக்கு மாமா.  சாதாரணமா ஆறு குளங்கள் கிணத்தடி இப்படி எல்லாம் குளிக்கிறது ஒரு வகை அப்படின்னேள்.  அப்புறம் விபூதி ஸ்னானம், பசுமாடுகள் நடக்கும்போது ஏற்படுற புழுதிகள்ல ஸ்நானம், அப்புறம் வெயில் அடிச்சிண்டிருக்கும்போது பெய்யற மழையில குளிக்கிறது... ஏதோ திவ்ய ஸ்நானம்னு சொன்னேள்.  அப்புறம் கடைசியா மந்திரத்தை ஜெபித்து உரு ஏத்தின ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்யறதும் ஒருவகை ஸ்நானம் அப்படின்னு முடிச்சேள்.  அதைக்கூட நீங்க ஏதோ பிரம்மஸ்நானம்னு சொன்னதா ஞாபகம்.  அந்த பிரம்மஸ்நானம் டைப்ல தான் இந்த மார்ஜனமும் வரும் அப்படின்னு சொன்னேள்.'

'பேஷ் பேஷ்.  நோக்கு ஞாபக சக்தி ரொம்ப ஜாஸ்தி இருக்கும் போல இருக்கே.'

'நீங்க சொல்லிக் கொடுத்த விதத்துல நன்னா மனசுல பதிஞ்சு போயிருக்கு மாமா.'

'ரொம்ப சாமர்த்தியமாக தான் சொல்ற.  சரி, இப்ப அந்த மார்ஜன மந்திரத்த என் காதுபட ஸ்பஷ்டமா கணீர்னு சொல்லு பார்ப்போம்?'

உடம்பை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டு  முதுகை நேராக வைத்துக்கொண்டு கணீர் குரலில் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

'ஆபோஹிஷ்டா 
மயோ புவஹ
தாந ஊர்ஜே ததாதன
மஹேரணாய சக்ஷஸே
யோவஹ சிவதமோ ரஸஹ
தஸ்ய பாஜயதேஹ நஹ
உசதீரிவ மாதரஹ
தஸ்மா அரங் கமாம வஹ
யஸ்ய க்ஷயாய ஜின்வத
ஆபோ ஜனயதா ச ந
ஓம் பூர்ப் புவஸ் ஸுவஹ'

'குட்.  இந்த மார்ஜன மந்திரத்தை ஜபித்துண்டே ஜலத்த ப்ரோக்ஷித்து கொள்ளணும். அப்படித்தானே பண்ணுவ?'

'ஆமா மாமா.  கடைசில சொல்ற மந்திரத்தின் போது இரண்டு பாதங்களையும் ஜலத்தால தொட்டுட்டு கடைசியில மறுபடியும் ஒரு தடவை தலையில ப்ரோக்ஷிக்கணும்னு சொல்லியிருக்கேள்.  கடைசியா ஓம் பூர் புவ ஸ்வஹ அப்படின்னு சொல்லும்போது நம்ம தலையைச் சுத்தி தீர்த்தத்த எடுத்துட்டு போகணும் அப்படின்னும் கத்துக் கொடுத்திருக்கேள்.'

'அதே தான் டா.  மந்திரம் ஜபிக்காமல் ஜலத்தை மாத்திரம் ப்ரோக்ஷித்து கொண்டாலும், மந்திரம் ஜபித்துக்கொண்டு ஜலம் தலையில் படாமலேயே ப்ரோக்ஷித்து கொள்வது போல் கையை அசைத்தாலும் பலன் தராது.  இதையும் நீ ஞாபகத்துல நன்னா வெச்சுக்கணும்.  சரி, இப்ப இந்த மந்திரத்தோடு அர்த்தத்துக்குள்ள போவோமா?'

'சமஸ்கிருதத்தில 'ஆபஹ' அப்படின்னு சொன்னா ஜல தேவதையே குறிக்கும்.  அப்படின்னா நோக்கு என்ன புரிகிறது?  இந்த மந்திரமானது ஜல தேவதைய பிரார்த்திச்சிண்டு சொல்லுகிற மந்திரம்.'

'இந்த மார்ஜனம் மந்திரத்தை உச்சரிக்கறதுக்கு முன்னாடி ஓம் அப்படின்னு சொல்லிண்டு பவித்ர விரலால உத்தரணி ஜலத்த தொட்டு கேசவாய நமஹ அப்படின்னு சொல்லிண்டே நம்மளோட புருவத்தோட மத்தியில தொடணும்.  ஜலத்துக்கு கூட ஓம்காரம் பிரதானம் இல்லையா?'

'பதம் பிரிச்சு சொல்றத விட நோக்கு இந்த மந்திரத்தோட முழுப் பொருளையும் சொல்றேன்.'

'லோககத்துக்கு சுகத்தை தருவதற்காக முதலில் ஜலம் படைக்கபட்டது. ஸ்நான பானாதிகளாலும், பயிரை வ்ருத்தி செஞ்சு அன்னத்தையும் மற்ற ரஸங்களையும் தருவதாலும் இந்த ஜல தேவதை நமக்கு இன்பமூட்டுகிறவள்.'

குழந்தைகள் செய்யும் தப்பை எல்லாம் மன்னிச்சு ஒரு தாய், தான் உண்ணாமல் கூட உயர்ந்த ஸத்துள்ள பொருட்களை அளிப்பாள் இல்லையா?  அப்படிப்பட்ட தாய் போலுள்ள தீர்த்த தேவதையே எனக்கு அத்தகைய தாய் போல் அன்னாதிகளை தந்து இந்த உடலை காப்பாற்றவும்.'

ஸ்தூல உடலுக்குள் உள்ள ஸூக்ஷ்ம உடலுக்கு அறிவே உணவு.  அந்த உயர்ந்ததான ஞானத்தை எனக்கு அளியும். உமது அருளால் நான் பேரின்பம் அடைய வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கு ஜலம் அவசியமானது.  ஜலத்தின் ஸூக்ஷ்ம அம்சமே ப்ராணன்.'

மங்களகரமான ரஸத்தால் இவ்வுடலுக்கும் மிக மிக மங்களகரமான ரஸத்தால் ஜீவனுக்கும் நன்மை அளிக்கும்படி இந்த மந்திரத்தால் வேண்டுகிறோம்.'

'இதுதாண்டா அந்த மந்திரத்தோட அர்த்தம்.  என்னடா மந்திரம் சின்னதா இருக்கு இவர் என்னடான்னா ஒரு நீளமா அர்த்தம் சொல்றாரேன்னு பாத்தியா?  அக்ஷரம் அக்ஷரமா சொன்னா இவ்வளவு பெருசா இருக்காது. ஆனா நோக்கு புரிஞ்சிக்கிறதுல சிரமம் இருக்கலாம்.'

'சுருக்கமாக சொன்னா நமக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய நீரை ஜல தேவதையாக பாவித்து மந்திரங்களால் அவளோட மகிமையே போற்றி அவள் அனுக்ரஹம் வேண்டி பிரார்த்தனை செய்யறதுதான் இந்த மார்ஜனம்.'

'இந்த மந்திரத்தை சொல்லும்போது பிரயோகமும் முக்கியம்.  அதாவது ஓம் சொல்றது கேசவாய நமஹ சொல்றது ஜலத்தில பவித்ர விரல தொட்டுட்டு புருவத்தில பொட்டு வெச்சிக்கறது மந்திரத்தை ஜபிச்சிண்டே ப்ரோக்ஷணம் பண்ணிக்கிறது கடைசியா பாதங்களைத் தொட்டு பிறகு மறுபடியும் சிரசில் ப்ரோக்ஷிக்கிறது... இதெல்லாம் பிரயோகத்தில் அடக்கம்.  புரிஞ்சுதா?'

'இந்த மார்ஜன மந்திரத்த ஜலத்தில் நின்னுண்டு செய்யறச்சே உதாரணமா ஆத்தங்கரையில ஜலத்தில் இறங்கி செய்யும்போது உன்னோட இடதுகை ஜலத்தை தொட்டுண்டு இருக்கணும். வலது கை மோதிர விரலால ப்ரோக்ஷணம் நடக்கணும்.'

'சித்த நேரம் அமைதியா உக்காந்து நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் படுத்திக்கோ.  ஏதாவது உனக்கு சந்தேகம் வந்துதுன்னா தயக்கம் இல்லாம என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.'

அவர் சொன்ன விஷயங்களை கிரஹித்துக் கொண்டு சிறுது நேரம் அமைதி காக்கிறேன்.  

'நன்னா புரிஞ்சுது மாமா.  சந்தேகம் இருக்கிற மாதிரி எதுவும் இப்ப தோணல.'

'நல்லது பாஸு.  கிளம்பலாமா?  நாளைக்கு ப்ராஸனம் பத்தி சொல்லி கொடுக்கிறேன்.'

நமஸ்காரம் மீண்டும்.  எப்போதும் போல அவரிடமிருந்து ஆசீர்வாதம் பெறுகிறேன்.

தொடரும்

மனதோடுயாகம் - பகுதி 11

பகுதி 11

அவர் குறிப்பிட்டு சொன்ன நேரத்தில் மடத்திற்கு வருகிறேன். மடத்தின் வாசல் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

'மாமா இருக்கார். ஆனா பிசியா ஏதோ வேலை செஞ்சிண்டிருக்கார் மடத்துக்குள்ள' என்பது என் தீர்மானமாக இருந்தது. கதவை தட்டுவதற்கு முன் கரையை தொட்டுக்கொண்டு செல்லும் பாமணி ஆற்றை பார்க்க ஒரு விருப்பம். 

ஆற்றங்கரையில் இரு நாட்களுக்கு முன்புதான் தண்ணீர் வர துவங்கியிருந்தது. ஆற்று நீர் ஏற்படுத்தும் சலசலப்பும் சூரியனின் பிம்பம் ஆற்றில் விழுவதால் ஏற்படும் கண்ணைக் கூசும் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள். கண்களை சுருக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி நீரோட்டத்தை நான் ஏதோ தடுத்து நிறுத்துவது போல கைகளை வைக்கிறேன். சில்லென்று கைகள் பெற்ற குளிர்ச்சி. கைகளால் நீரோட்டத்தை தள்ளுகிறேன்.

'என்ன பண்ணிண்டு இருக்காய்? என்னடா பாஸுவை காணோம்னு பார்த்தா நீ இங்க விளையாடிண்டு இருக்கியாக்கும்.'

'இல்ல மாமா. வந்தேன். கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்தது. அதான் இங்க வந்து சித்த நேரம் ஆத்தாங்கரைய பார்த்துட்டு வரலாமுன்னு இருந்தேன்.'

'முந்தானாள் தானே தண்ணி வர ஆரம்பிச்சது. இன்னும் பத்துப் பதினைந்து நாளைக்கு ஜலத்தோட வேகம் கூடிண்டே இருக்குமோன்னோ. சின்ன பையன் இல்லையா நீ? தனியா இங்க வரலாமா?'

'மாமா எனக்குத்தான் நீச்சல் தெரியுமே'

'அதான் உன்ன நீச்சல் சாகசத்த பார்த்துட்டு திருப்பாற்கடல் தெருவே பயப்படறதே. நீச்சல் தெரிஞ்சு வெச்சிக்கறது நல்லதுதான். ஆனாலும் துணைக்கு பக்கத்துல யாரும் இல்லாம உன்னோடு சாகசத்தெல்லாம் காட்டக்கூடாது. சரியா? சரி மடத்துக்கு வா.'

படிக்கட்டில் உட்கார்ந்து இருந்த என்னை கைப்பற்றி அழைத்துச் செல்கிறார்.

'இன்னைக்கு உனக்கு சங்கல்பம் தானே சொல்லித் தரணும்?'

'ஆமா மாமா. பிராணாயாமம் முடிஞ்சு அதுதானே வரும்?'

'சரி. ஆரம்பிச்சுடலாம். அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி ஒன்ன கேட்கணும். உங்க பள்ளிக்கூடத்துல பிரேயர் போது உறுதிமொழி ஏதாவது எடுத்துப்பேளா?'

'ஓ எடுத்துப்போமே. ஆனா இங்கிலீஷ்ல தான் சொல்லுவோம்.'

'எங்க அத கொஞ்சம் உன் வாயால ஒரு தடவ இங்க சொல்லு பார்ப்போம். கேழ்கிறேனே நானும் தான்.'

'India is my country and all Indians are my brothers and sisters I love my country, and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give respect to my parents, teachers, and all the elders, and treat everyone with courtesy.'

'வெரி குட். ரொம்ப நன்னா சொல்றியே. இதுக்கெல்லாம் உனக்கு அர்த்தம் சொல்லி கொடுத்து இருக்காளா பள்ளிக்கூடத்துல?'

'சொல்லிக் கொடுத்திருக்கா மாமா. நான் வேணா உங்ககிட்ட இப்ப அர்த்தங்களை சொல்லட்டுமா?'

'வேணாம் வேணாம். உனக்கு அர்த்தம் தெரியுங்கறது எனக்கு புரிஞ்சு போச்சு. நான் இப்ப ஒரே ஒரு கேள்வி கேட்கப் போறேன். பயப்படாதே. இதே உறுதிமொழியிலேந்துதான்.'

ஆர்வம் என்னிடம் சற்று தலை தூக்குகிறது. 'என்ன கேள்வி கேட்பார்? அர்த்தம் கூட நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரே?'

'நீ பாரத தேசத்தில பொறந்தவன் தானே? நீ நம்ம நாட்ட நேசிக்கிறவன் தானே? எல்லார்கிட்டயும் அன்பா பழகுற வன் தானே? இதெல்லாம் இருந்தும் தினமும் ஏன் இந்த உறுதிமொழியை பள்ளிக்கூடத்துல சொல்லணும்? என்னிக்காவது இதைப்பத்தி யோசிச்சி இருக்கியா?'

இதுவரை நான் யோசித்ததில்லை. ப்ரேயர்ல சொல்லணும். அது மட்டும் தான் எனக்கு தெரியும். அவர் கேள்வியில் ஏதோ சூசகம் இருக்கிறது என்று புரிகிறது. கேட்டு விட்டாரே. அசட்டுத்தனமான பதிலாக இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்? தெரியலையே மாமா... இது கொஞ்சம் பெட்டராக இருக்குமோ?'

'எனக்குத் தெரியலையே மாமா. ஏன் மாமா டெய்லி சொல்ல வைக்கிறா ஸ்கூல்ல?'

'எந்த ஒரு செயலுக்கும் முன்னாடி உறுதிமொழி ஏத்துக்கறது அப்படிங்கிறது நம்பிக்கை சார்ந்த விஷயம். ஸ்கூல்ல படிக்க போறோம். பாடங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம பாரத தேசத்துக்காரா, நாம பாரத தேசத்தை ரொம்ப விரும்பறோம் சக மனிதர்களை சகோதர சகோதரிகளா பாவிக்கிறோம். உனக்காக படிக்கிறது அப்படிங்கறது ஒருபுறம் இருந்தாலும் இந்திய தேசத்துக்காக படிக்கிற அப்படிங்கிற உணர்வ கொடுத்துண்டு படிக்கணும். இதேபோலத்தான் மந்திரங்கள்ல வர ஸங்கல்ப போர்ஷணும்.'

'எந்த ஒரு செயல் தொடக்கத்துக்கும் ஸங்கல்பம் முக்கியம். பொதுவா ஸங்கல்பம்கிறது நம்பிக்கை சார்ந்த விஷயம். பலன்களை எதிர்பார்த்து சொல்லக்கூடிய மந்திரங்களுக்கு நம்பிக்கை ஆதாரமாக இருக்கு. இந்த நம்பிக்கைல ரெண்டு வகை உண்டு. தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கை. கொஞ்சம் ஆழமாக சிந்திச்சு பார்த்தோமானா தன்னம்பிக்கைதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை தான் தன்னம்பிக்கை. கடவுள நம்புறவா கிட்ட தன்னம்பிக்கையும் யதார்த்தமாகவே வந்துடும்'

'சில ஸங்கல்ப மந்திரங்கள் பூஜா பலன்கள விலாவாரியா சொல்லி இருக்கும். க்ஷேமம் தைரியம் வீரம் விஜயம் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்.... இப்படி எல்லாம் கிடைக்கும் அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வரும். நித்திய கர்மாவான சந்தியாவந்தனத்துல இந்த ஸங்கல்ப மந்திரம் ஒரு சின்ன உறுதிமொழி மாதிரிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

'மமோபாத்த-ஸமஸ்த-துரித க்ஷய-த்வாரா-ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராதஹ ஸந்தியாம் உபாஸிஷ்யே... இது கார்த்தால பண்றதுக்கு.

மத்தியானத்துக்கு 'மாத்யான்னிஹம் கரிஷ்யே

சாயரட்சை பண்ற சந்தியா வந்தனத்துக்கு 'ஸாயம் சந்த்யா உபாஸிஷ்யே' 

நம்மள மாதிரி இருக்கிற ஸ்மார்த்தாளுக்கும் வைஷ்ணவாளுக்கும் ஸங்கல்பம் சொல்லும்போது ஒரு சின்ன டிஃபரன்ஸ். நாம ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அப்படின்னு சொல்றோம். அவா ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம் அப்படின்னு சொல்வா. மத்தபடி மந்திரங்கள் ரெண்டு பேருக்குமே பொது தான்.'

'இப்ப அர்த்தத்துக்குள்ள போலாமா?'

'மம உபாத்த அப்படின்னா என்னால் அடையப்பட்ட

ஸமஸ்த துரித அப்படின்னா எல்லா பாவங்களையும்

க்ஷயத்வாரா அப்படின்னா நசுக்க செய்யறதுனால

பரமேஸ்வர ப்ரீத்யர்தம் அப்படின்னா பரமேஸ்வரன் அருளுக்கு பத்திரமாகும் பொருட்டு

ப்ராதஹ சந்தியாம் உபாஸிஷ்யே அப்படின்னா காலையில் சந்தியா தேவியை உபாஸிக்கிறேன்.'

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மத்தியானத்துக்கும் சாயந்திரம் சந்தியாவந்தனத்துக்கும் கொஞ்சம் மந்திரத்த மாத்தி அமச்சுக்கணும்.

'இந்த ஸங்கல்ப மந்திரத்த நன்னா உத்து கவனிச்சேயான்னா இது ஒரு நம்பிக்கையோடு ஏத்துக்கிற உறுதிமொழின்னு புரியறதோன்னோ?'

'உன் மனசுல நன்னா படியறதுக்காக சங்கல்ப மந்திரம் அர்த்தத்தை இன்னொரு தடவை சொல்றேன். கவனமா கேட்டுக்கோ.'

'நான் சேர்த்துண்ட பாவத்தை நசுக்கி பரமேஸ்வரன் அனுக்கிரகத்தை அடையறதுக்காக இந்த சந்தியாவந்தனத்த செய்யறேன். அதாவது சந்தியா தேவியை உபாஸிக்கிறேன். உபாஸிக்கிறேன் அப்படின்னு உச்சரிச்சாலும் பாவங்கள் நசுங்கும் அப்படிங்கிற நம்பிக்கையோட பின்னிப்பிணைஞ்ச உறுதிமொழியா இந்த ஸங்கல்பத்த புரிஞ்சுக்கோ.'

'சங்கல்பம் என்பது மனஸ விட விசாலமானது. எப்ப ஒருத்தன் ஸங்கல்ப்பிக்கிறானோ அவன் தெளிவா யோசிக்க ஆரம்பிக்கிறான். தீர்மானம் பண்றான். தீர்மானத்தை பேச ஆரம்பிக்கிறான். பேச்சு பெயர் வடிவம் எடுக்கறது. அப்படி எடுக்கறச்சே மந்திரங்கள் அதுக்குள்ள அடங்கறது. அந்த மந்திரங்கள்ல கருமங்கள் ஒடுங்கறது.'

'உறுதிமொழி எடுத்துண்டு செய்யப்படற செயல் ஒருத்தனுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து இறை அருளையும் அனுக்ரஹிக்க வைக்கறது.'

'நாம ஸங்கல்ப்பம் சொல்லிட்டு ஒரு செயலை செய்யறதால அந்த உறுதி மொழியிலேந்து மனம் கோணாமல் இருக்க பகவான் நம்மள ஜாக்கிரதையா பார்த்துக்கறார்.'

'நன்னா புரிஞ்சுண்டியா டா பாஸு?'

'சரி. இப்ப ரூல்ஸுக்கு போவோம். ஸ்கூல்ல உறுதிமொழி எடுத்துக்கறச்சே என்ன செய்யணும் அப்படின்னு வாத்தியார் சொல்லிக் கொடுத்திருப்பார் இல்லையா? வலது கையை நீட்டிண்டு விரல்கள உள்ளங்கைக்குள்ள மடக்கிண்டு உறுதிமொழி வாசகங்கள சொல்லணும் அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காளில்லையோ?'

'ஆமாம் ஆமா அப்படித்தான் உறுதிமொழியை சொல்லுவேன்.'

'அதே மாதிரியே ஸங்கல்பம் மந்திரம் செய்யும் போது இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது தொடை மீது வெச்சுண்டு ஸங்கல்ப மந்திரத்தை ப்ரயோகம் பண்ணனும்.'

'மார்ஜனம் பத்தி பாடம் அடுத்த கிளாஸ்ல வச்சுப்போமோ இல்லை இப்பவே சொல்லிக் கொடுக்கட்டுமா? இதை ஏன் கேட்கிறேன்னா இன்னிக்கு உன் கவனம் கிளாஸ்ல கொறவுதான். ஆத்தங்கர ஞாபகமாவே இருக்கோ?'

அவர் யூகித்தது சரிதான். 'என் மனசுல ஓடறத இவர் எப்படி சட்டுனு புரிஞ்சுக்கிறார்? நான் அவரையே தானே பார்த்துண்டு இருந்தேன் கிளாஸ்ல. எப்படி கண்டுபிடிச்சார்?'

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நான் அன்று கற்ற பாடமாக இருந்ததோ என்னவோ?

'மாமா நான் உங்களை இன்னிக்கி நமஸ்காரம் பண்ணவே இல்ல. இப்ப பண்ணட்டுமா?'

'போக்கிரி படவா. போதும் கிளாஸு நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறேன் அப்படின்னு சொல்ல வரயாக்கும்?'

சிரித்து விட்டேன் அவர் இப்படி என் மனதில் இருந்ததை போட்டு உடைத்ததில்.

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 10

பகுதி 10

'எழுதி முடிச்சுட்டியா பாஸு? மேற்கொண்டு பாடத்துக்குள்ள போலாமா?'

'நான் எழுதினத பார்க்கலையா நீங்க?'

'சாவகாசமா அப்புறம் பாத்துண்டா போச்சு. நீ சீரியஸா எழுதும்போது உன் பின்னாடி வந்து பார்த்தேன் நோக்கு தெரியாம. கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு. ரெண்டு வரி நோட்டு நிறைய எழுதுவ போல இருக்கு. உங்க அப்பா கையெழுத்தும் பிரமாதமா இருக்கும்.'

இப்படி சொன்னவர் சற்று அமைதியாகி விட்டார். என்னுடைய அப்பா சிந்தனைகள் அவருக்கு வருத்தத்தை கொடுத்திருக்க வேண்டும்.

'மாமா, மேற்கொண்டு சொல்லித்தரேன்னு சொன்னேளே?'

என்னுடைய திசைதிருப்பல் அவருக்கு எதார்த்தத்தை புரிய வைத்திருக்க வேண்டும்.

'ஓம் பூஹு ஓம் புவஹ ... ஓம் சத்யம் வரைக்கும் பார்த்தோமா. இப்ப மேற்கொண்டு சொல்லு பார்ப்போம்?'

சொல்லத் துவங்குகிறேன்.

'ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனா ப்ரசோதயாத்.. ஓமாபஹ.'

'இரு இரு இரு இரு சித்த இரு. பிரசோதயாத்.... அப்படிங்கறதோட நிறுத்திக்கோ.'

'ப்ரசோதயாத் வரைக்கும் கும்பகம். அதாவது மூச்ச இழுத்து பிடிக்கிற மந்திரம். இன்னொரு தடவை சொல்றேன். ஓம் பூ ஓம் புவ அப்படின்னு சொல்லிண்டே ஓம் சத்யம் சொல்ற வரைக்கும் மூச்ச இழுக்கணும். ஏற்கனவே விரல்களையெல்லாம் எப்படி வெச்சுக்கணும்னு சொல்லியிருக்கேன். அதையும் மறக்கக்கூடாது. இதுவரைக்கும் சொன்னது பூரகம். அதுக்கப்புறம் ஓம் தத்ஸவிதுர் அப்படின்னு தொடங்கி ப்ரசோதயாத் அப்படின்னு முடிக்கிற வரைக்கும் கும்பகம். அதாவது இழுத்துண்ட மூச்ச விடாம பிடிச்சு வெச்சிக்கிறதுக்காக சொல்லப்படற மந்திரம்.'

'இப்ப இந்த கும்பக மந்திரத்தோட அர்த்தத்தை பார்ப்போமா? உனக்கு சமஸ்கிருதம் அரிச்சுவடி பாடங்கள் தெரிஞ்சிருந்தா பதம் பிரிச்சுக் கூட சொல்லித் தருவேன். பரவால்ல. அதுக்காக கவலப்படாதே. மந்திரத்தோட பொருள மாத்திரம் மனசுக்குள்ள வாங்கிக்கோ. அதுவே போதும்.'

'ஓங்கார பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகள தூண்டராரோ அனைத்தையும் படைக்கிற அந்த பகவானுடைய மிகச்சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம்.'

'இதுதாண்டா அந்த கும்பகம் மந்திரம் போர்ஷனோட முழு அர்த்தம். மூச்ச நாம நிறுத்தி வைக்கிற அந்த சில நொடிகள் பகவான ஜோதி ஸ்வரூபமா நினைச்சுண்டு த்யானம் செய்யணும். இதுல ஒரு சூட்சமம் இருக்கு. சாதாரணமா நாமே மூச்சை உள்வாங்கி பிடிச்சு நிறுத்தி வைக்கும்போது நம்மளையும் அறியாம ஒரு அமைதி கிடைச்சுடும். இதையே பிராக்டீஸ் பண்ணப் பண்ண அந்த அமைதியே உன்ன ஒரு வெற்றிடத்துக்கு அதாவது சூனியத்திற்கு கொண்டுபோயி தெய்வ சிந்தனைய கொடுத்துடறது. அந்த சமயத்துல நீ இந்த அமைதியில இருக்கும் போது பகவான ஜோதி சொரூபமாக த்யானிக்கறபோது நீ சொல்ற மந்திரங்களோட உதவியால ஒரு வைப்ரேஷன் உடம்புக்கு கிடைக்கிறது. பண்ண பண்ண நீயே இத உணர ஆரம்பிச்சுடுவ.'

'அடுத்தது என்ன பாக்கி இருக்கு? என்ன செய்யப்போகறோம் சொல்லு பாப்போம்?'

'நிறுத்தின மூச்ச விடப் போறோம். இல்லையா மாமா?'

'அதேதான் பாஸு. ஆனா அவசர அவசரமா விடக்கூடாது. மெல்ல மெல்ல இழுத்துப் பிடிச்சு வெச்சிருந்த மூச்ச மொள்ள மொள்ள விடணும். அப்படி விடும்போது அடுத்தகட்ட மந்திரத்தை மனசோட சொல்லிண்டே விடணும்.'

'குறிப்பா சொல்லப்போனா இந்த மூச்ச இழுக்கறது, புடிச்சு வெச்சுக்கிறது அப்புறம் மெள்ள மெள்ள விடறது இது எல்லாத்துக்குமே டைமிங் இருக்கு. ஆரம்பத்துல இந்த டைமிங் ஸென்ஸோட நீ பிராக்டிஸ் பண்ண பிராக்டிஸ் பண்ண அதுவே உனக்கு யதார்த்தமா பழகிடும். அந்த டைமிங் பத்தி அப்புறம் சொல்றேன். முதல்ல அந்த ரேசக மந்திரத்தை சொல்லிப் பார்ப்போம்.'

'ஓம் ஆபஹ
ஜ்யோதி ரஸஹ
அம்ருதம் ப்ரஹ்ம
பூர்ப்-புவஸ் ஸுவ-ரோம்'

'இதுக்கு என்ன அர்த்தம்? ஓங்காரமே ஜலம், ஒளி, ரஸம் பொருந்திய அன்னத்தை கொடுக்கக்கூடிய பூமி, உயிருக்கு ஆதாரமான வாயு மற்றும் பரந்த ஆகாஸம். அது மாத்திரமல்ல நமக்குள்ள இருக்கக்கூடிய வியாக்ருதிகள் அதாவது மனம் புத்தி அஹங்காரம் எல்லா தத்துவத்திற்கும் ஓங்காரமே.'

'நான் சொல்லி கொடுத்த பொருள அதே ஆர்டர்ல மந்திரத்தை நீயே கூட‌ பதம் பிரிச்சு பார்த்து ஓரளவு புரிஞ்சிக்கலாம். ரொம்ப டெப்த்தா போய் மண்டய போட்டு கொழப்பிக்க வேண்டாம். மேலோட்டமா உனக்கு அத்தம் தெரிஞ்சா அதுவே போறும்.'

'சரி. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த பூரகம் கும்பகம் ரேசகம் இதுக்கெல்லாம் கால அளவு இருக்கு. அது ஆளாளுக்கு மூச்ச இழுக்குற பலத்தைப் பொருத்து இருக்கும். அதனால ஒரு ஜெனரல் ரூல அடிப்படையா வெச்சுக்கோ. அதாவது ஒரு பங்கு மூணு பங்கு இரண்டு பங்கு அளவுக்கு அந்த பூரகம் கும்பகம் ரேசகம் இருக்கட்டும். அதாவது பூரகம் செய்ய அதாவது மூச்சை இழுக்க அஞ்சு செகண்ட் ஆச்சுன்னா பதினஞ்சு செகண்ட் கும்பகத்துக்கும் பத்து செகண்ட் ரேஸகத்துக்குமா வெச்சிண்டு பிராக்டிஸ் பண்ணனும். கணக்குப் பாடத்துல விகிதாச்சாரத்தில சொல்றச்சே ஒண்ணு ஈஸ்டு மூணு ஈஸ்டு ரெண்டு அப்படின்னு சொல்லுவாளே (1:3:2). அப்படி புரிஞ்சுக்கோ. இந்த விகிதாச்சாரத்துல கூட பேதங்கள் உண்டு. உன்னோட மூச்சு திறனை பொருத்து பிற்பாடு ஒரு யோகா டீச்சர வெச்சு கூட இந்த விகிதாச்சாரத்தை திருத்தி அமச்சுக்கலாம். இந்த 1:3:2 எங்கரது ஒரு பொதுவான ரூல் அப்படின்னு புரிஞ்சுண்டு இது பிரகாரம் பண்ணிட்டு வா.'

'சரி பாஸு. இன்னிக்கி இத்தோட நிறுத்திக்கலாம். இந்த பிராணாயாமம் பத்தி பேச ஆரம்பிச்சா சொல்லிட்டே போகலாம். மூச்சுக் காத்துன்னு லேசா சொல்லிடறோம். ஆனா அதுக்குள்ள இருக்கிற விஷயங்கள் ரொம்ப ஆழமானது.'

'மாமா, பூரகம் கும்பகம் ரேசகம் இதுக்கெல்லாம் ரேஷியோ சொன்னேள். ஆனா கடைசியா சொன்ன கேவல கும்பகத்துக்கு ரேஷியோ சொல்லவே இல்லையே.'

'நீ கேட்கிறது சரிதான் பாஸு. அதோட ரேஷியோ ஒண்ணு. அதாவது பூரகத்துக்கு எடுத்துக்கிற டைம். பிராணாயாமம் நீ பண்ணும் போது கடைசியாக மூக்குல வெச்சிண்ட கைவிரல்கள‌ bபாவமா காது கிட்ட எடுத்துண்டு போறோம் இல்லையா. அந்த டைம் இந்த கேவல கும்பத்துக்கான டைம்னு வெச்சுக்கலாம்.'

'இந்த மாதிரி காது கிட்ட கொண்டு போறது ஒரு ஐதிகமாகத்தான் சொல்லப்படறது. ரொம்ப வியாக்கியானங்கள் இதுக்கு கிடையாது. ஜஸ்ட் புரிஞ்சுண்டா போதும்.'

'ரொம்ப தேங்க்ஸ் மாமா. நீங்க இன்னிக்கி என்னோட ரொம்ப நேரம் செலவழிச்சுட்டேள். நான் கிளம்பட்டுமா மாமா?'

'சரி ஜாக்கிரதையா போயிட்டு வா. அடுத்த கிளாஸ்ல உனக்கு ஸங்கல்பத்தை பத்தியும் மார்ஜனம் பத்தியும் சொல்லி தரேன். எனக்கு ராதா கல்யாணம் விஷயமா கணக்கு வழக்குகள் எழுத வேண்டியிருக்கு. நீ கெளம்பு.'

நமஸ்காரம் அபிவாதயே முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

தொடரும்...

மனதோடுயாகம் - பகுதி 9

பகுதி 9

ரகு சாஸ்திரிகள் அதுவரை சொல்லிக்கொடுத்த பிராணாயாமம் பற்றிய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக என் சிந்தனையெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்த பூரகம், கும்பகம், ரேசகம் .. அதாவது சுவாசத்தை இழுத்துக் கொள்வது, சில நொடிகள் அந்த சுவாசத்தை தக்க வைத்துக் கொள்வது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை வெளியே விடுவது... இப்படி செய்யும்போது விரல்களை எப்படி எல்லாம் வைத்துக்கொள்வது... என்ற முக்கியங்களில் என் கவனம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

'நமக்குத்தான் பிராணாயாமம் மந்திரம் தெரியுமே. அதச் சொல்லிண்டே இத பண்ணனும் அவ்வளவு தானே' என்று ஒரு அசட்டு கணிப்பிலும் என் எண்ணம் இருந்தது. 

என்னை அறியாமல் வெளிவந்த சிரிப்புகளை அவர் பார்த்துக் கொண்டிருந்திருந்தார் போலும்.

'என்ன பாஸு உனக்கு நீயே சிரிச்சிண்டு இருக்கே. என்ன விஷயம்? சொன்னால் நானும் சேர்ந்து சிரிப்பேனோன்னோ?'

'ஒன்னும் இல்ல மாமா. நீங்க இதுவரைக்கும் சொன்ன பிராணாயாமம் மந்திரத்தையும் சேர்த்துச் சொல்லி கற்பனை பண்ணிண்டிருந்தேன். சரியா செய்யறேனா தப்பா செய்யறேனான்னு எனக்குள்ளேயே குழப்பம். அதான் சிரிச்சிண்டிருந்தேன்.'

'அதான் நான் வந்துட்டேனே. சரியா நான் சொல்லிக் கொடுத்தோண்ன நீ சமத்தா நன்னா செய்யப்போற. ரெடியா?'

'பாஸு, உனக்குத்தான் பிராணாயாமம் மந்திரம் அத்துப்படி ஆச்சே. எங்க சொல்லு பாப்போம்.'

ஆரம்பிக்கிறேன்....
- ௐ பூஹு
- ௐ புவஹ
- ௐ சுவஹ
- ௐ மஹஹ
- ௐ ஜனஹ
- ௐ தபஹ
- ௐ ஸத்யம்

'இத்தோட சித்த நிறுத்து. நான் சொன்னதுக்கு அப்புறம் மேற்கொண்டு போகலாம் சரியா?'

'ஓம் அப்படிங்கறது பிரணவ மந்திரம். அது நோக்கு தெரியுமோன்னோ?'

'தெரியும் மாமா'

'அந்த ஓம் சொல்லிட்டு ஏதோ ஒவ்வொரு வார்த்தையா சொல்றியே. அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?'

'ஒரளவு ஞாபகம் இருக்கு மாமா. ஏதோ ஏழு லோகத்தை குறிக்கறதா நீங்க எனக்கு பூணூல் போட்ட சமயத்துல சொல்லிக் கொடுத்திருக்கேள்னு நெனைக்கிறேன்.'

'நெனைக்கிறது என்ன.... அதேதான்'

'சரி கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா? இந்த அகண்ட பிரபஞ்சத்தில மொத்தம் பதினாலு லோகங்கள் இருக்கிறதா சொல்றா. நாம இருக்கிற பூமிய சேர்த்து ஏழு லோகம் மேலேயும் பூமிக்கு கீழே ஏழு லோகமும் இருக்கு. முதல்ல பூமியும் பூமிக்கு மேலே உள்ள ஏழு லோகங்கள் என்ன என்ன அப்படின்னு பார்ப்போம்.'

'பூலோகம், புவர்லோகம் சுவர் லோகம் ஜனலோகம், மகர் லோகம் தபலோகம் அப்புறம் கடைசியா சத்தியலோகம்.'

'இந்த ஏழுலேயும் யார் இருக்கா அப்படிங்கறதையும் விவரிச்சு சொல்லி இருக்கா. பூலோகத்துல யார் யார் இருக்காங்கறதுதான் நோக்கே தெரியுமே. அத விட்டுட்டு பார்த்தோம்னா புவர்லோகத்தில பித்ருக்கள் இருக்கிறதாவும் சுவர் லோகத்துல தேவர்கள் இருக்கிறதாவும் துருவன் மாதிரி கடும் தபசு செஞ்சுட்டு நட்சத்திர அந்தஸ்து அடஞ்சவா மகர் லோகத்தில இருக்கிறதாவும் ரிஷிகள் யோகிகள் முனிவர்கள் இவாள்லாம் ஜன லோகத்திலேயும் தபோலோகத்துலேயும் இருக்கிறதாவும் கடைசியா பிரம்ம தேவர் லோகமா சத்தியலோகத்தையும் சொல்லியிருக்கா. இந்த புவர்லோகம் சுவர்லோகம் மஹர் லோகம் ஜனலோகம் தபலோகம் சத்யலோகம் எல்லாமே பூலோகத்துல இருக்கிற நமக்கு மேல இருக்கிற லோகங்கள்.'

'இதே மாதிரி அதல லோகம் விதல லோகம் சுதல லோகம் தலாதல லோகம் மஹாதல லோகம் ரசாதல லோகம்
பாதாள லோகம் ... இந்த ஏழும் பூமிக்கு அடியில இருக்கிற லோகங்கள்.'

'இந்த ரெண்டு ஸெட்டையும் சேர்த்து தான் நாம சுருக்கமா ஈரேழு லோகம் அப்படின்னு புரிஞ்சுக்கறோம்.'

இப்போது எனக்கு அவரிடம் ஏதோவொரு கேள்வியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதை புரிந்து கொண்ட அவர்:

'நீ என்ன கேக்க போறேங்கறது எனக்கு புரிஞ்சுடுத்து. பிராணாயாமம் மந்தரத்துல பூமிக்கு கீழே இருக்கிற லோகங்கள் வரவே இல்லையே? இதானே உன் டவுட்?'

நான் கேட்க நினைத்தது இதைத்தான். எனவே என் ஆர்வம் புன்சிரிப்பையும் இணைத்துக் கொண்டது.

'யாராவது பூமிக்கு கீழ போயி வாழறதுக்கு விருப்பப்படுவாளா இல்லாட்டி தேவர்கள் முனிவர்கள் யோகிகள் நட்சத்திரங்கள் இவாள்ல்லாம் வசிக்கிற லோகங்கள்ல ஏன் அதுக்கு மேல எல்லாத்தோடையும் உயர்ந்ததான பிரம்மா விஷ்ணு சிவன் எல்லாரும் இருக்கிற சத்திய லோகத்தில் வாழறதுக்கு ஆசைபடுவாளா?'

'அதனாலதான் சூட்சுமமா பூமிக்கு கீழ இருக்கிற எந்த லோகத்தையும் பிரணாயாமம் மந்தரத்தில சேர்க்கல. இப்ப புரிஞ்சுதா?'

'ஸத்ய லோகத்துக்கு காரணமாவும் சாட்சியாவும் இருக்கிற பரந்தாமனை நோக்கி பயணிக்கிற புண்ணிய ஆத்மாக்கள் இந்த அத்தனை லோகங்களையும் விட்டுட்டு வைகுண்டம் என்கிற பரமபதத்தை சேர்ந்துடறான்.'

'அப்படிப்பட்ட பரமபதத்தை அடையறதுக்கு ஓம்காரம் என்கிற ஒலியும் அதை ஒட்டிய மூச்சு கட்டுப்படுத்துதலும் நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்றது.'

'ஓங்காரமே பூலோகம் ஓங்காரமே புவர்லோகம் ஓங்காரமே சுவர் லோகம் ஓங்காரமே மகர் லோகம் ஓங்காரமே ஜனலோகம் ஓங்காரமே தபோலோகம் ஓங்காரமே சத்தியலோகம்.'

இதுதான் பிராணாயாமத்தோட பார்ட் ஒன். அதாவது நான் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தபடி மூச்சை இழுக்கும்போது மட்டும் சொல்ற மந்திரங்களோட அர்த்தங்கள். குறிப்பா சொல்லப் போனா நான் முன்னாடி சொன்னேனே பூரகம். அந்த பூரக மந்திரங்கள் அப்படின்னு கூட புரிஞ்சுக்கோ.'

'இப்ப நான் உனக்கு ஒரு நாற்பது பக்கம் நோட்டும் பென்சிலும் தரப்போறேன். அதுல இந்த பிராணாயாமத்தை பத்தி நீ இதுவரைக்கும் புரிஞ்சிண்ட சகலத்தையும் எழுதி காமி பார்ப்போம்.'

நாற்பது பக்கம் நோட்டு ஒன்றையும் பென்சிலையும் தருகிறார். புதிய நோட்டாக அது இருந்தது அதைப் பிரித்து முகர்ந்து பார்க்கிறேன்.

'நோக்கு புது நோட்டு வாசனை பிடிக்குமாக்கும்?'

'ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா. ஸ்கூல்ல நோட்டுப் புத்தகம் எல்லாம் கொடுத்தோண்ண மூந்து மூந்து பார்த்துண்டே இருப்பேன்.'

'கழுதைக்கு தானே தெரியும் புஸ்தக வாசனை?'

'மாமாஆஆஆஆ. நான் ஒண்ணும் கழுதை இல்ல.'

'சும்மா ஜோக்குக்கு சொன்னேன் டா.'

அவர் மடத்து காரியங்களில் ஈடுபடுகிறார். நான் நோட்டுப் புத்தகமும் எழுத்துமாக.....

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 8

பகுதி 8

'வா பாஸு. ரெண்டே ரெண்டு பூஜை பாத்திரம் இருக்கு. அவைகள தேச்சுட்டு வந்துடறேன். அதுவரைக்கும் அமைதியா உக்காந்துக்கோ ஒரு ஓரத்துல.'

'நான் வேணா தேச்சி தரட்டுமா மாமா.'

'இல்லடா. எல்லாம் பித்தள பாத்திரம். அழுத்தம் கொடுத்து தேய்க்கணும். உனக்கு சரிப்பட்டு வராது. நீ குழந்தையோன்னோ. பரவாயில்ல. பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.'

அவர் சொன்னதைப் போல பாண்டுரங்கன் படத்திற்கு முன்னால் உட்காருகிறேன். ஜன்னல் வழியாக ஆற்றங்கரையிலிருந்து ரம்யமான சத்தத்துடன் வந்த காற்று படத்தை சிறிய அளவில் அசைக்கிறது. நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்கன் ஒரு சின்ன அசைவை கொடுத்த உணர்வு.

பேசிக்கொண்டு இல்லாததாலோ என்னவோ என் கண்கள் என்னையறியாமல் மூடிக் கொள்கின்றன. சிறிது நேரம் அப்படியே இருக்கிறேன்.

'காத்து அடிக்கிறதுல தூக்கம் வரதா பாஸு.'

அவர் இப்படி கேட்டவுடன் கண்களை திறக்கிறேன்.

'இல்ல மாமா. தூக்கமெல்லாம் வரல. சும்மாதான் கண்ண மூடிண்டு இருந்தேன்.'

'பேஷ் பேஷ். தியானம் பண்ணிண்டிருந்தியாக்கும். இது மாதிரி அமைதியா ஒரு எடத்துல கண்ண மூடிண்டு இருக்கிறது தானே தியானம்ன்னு சொல்றா. சரி நாம இன்னிக்கு பிராணாயாமத்தை கத்துப்போமா?'

வழக்கம் போல இருக்கைகளை ஏற்பாடு செய்து விட்டு நமஸ்காரங்களை முடித்துவிட்டு அமர்கிறோம்.

'பாஸு, பிராணாயாமம் அப்படிங்கற ஒரு வார்த்தைய ரெண்டா பிரிச்சு பார்த்தோம்னா 'ப்ராணா' 'ஆயமா' அப்படின்னு ரெண்டு பொருள்கள சொல்லிக் கொடுக்கற வார்த்தையா இருக்கு. இந்த எடத்தில ப்ராணா என்ற சொல் மூச்சுக்காற்றை குறிக்கறது. 'ஆயமா' அப்படின்னா நிறுத்தி வைக்கிறது அல்லது கட்டுப்படுத்தி வைக்கிறது. மூச்சை கட்டுப்படுத்துதல் என்ற பொருளில்தான் நாம இந்த பிராணாயாமம் என்ற சொல்லோட அர்த்தமாக புரிஞ்சிக்கறோம். எங்க நான் சொன்னத அப்படியே சொல்லு பாப்போம்.'

'பிராணாயாமம் அப்படிங்கற வார்த்தையில பிராணா என்கிற சொல்லும் ஆயமா என்கிற சொல்லும் அடங்கியிருக்கு. ப்ராணான்னா மூச்சுக்காத்து. ஆயமா அப்படின்னா கட்டுப்படுத்தறது. சரியா சொன்னேனா மாமா?'

'அவ்வளவுதாண்டா. நம்மளோட மூச்ச கட்டு படுத்தறக்கு பெயர்தான் ப்ராணாயாமம். சுருக்கமா சொல்லப்போனா இது ஒரு மூச்சுப்பயிற்சி அதாவது மூச்சுக்கான எக்ஸர்சைஸ்.'

'எக்ஸர்சைஸ் அப்படிங்கும்போதே சில விதிகள் அதுல அடக்கம் அப்படிங்கறத சேர்த்தே புரிஞ்சிக்கணும். உங்க பள்ளிக்கூடத்துல உடற்பயிற்சி செய்யும் போது கை கால்களை இந்த அளவுக்கு நீட்டணும் உடம்ப நேரா வச்சுக்கணும் கழுத்த ஆட்டப்படாது.... அப்படின்னு ஒவ்வொரு எக்ஸர்சைஸூக்கும் முறைகள் இருக்கோன்னோ. அதே மாதிரியே இந்த பிராணாயாமத்துக்கும் செயல் முறைகள் உண்டு.'

'பிராணயாமம் செய்யும்போது சொல்ற மந்திரத்தை பத்தி பின்னாடி பேசுவோம். அதுக்கு முன்னாடி இந்தப் பயிற்சிய பத்தி சில விஷயங்களை பார்ப்போம். சரியா. கூன் போடாம நேர நிமிர்ந்து சித்த நாழிக்கு உட்காரு என் முன்னாடி.'

'இப்ப உன்னோட ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கி கட்டைவிரல் பவித்ர விரல் ரெண்டுலயும் மூக்கோட வலது இடது பக்கம் அழுத்திக்கோ. மூக்குல ரெண்டு நாசித் துவாரங்கள் இருக்கோன்னோ. வலதுபக்க நாசியை கட்டை விரலாலேயும் இடதுபக்க நாசியை பவித்ர விரலாலேயும் அழுத்தி புடிக்கணும் சரியா. ஏற்கனவே பிராணாயாமம் செஞ்சிண்டு வரவன்தானே நீ?

'இந்த பயிற்ச்சியை நீ கவனமாக கத்துக்கணும். ஏன்னா இது நம்மளோட மூச்ச ஒழுங்கு படுத்துற சமாச்சாரம். அதுக்காக ரொம்ப பயப்பட வேண்டாம்.'

'நம்மளோட மூச்சுக்கு ஆதாரமா இருக்கிறது நம்மளோட மூக்கும் மூக்குகளோட சம்பந்தப்பட்ட ரெண்டு துவாரங்களும், இல்லையா? இந்த துவாரங்கள நாசிகள்னு கூட சொல்லுவா இல்லையா? அதனால இந்த நாசிகள நாம எப்போதும் க்ளீனா வெச்சுக்கணும். அதுலயும் குறிப்பா இந்த பிராணாயாமம் செய்யும் போது நாசிகள சுத்தமா வெச்சிக்கணும். ஏன்னா, அந்த துவாரங்கள் வழியாத்தானே மூச்சு காத்து போயிட்டு வரணும் இல்லையா?'

'சந்தியாவந்தனம் செய்ய உக்காரதுக்கு முன்னாடியே முகம் கைகால்கள் மாத்திரம் இல்லாம மூக்குத் துவாரங்களையும் நன்னா ஜலத்த விட்டு விரலால் துழாவி சளி, தூசு இல்லாமல் சுத்தம் செஞ்சிக்கணும். சுத்தமான துணியால கை கால்கள் மாத்திரம் இல்லாம மூக்குத் துவாரங்களையும் துடைச்சுடணும். இப்படி சுத்தம் செய்யறதால மூக்குத் துவராங்கள் வழியா தங்கு தடையில்லாம காத்து போயிட்டு திரும்ப வெளியே வரதுக்கும் வாய்ப்பு வரது இல்லையா?'

பிராணாயாமத்தை முறையா செஞ்சிண்டு வந்தா ஏராளமான பலன்கள் உண்டு. பொதுவா சொல்லணும்னா உடல் ஆரோக்கியமா இருக்கும். ஊளைச்சதை கரஞ்சுடும். தேவைக்கு அதிகமா கொழுப்புச் சத்து உடம்புல ஏறாது. கண்கள் பிரகாசமா இருக்கும். வயித்து கோளாறு, ஜீரணக் கோளாறு வராது. உடல் சிந்திக்கும் திறமை அதிகரிக்கும். உஷ்ண உடம்பா இருந்தா வெப்பம் கொறையும். முகம் அழகாயிடும். முக தேஜஸ் பிரமாதமா ஜொலிக்கும்.'

'எல்லா முக்கியமான நன்மைகளையும் சொல்லிட்டேன்னு தான் நெனைக்கிறேன். நான் ஏதாவது சொல்ல விட்டுப் போயிருந்தா அவைகள கூட நீ பிராணாயாத்த ப்ராக்டிகலா செய்ய செய்ய உனக்கே தெரிஞ்சுடும்.'

'சரி. இப்ப பிராணாயாம் மூலம் எப்படி மூச்ச கட்டுப்படுத்தறதுன்னு சொல்றேன்.'

'இந்த மூச்சு பயிற்சியில நாலு நிலைகள் இருக்கு.

முதலில் சுவாசத்தை உள்ளே இழுக்கறது. இதுக்கு பூரகம்னு பேர்.'

'இழுத்த சுவாசத்தை உள்ளே சித்த நிறுத்தி வைக்கறது. இது ரெண்டாவது ஸ்டேஜ் இத கும்பகம்னு சொல்லுவா.'

'அடுத்த ஸ்டேஜ் நிறுத்தின சுவாசத்தை வெளிய விடறது. அதுக்கு பேரு ரேசகம்.'

'கடைசியா வெளியே சுவாசத்தை விட்டோண்ண அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்தறது. இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று சொல்லுவா'

'மாமா ஒரே ஒரு சந்தேகம். நாமதான் மூச்ச கம்ப்ளீட்டா விட்டுடறோமே. அதுக்கப்புறம் எதுக்கு பகிரங்க கும்பகம்?'

'சரியான கேள்வி பாஸூ. ஒரு பிராணாயாமம் முடிக்கறச்சே உடனே ஃபாஸ்டா இன்னொண்ணு ஆரம்பிக்காம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். அந்த ரிலாக்ஸேஷன் தான் கேவல கும்பகம். அதாவது அமைதியா எல்லா மூச்சு காத்தும் வெளிக் காத்தோட சேரர வரைக்கும்னு புரிஞ்சுக்கோ. இந்த பகிரங்க கும்பத்துக்கு மேக்ஸிமம் போனா ஃபைவ் ஸிக்ஸ் ஸெகண்டுகள்தான் ஆகும். பண்ண பண்ண உனக்கே இது தெரிஞ்சுடும். ரொம்ப மண்டைய போட்டு உடச்சிக்க வேண்டாம்.'

'சரி. இதுவரைக்கும் என்ன பார்த்தோம்? பிரணாயாமம்னா என்ன அப்படின்னு தெரிஞ்சிண்டோம். எப்படி செய்யறதுன்னு மேலோட்டமா பார்த்தோம். பிரணாயாமம் பண்றதுக்கு முன்னாடி நாம எப்படி நாசிகள் ரெண்டையும் கிளீனா வச்சுக்கணும்னு பார்த்தோம். கடைசியா பிராணாயாமம் பண்றதுனால நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் அப்படின்னும் தெரிஞ்சிண்டோம், இல்லையா? இப்ப நாம பிராணாயாம பயிற்சியை மந்திரங்களோட கனெக்ட் பண்ணி மூச்ச இழுக்கிறதுக்கும், இழுத்த மூச்சை எப்படி புடிச்சு நிறுத்தணும்கறதையும், நிறுத்தின மூச்ச மெல்ல மெல்ல விடறதுக்கும் கத்துப்போமா?'

'இதுவரைக்கும் நான் உனக்கு சொல்லிக் கொடுத்ததயெல்லாம் கொஞ்சம் ஞாபகபடுத்திண்டிரு. பூஜ துணிகள கொஞ்சம் திருப்பாற்கடல் குளத்துல அலசி காயப் போட்டுட்டு வந்துடுறேன். பத்து நிமிஷம் தான் ஆகும். சமத்தா ஒக்காந்து இருக்கியா.'

அவர் ஒரு வாளியில் சில துணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பாற்கடல் பக்கம் செல்கிறார். நானும் அவர் சொன்னதைப் போல பாடங்களில் என்னுடைய ஞாபகங்களை கூட்டுகிறேன்.

தொடரும்

மனதோடுயாகம் - பகுதி 7

பகுதி 7

சில வாரங்களுக்கு பிறகு தான் அடுத்த ஸந்தியா வந்தன வகுப்பு தொடர சாத்தியமாகிறது. கற்றுக்கொடுக்கும் என் ஆசான் ரகுபதி சாஸ்திரிகள் வைதீகங்களில் படு பிஸி. சிறிய ஊர். விரல்விட்டு எண்ணும் படியாகத்தான் அக்ரஹார தெருக்களின் எண்ணிக்கை.

அவர் உச்சரிக்கும் மந்திர ஒலிகளின் நேர்த்திகளும் சாஸ்திர சம்பிரதாயங்களில் அவருக்கு இருந்த அசாத்திய தேர்ச்சியும் அவரை ஆத்து வாத்தியாராக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தன பல பிராமண குடும்பங்கள். பல பிராமண குடும்பங்களில் அவர் வைத்திருந்த பேரன்பும் அவரின் ஜீவனத்திற்கு பேருதவியாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

'ரொம்ப நாள் ஆயிடுத்தில்லடா பாஸு?'

'மாமா உங்கள புடிக்கவே முடியல. மடத்துக்கு வந்து பார்ப்பேன். பூட்டியிருக்கும். திரும்ப போயிடுவேன்.'

'எனக்கு உன் ஞாபகம் இருந்து கொண்டே இருக்கும். ஆச ஆசையா கத்துகிறானே பாஸு. கத்துக் கொடுக்க முடியலியே அப்படின்னு தோணிண்டே இருக்கும். என்ன பண்றது டா. ஜீவனம்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணுமே. இல்லையா?'

'பரவாயில்லை மாமா. நீங்க தானே சொன்னேள் கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டா தான் நன்னா மூளைக்கு ஏறும்னு.'

'சரி டா நாம ஆரம்பிப்போம். இதுவரைக்கும் சொல்லிக்கொடுத்ததுல என்ன ஞாபகம் வெச்சிண்டுருக்க. எங்க சொல்லு பாப்போம்?'

வாமனர் உபநயனத்துல ஆரம்பிச்சு ஸ்நான வகைகள ஒண்ணு விடாம சொல்லி ஆசமனம் வரைக்கும் சொல்கிறேன். இடையிடையே அவர் கேள்விகள் என் பதில்கள் அவர் திருத்தங்கள் என்று நீண்டு முடிந்தன இதுவரை கற்ற பாடங்களின் தொகுப்பு.

'மாமா அன்னிக்கு ஆசமனத்துல ஏதோ விட்டுப்போச்சு. அடுத்த கிளாஸ்ல எனக்கு ஞாபகப்படுத்து அப்படின்னு சொன்னேளே.'

'ஆஆஆஆங். ஞாபகம் இருக்கு. அதுலேந்தே ஆரம்பிப்போம்.'

'ஆசமனம் ஆரம்பிக்கும்போது மூணு நாமாக்களோடு ஆரம்பிக்கிறோம் இல்லையா?'

'ஆமா மாமா. அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: இதைத்தானே சொல்ல வரேள்.'

'ஆமாண்டா. இந்த மூணு நாமக்களுக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு. இந்த மூணு நாமாக்களையும் ஒண்ணா ஒருத்தர் தொடர்ந்து சொல்றச்சே அது சகல வியாதிகளையும் போக்கக்கூடிய சக்தி படைச்சதா இருக்கு. ஆரோக்கியத்துக்கும் இந்த மூணு நாமாக்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. பொதுவா சந்தியாவந்தனமே ஆயுள் விருத்திக்கும் தேஜஸுக்கும் பாபங்களை போக்கறதுக்கும் செய்யப்படுகிற ஒரு நித்திய கர்மா இல்லையா!'

'மாஆஆஆஆமா. இந்த நாமாக்களை பத்தி எனக்கு ஏற்கனவே ஒரு தடவை நீங்க சொன்ன ஞாபகம் இருக்கு‌ நான் ஜொரத்தோட படுத்துண்டு இருந்தப்ப.'

'பரவாயில்லையே. கெட்டிகாரண்டா நீ.'

'ஆனா மாமா இப்ப இன்னொரு தடவையும் சொல்லுங்கோ இதப்பத்தி. கேட்டுக்கறேன்.'

'டெய்லி லட்சுமி நாராயணன் கோவில்ல எல்லாரோடையும் சேர்ந்து நீ ஒரு ஸ்தோத்திரம் சொல்லுவியே .... ஆபதாப பஹத் தாரம்.... அப்படின்னு ஆரம்பிக்குமே ஞாபகம் இருக்கா? ஆபதோத்தாரண ஸ்லோகம்னு அந்த ஸ்லோகத்துக்கு பெயர். அதுல கூட இந்த நாமாக்கள பத்தி நடுப்புல ரெண்டு வரி வரும்...

'அச்சுதானந்த கோவிந்த
நாமோ சாரண பேஷஜாத்
நஸ்யந்தி சகலாஹா ரோஹாஹா
சத்யம் சத்யம் வதாம்மயகம்'

இதுக்கு என்ன அர்த்தம்னா 'அச்சுதா அனந்தா கோவிந்தா என்ற மூன்று நாமாக்களும் சகல ரோகங்களையும் அதாவது வியாதிகளையும் போக்கவல்லது. இது சத்தியமாக சொல்லப்படுவது.'

'இப்ப புரிஞ்சுதா இந்த நாமாக்களோட மகிமைய பத்தி? இந்த மூணு நாமாக்களையும் ஆசமனத்துல வெச்சு மனுஷா உயிர் வாழ பிரதானமாக இருக்கிற ஜலத்தோட இணைச்சு நம்மளோட ஆயுள் விருத்திக்காக செய்யப்படுகிற சந்தியாவந்தனத்தின் ஆரம்பமாக வெச்சிருக்கா.'

'சந்தியாவந்தனம் மாத்திரம் இல்ல. பூஜையோ அல்லது வேற எந்த கர்மாக்களுக்கோ இந்த ஆசமனத்தத்தான் ஆரம்பமா சொல்லி இருக்கா. ஜலத்தோடையும் நாமாக்களோடையும் ஸ்பரிஸங்களாலேயும் இந்த ஆசமனமானது பின்னப்பட்டிருப்பதால தேக சுத்தம் ஆத்ம சுத்தம் ஆயுள் விருத்தி ... எல்லாத்துக்குமே இது உகந்ததா இருக்கு. இந்த ஆசமனத்த இன்னொரு விதமாவும் சொல்லுவா. 'மஹா வியாதி-பிரசமனீ நாம த்ரயீ-வித்யா'. அதாவது மகா வியாதிகளையும் போக்கக்கூடிய மூணு நாமாக்கள் அடங்கிய வித்யை இது. புரிஞ்சுதா?'

'அடுத்ததாக நாம பார்க்கப் போறது கணபதி த்யானம். இது அனேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச மந்திரம்தான். இத சொல்லாம எந்த பூஜையோ புனஸ்காரமோ ஆரம்பிக்கவே ஆரம்பிக்காது. நோக்கும்தான் தெரியுமே.... எங்கே சொல்லு பார்ப்போம்?

'சுக்கலாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே'

'பிரமாதம். அக்ஷரப் பிஸகு கூட இல்லாம நன்னா சொல்றியே? சமத்து.'

'சரி இந்த மந்திரத்த சொல்லும்போது என்ன செய்யறோம்?'

'தலையில குட்டிப்போம் மாமா.'

'உங்க பள்ளிக்கூடத்துல நீ விஷமம் பண்ணினா வாத்தியார் உன் தலையில குட்டற மாதிரியா?'

'என்ன ஒண்ணும் என்னிக்கும் எங்க வாத்தியார் குட்ட மாட்டாராக்கும்.'

'உன்ன எதுக்கு குட்ட போறார்? நீதான் கட்டி சமத்தாச்சே. சரி, இப்போ பிள்ளையார தியானிக்கும் போது ஏன் குட்டிக்கணும்னு சொல்லி தரேன்.'

'நம்ம சிரசுல எப்போதும் அமிர்தம் ஒட்டிண்டு இருக்கும். அந்த அமிர்தத்த மஹா கணபதிய நினைச்சுட்டு சிரத்தோட ரெண்டு பக்கத்தையும் அஞ்சு முறை மெதுவா குட்டிக்கும்போது சிரசில் உள்ள அந்த அமிர்தம் நம்ம உடம்புல உள்ள அத்தனை நாடிகளிலேயும் பாயறதா சொல்லப்பட்டிருக்கு. இது கணபதி ஆராதனையில ஒரு விசேஷமான அம்சமா பெரியவாளெல்லாம் சொல்லி இருக்கா. இப்ப அர்த்தத்துக்கு போகலாமா?'

'சமஸ்கிருதத்தில விஷ்ணும் அப்படின்னா எங்கும் நிறைந்திருப்பவர். சுக்லாம் பரதரம் அப்படின்னா வெள்ளை ட்ரெஸ் போட்டிருப்பவர். சசி வர்ணம் அப்படின்னா நிலவு மாதிரி ஒளி உள்ளவர். சதுர்புஜம் அப்படின்னாத்தான் உனக்கு தெரியுமே. நான்கு கைகள் உள்ளவர். ப்ரசன்ன வதனம் அப்படிங்கரத்துக்கு ஆனந்தமான வடிவமைப்பு கொண்டவர்னு அர்த்தம். ஸர்வ விக்ன உபசாந்தயே அப்படின்னா எல்லா தடைகளையும் விலக்கி .... த்யாயேத் .... தியானம் செய்கிறேன்.'

'இவ்வளவு தாண்டா அர்த்தம் இந்த ஸ்லோகத்துக்கு. நிலவு போல முகம் ஆனந்தம் பொங்கும் முக மண்டலம் எங்கும் நிறைந்திருப்பவர் வெள்ளை ஆடை உடுத்தி இருப்பவர,‌ நான்கு கைகளை உடையவர்.... இப்பேர்ப்பட்ட கணபதிய செய்ய போகிற என் எந்த செயல்களுக்கும் தடையில்லாமல் நடத்திக் கொடுக்க தியானம் செய்கிறேன்.'

'ஒரு சின்ன சந்தேகம் மாமா. பிள்ளையாரோட பிரத்தியேகமான யானைமுகம் இல்லாட்டி தும்பிக்கை தந்தம் தொந்தி இதைப்பத்தியெல்லாம் இந்த ஸ்லோகத்தில வரலையே?'

'நீ கேக்குறது அற்புதமான கேள்வி. நீ சொல்றதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் வராததால ஒருவேளை உனக்கு இது கணேச ஸ்துதிதானான்னு சந்தேகமா இருக்காக்கும்? கவலைப்படாத இது கணேச ஸ்துதியேதான்.'

'நான் ஒரு தடவ அற்புதமான கோவிலுக்கு போனேன். மாயவரத்துக்கும் திருவாரூருக்கும் நடுவுல ஒரு ஊர் இருக்கு. திலதர்ப்பணபுரின்னு அந்த ஊருக்கு பேரு. அங்க இருக்கிற பிள்ளையாருக்கு யானை முகம் தும்பிக்கை தந்தம் இப்படி எதுவுமே இல்லை. ஆதிவிநாயகர் அப்படின்னு அந்த பிள்ளையாரை சொல்றா. இப்ப நீ இந்த கேள்வி கேழ்கறச்சே என் மனசுல பட்டத நான் சொல்றேன். காலம் காலமா இந்த கணேச ஸ்துதிய தான் எல்லா பூஜைகளுக்கும் கர்மாக்களுக்கும் ஆரம்பமா வெச்சிருக்கா. அதனால இத ஆதி விநாயகர் ஸ்லோகமா கூட எல்லாரும் ஏத்துண்டு இருக்கான்னு தோணறது. நான் சொல்றது தப்பா கூட இருக்கலாம். சந்தேகம் வேண்டாம். இது பிள்ளையார் ஸ்லோகம் தான்.'

'நான் ஏதாவது தப்பிதமா கேட்டுட்டேனா மாமா.'

'பாஸு. ஒண்ண நீ புரிஞ்சிக்கணும். வேதம் அல்லது ஸ்லோங்களுக்கு ஒரு அர்த்தம்தான் இருக்கணும்னு இல்லை. நம் மனசு கேட்க கேட்க அனுபவங்களால புதுப்புது பொருள்கள் விளங்கும். தேடல்கள் தொடர தொடர, நம் ஞானம் விரிவடையும். அது முடிவில்லாம போயிண்டே இருக்கும்.:

'பாஸு, இன்னைக்கே உனக்கு பிராணாயாமம் பத்தியும் கிளாஸ் எடுக்கலாம்னூனு தான் நெனச்சிண்டு வந்தேன். ஆனா இப்ப தோண்றது பிராணாயாமத்தை தனி கிளாஸா எடுத்தா என்ன அப்படின்னு. சந்தியாவந்தனத்தில பிராணாயாமமும் காயத்ரி ஜபமும் ரொம்ப இம்பார்ட்டண்ட் இல்லையா? அதனால பிராணாயாமத்தை ஸ்பெஷலா கத்துக்கலாம், என்ன?'

'நீங்க சொன்னா சரி மாமா.'

'அது போகட்டும். இன்னிக்கு கிளாஸ்ல என்ன கத்துண்டேன்னு சுருக்கமா சொல்லு.'

சொல்கிறேன். சொல்லாமல் விட்டதை தெளிவாகச் சொல்லி புரியவைக்கிறார்.

'சரி பாஸூ. நீ கிளம்பு. எனக்கு சித்த மடத்துல வேலை இருக்கு. நான் ஒன்னோட கிளம்பல.'

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 6

பகுதி 6

மடத்துக்கு அவர் சொன்ன நாளில் வரும்போது சாஸ்திரிகள் எங்கள் தெருவில் வசிக்கும் வேணு மாமாவோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

'பாஸு நீ உள்ள போயி பாண்டுரங்கன் முன்னாடி உக்காந்து காயத்ரி பண்ணிட்டிரு. வேணு மாமாவோட ராதா கல்யாண உத்வவத்தைப் பற்றி பேசிட்டு வந்துடறேன். சித்த முன்ன பின்ன போகலாமோன்னோ? அவசரம் ஒண்ணும் இல்லையோன்னோ உனக்கு?'

'காயத்ரி பண்ணல மாமா. நான் பின்னாடி தோட்டத்துல போய் விளையாடிண்டிருக்கேன்.'

'அதான பார்த்தேன். உன் பிரண்ட்ஸ் செடிகள்லாம் உன்ன பத்தி கார்த்தால தான் கேட்டுதுக. எப்போதும் மாட்டற எடத்துல தான் தோட்டத்து சாவி இருக்கு. ஆனா ஒண்ணு. தோட்டத்துல கவனமா இருக்கணும். மத்தியான வேளைல பாம்பு நடமாட்டம் இருக்கும். ஜாக்கிரத.'

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வேணு மாமாவோடு பேச்சை தொடர்கிறார்.

'பாஸு நல்ல கொழந்த வேணு. ரொம்ப சமத்து. இங்க அடிக்கடி வந்து நாலு நல்ல விஷயத்த கேட்டுண்டு போவான்.'

'குட் பாய்தான். ஆனா திருப்பாற்கடல் அந்த பக்கம் இருக்கற கரைல அவனும் அவன் பிரெண்ட்ஸும் அடிக்கிற லூட்டி இருக்கே. பயமா இருக்கும் அவன் டைவ் அடிக்கிறத பார்த்தா.'

'குழந்ததானே. பெரியவனானா புரிஞ்சிக்க போறான். சின்ன குழந்தையா இருக்கச்சே தானே வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்கறது எல்லாருக்கும். என்னமோ பாஸுவ பார்க்கறச்சயல்லாம் அவனோட அப்பா ஞாபகம் வந்து வயத்தை பிசைறது. நன்னா அமோகமா வரணும் குழந்தை.'

'எனக்கும் புரியறது. ஆனா பாவம் அவனோட அம்மாக்கு ஒரே பையன். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்கோ. உங்ககிட்ட தான் அவனுக்கு அபிமானம் ஜாஸ்தியா இருக்கு.'

'சொல்றேன் வேணு. நேரம் பார்த்து சொல்றேன்.'

அவர்கள் பேச்சுக்கு இடையில் நான் வந்ததால் என்னைப் பற்றியும் சிறிது பேசிவிட்டு ராதா கல்யாண உத்ஸவ ஏற்பாடுகளை பற்றி தொடர்கிறார்கள்.

ராதா கல்யாண வைபவம் அந்தப் பாண்டுரங்க மடத்தில் நடக்கும் ஒரு ரம்யம்.

அவருடன் பேச்சுக்களை முடித்துவிட்டு நான் தோட்டத்தில் என்ன செய்கிறேன் என்பதை அவர் எனக்குத் தெரியாமல் ரசிப்பது உண்டு. அப்படித்தான் அவர் சத்தம் ஏதுமில்லாமல் தோட்டத்திற்குள் வந்து என்னை கவனித்துக்கொண்டிருந்தார். சில நொடிகளில் அவரை நான் பார்த்து விட்டேன்.

'வேணு மாமா போயாச்சா மாமா. நாம ஆரம்பிக்கலாமா?'

'உன் பிரண்ட்ஸுகளோட பேசிண்டு இருக்கியே. இன்னொரு நாள் வேணா கிளாஸ வச்சுக்கலாமா?'

'வேண்டாம் மாமா. நீங்க கிளாஸ ஆரம்பிங்கோ.'

அவர் மடத்திற்குள் திரும்பி செல்ல நான் அங்கிருந்த ஒரு நந்தியாவட்டை செடியை கையால் அடித்து, 'இந்த அடிய மறக்காத' என்று சொல்லிவிட்டு அவரை தொடர்கிறேன்.

மணைகளை போடுகிறேன். பாண்டுரங்க வந்தனம் குரு வந்தனம் முடிகிறது.

'சரி பாஸு. இன்னிலேந்து சந்தியா வந்தன மந்திரங்களுக்கு உள்ளே போகலாம். நான் சொல்லி இருக்கேன் இல்லையா முன்னாடி. சந்தியாவந்தனம் ரெண்டு பகுதிகளா இருக்கு.... பூர்வ பாகம் உத்தர பாகம். அதுல பூர்வ பாகத்த ஆரம்பிச்சுடறேன் இன்னிக்கே.'

கவனத்திற்காக என்னை ஒரு முறை என் உடம்பை நானே சற்று அசைத்துக் கொண்டு நேராக உட்காருகிறேன்.

'முதல்ல ஆசமனம்.... அதுலேந்து தான சந்தியாவந்தனம் ஆரம்பிக்கிறது. இல்லையா? எப்படி பண்ணுவ அத? bபாவமா செஞ்சு காட்டு எனக்கு.'

என் முன்னால் பஞ்ச பாத்ர உத்தரணி இருப்பதாக நினைத்துக்கொண்டு 'அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: .... என்று ஆரம்பித்து கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணோ மதுசூதனா திரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ஹ்ருஷிகேசா பத்மநாபா தாமோதரா' என்பதுவரை சொல்லி காண்பிக்கிறேன்.

'சமத்து. நன்னா பண்றியே' 

பாராட்டிவிட்டு தொடர்கிறார்.

'பாஸு, இதோட அர்த்தங்கள நான் இப்போ உனக்கு சொல்லி புரிய வைக்கறேன். அதாவது அச்சுதனுக்கு நமஸ்காரம் அனந்தனுக்கு நமஸ்காரம் கோவிந்தனுக்கு நமஸ்காரம்...
கேசவா நாராயணா மாதவா..
என்று உன்னோட பனிரெண்டு திருநாமங்களால உன்னைப் போற்றி இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இட்டுக் கொள்கிறேன். இதுதான் அர்த்தம்.'

'இந்த மந்திரங்கள சொல்லிண்டே நாம என்ன பண்றோம்? உடம்புல உள்ள சில உறுப்புகள தொட்டுக்கறோம். இல்லையா பாஸு? இந்த மாதிரி தொட்டுக்கரதுக்குத் தான் ரக்ஷை இட்டுக்கறதுன்னு பேரு.'

'இந்த ஆசமனத்துல ரெண்டு விஷயங்கள முக்கியமா கவனிக்கணும். விஷ்ணுவோட முதல் மூணு நாமாக்கள நாம சொல்லும்போது ஒவ்வொரு தடவையும் ஜலத்த உள்வாங்கி குடிக்கிறோம். பிறகு அவரோட பன்னெண்டு நாமாக்களை சொல்லிண்டே கன்னங்களை, கண்கள, தோள்களை, இருதயத்துக்கு பக்கத்துல, சிரசுல.... இப்படி நம்ம கையில இருக்கிற வேற வேற விரல்களால தொட்டு bபாவமா ரக்ஷ இட்டுக்கிறோம் இல்லையா?'

'இதுலேந்து என்ன புரிஞ்சிக்க முடியறது? ஜலம், நாமம், ரக்ஷை இந்த மூணும் ஆசமனத்தோடு ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது அப்படின்னு தெரியறது. இல்லையா?'

'நாம உயிர் வாழறதுக்கு ஜலம் தான் பிரதானமா இருக்கு. நீ கூட உங்க பள்ளி கூடத்துல படிச்சிருப்பியே... நம்ம உடம்புக்குள்ளேயே எழுபது பர்ஸென்ட் தண்ணீர் இருக்காமே. அதுலேந்தே ஜலத்தோட அவசியம் நம்மளால புரிஞ்சிக்க முடியறது இல்லையா?'

'ஆசமனம் போது உத்திரணியில ஜலத்தை எடுத்து பருகரச்ச ஜல தேவதையையே நாம நம்ம உடம்புக்கு சாக்ஷி தேவதையா bபாவமா அழச்சிக்கிறோம். பஞ்சபூதங்கள்ல ஒண்ணான ஜல தேவதைய நம் உடம்புக்குள்ளேயே அழச்சு பிரார்த்தனை பண்றோம்னும் புரிஞ்சிக்கலாம்.'

'சில ஆன்மீக விஷயங்கள்ல நாம நமக்கு முன்னோர்கள் எல்லாம் வழிவழியாய் செஞ்சத அப்படியே ஏத்துண்டடணும். இதை ஏன் அப்படி பண்ணனும் அதை ஏன் இப்படி பண்ணனும் இப்படி செஞ்சா என்ன அப்படி செஞ்சா கொறைஞ்சா போயிடுவோம் அப்படிங்கிற கேள்விகளுக்கெல்லாம் பதிலே என்ன மாதிரி வாத்தியார்களால கொடுக்க முடியாது. சட்டங்களும் விதிமுறைகளும் ஒரு நாட்டுல எல்லா ஜனங்களாலும் ஏத்துக்கப்படற மாதிரி ஆன்மீக விஷயங்கள்லையும் சாஸ்திரங்களும் நியதிகளையும் சம்பிரதாயங்களையும் வழி வழியா நடைமுறையில் இருக்கிறத அப்படியே ஏத்துக்கணும். புரிஞ்சுதா கொழந்த?'

'இந்த ஆசமனத்தையே வெச்சிப்போமே உதாரணத்துக்கு.'

'ஆசமனம் எப்போதும் கிழக்க பாத்துண்டோ வடக்க பாத்துண்டோ தான் செய்யணும். மேற்க பார்த்தும் தெற்கு பார்த்தும் செய்யப்படாது. அதோட இல்லாம, கைகள முழந்தாள்களுக்கு இடையே அடக்கமா வெச்சிண்டு குந்திண்டு உட்கார்ந்து தான் ஆசமனம் செய்யணும். சுண்டு விரலையும் கட்டை விரலையும் விட்டுட்டு மத்த விரல்களை சித்த மடக்கினாப்புல வெச்சிண்டா உள்ளங்கையில் ஏற்படக் கூடிய குழியில கொஞ்சம் கொஞ்சமா தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ளணும். ஆசமனம் முடிஞ்சோண்ண ரெண்டு தடவ கைய அலம்பிக்கணும். எந்த சமயத்திலேயும் பவித்ரம் போட்டுண்டு ஆசமனம் செய்யப்படாது. பவித்ரத்தை காதுல எடுத்து வெச்சுட்டு ஆசமனம் பண்ணிட்டு அதுக்கு பிறகு தான் பவித்ரத்தை போட்டுக்கணும்.'

'ஆசமனத்துக்கே எவ்வளவு ரூல்ஸ் இருக்கு பாத்தியா? இதுக்கெல்லாம் ஏன் அப்படி செய்யணும் இப்படி செய்யணும் இப்படி செஞ்சா என்ன கொறஞ்சி போய்டுவோம் அப்படின்னு கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் ஏற்கனவே சொன்ன மாதிரி பதில்களே கிடையாது. வழக்கமா எல்லா மூதாதையர்கள் எல்லாம் பண்ணிண்டு வந்தத அப்படியே நாமளும் ஏத்துக்கணும்.'

'பாஸு, அங்க இருக்கிற பஞ்ச பாத்திர உத்தரணிய‌ எடுத்துண்டு வந்து ஒரு தடவை என் முன்னாடி bபாவமா ஆசமனம் பண்ணி காமி.'

பஞ்ச பாத்ர உத்தரணி சகிதம் வந்து அவருக்கு முன் அவர் சொல்லிக் கொடுத்ததை போல ஒருமுறை ஆசமனம் செய்து காண்பிக்கிறேன்.

'அவ்வளவு தாண்டா பாஸு. இப்படி பண்றத என்னிக்கும் மறக்கக்கூடாது. சரியா?'

'சரி இப்ப மூணு தடவை அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ அப்படின்னு சொல்லிண்டு உத்தரணி ஜலத்த உள்ள செலுத்திண்டுட்ட. அதோட ஆசமனம் முடிஞ்சுடறதா? இல்லையோண்ணோ? அப்புறம் என்ன பண்ற?'

இப்போது நான் சொல்கிறேன் அவரிடம். கேசவா நாராயணா மாதவா.... அப்படின்னு சொல்வேன் மாமா.'

'வெரி குட். ஆனா அந்த பன்னெண்டு நாமாக்களை சொல்லிண்டே நம்மளோட வாய் பகுதிகள் அதாவது கன்னங்கள், கண்கள், காதுகள் இருதய பகுதி அப்புறம் கடைசியா சிரசு அதாவது தலை இதை எல்லாத்தையும் முறைப்படி தொடுகிறோமா இல்லையா?'

'இப்படி பண்றதுல ஒரு சின்ன விஷயம் இருக்கு. இன்னன்ன விரல்கள் இன்னன்ன ஸ்தானத்திற்கு அப்படின்னு விதி இருக்கு.'

'நம்மளோட கட்ட விரலும் வாயும் அக்னியோட ஸ்தானமா சொல்லப்பட்டிருக்கு. அதனால அதை இரண்டையும் கேசவா நாராயணா என்ற நாமாக்கள் மூலமா கனெக்ட் பண்றோம்.'

'அதே மாதிரி பவித்ர விரலும் கண்களும் சூரியனுடைய ஸ்தானமா சொல்லப்பட்டிருக்கு. அதனால பவித்ர விரலால வலது இடது கண்களை முறைப்படி அடுத்த இரண்டு நாமாக்களான மாதவா கோவிந்தா அப்படின்னு சொல்லி தொட்டுக்கறோம்.'

'ஆள்காட்டி விரலும் நம்ம நாசிகளும், அதாவது மூக்கோட ரெண்டு பக்கம், வாயுவோட ஸ்தானம். விஷ்ணோ மதுசூதன அப்படிங்கற நாமாக்களை சொல்லிண்டு கனெக்ட் பண்றோம்.'

'சுண்டு விரலும் காதுகளும் இது மாதிரியே இந்திரனுடைய ஸ்தானமா இருக்கு. இதுக்கு நாமாக்கள் த்ரிவிக்கிரம வாமன.'

'இப்படியே நடு விரலும் தோள்களும் பிரஜாபதியோட ஸ்தானமா அமையறது. ஸ்ரீதர ரிஷிகேஷ என்கிற நாமாக்கள் தோள்களை நடுவிரலால தொடும்போது சொல்லப்படறது.'

'அடுத்தபடியா உள்ளங்கையை ஹ்ருதயத்துக்கு பக்கத்துல வெச்சிண்டு பத்மநாபா அப்படிங்கற நாமத்த சொல்றோம். சில வாத்தியார்கள் பத்மநாபா அப்படின்னு சொல்லிண்டு நாபிய தொட்டுக்கணும்னு சொல்லிக்கொடுப்பா. அதுவும் தப்பு இல்ல. பகவான ஹ்ரதயத்தில வெச்சுக்கரதும் ஆதாரத்துலேயே இருத்திக் கரதும் சரிதானே?'

'கடைசியா அதே உள்ளங்கையை சிரசுல உச்சந்தலையில வெச்சு தாமோதரான்னு சொல்றோம்.'

'இப்படி ஒவ்வொரு உறுப்பையும் பகவன் நாமாக்கள உச்சரிண்டே சொல்லும்போது அந்தந்த உறுப்புகள் அந்தந்த ஸ்தானாதிபதிகள் அனுக்கரஹங்களோட நீ சந்தியா வந்தன ஜபத்த ஆரம்பிக்க ஆக்டிவேட் பண்ணிக்கறோம்னு ஐதீகம்.'

'தொடு உணர்ச்சி மூலமா அங்கங்களை இயக்கறத பத்தி நாம விஞ்ஞானத்தில படிக்கிற மாதிரி அப்படின்னும் புரிஞ்சிக்கலாம். நாமாக்களோட ஒலிகளும் இதுக்கு ரொம்ப ஹெல்ப் பண்றது.'

'இதோட இந்த கிளாஸ முடிச்சிக்கறேன். அடுத்த வகுப்புல பிராணாயாமம் பத்தி சொல்லித்தரேன். சரியா?'

'மாமா, நடுப்புல கணேச வந்தனம் இருக்கே? ‌ அத விட்டுட்டேளே.'

'இத பாருடா.. எங்க பாஸு எவ்வளவு புத்திசாலி? அடுத்த கிளாசுக்கு வரும்போது அதையும் சொல்லித்தரேன். இந்த ஆசமனத்திலேயே இன்னொரு விஷயம் விட்டுப்போச்சு. என்ன ஞாபகப்படுத்து மறக்காம. அதையும் பார்த்துடுவோம்.'

'மாமா நான் இப்ப இன்னொரு தடவை ஆசமனம் பண்ணி காமிக்கிறேன். சரியா இருக்கான்னு பார்க்கிறேளா?'

டெமோ செய்து காட்டுகிறேன். ஓரிரண்டு தவறுகளை திருத்துகிறார்.

தொடரும்.

மனதோடுயாகம் - பகுதி 5

பகுதி 5

மறுநாள் அவர் சொல்லிய நேரத்திற்கு மடத்திற்கு வருகிறேன்.

'என்னடா லேட் ஆறது இன்னும் பாஸு வரலையேன்னு யோசிச்சிண்டே இருந்தேன்.'

'இல்லையே மாமா. சரியாத்தானே வந்திருக்கேன்.'

'சரியாவா? அங்க வச்சிருக்கிற கடிகாரத்தில ஏழரை ஆகறது பாரு.'

'ஏழரையா!!! இருக்காதே மாமா? இன்னும் ஏழே ஆகல மாமா. மடத்து கடிகாரம் ரிப்பேர் என்று நினைக்கிறேன்.'

கடிகாரத்தை உற்றுப் பார்த்ததில் காலையிலேயே அது தன் ஓட்டத்தை நிறுத்தியிருப்பதை பார்க்கிறோம். உத்தேசமாக கடிகார முட்களை ஏழு மணிக்கு திருப்பிவிட்டு அதற்கு சாவி கொடுக்கிறேன்.

வழக்கம்போல் தேக்கு மணை. பிரப்பம்பாய். ஸ்வாமி நமஸ்காரம். குரு வந்தனம் அபிவாதயே உடன் கூடிய.

'அபிவாதயே சொல்லும்போது பாஸு நிறுத்தி நிதானமா சொல்லணும். நீ என்ன கோத்திரம் உன் ஷர்மா என்ன அப்படிங்கிறத நீ நமஸ்காரம் பண்றவா காதுல கணீர்னு விழணும். ஏனோ தானோன்னு அபிவாதயே இருக்கப்படாது, புரிஞ்சுதா?'

'இன்னொரு தடவை வேணா சொல்லிடட்டுமா மாமா.'

'பரவாயில்லை. நாளைலேந்து கரெக்டா சொல்லு.'

'நேத்திக்கு கத்துண்ட விஷயமெல்லாம் நன்னா ஞாபகம் இருக்கோன்னோ?'

'நீங்க எந்த கேள்விகள் கேட்பேள்னு கூட கெஸ் பண்ணி அதுக்கும் பதில்கள தயாரா வெச்சிண்டிருக்கேன் மாமா.'

'நேக்கு தெரியும் உன் கெட்டிக்கார தனத்த பத்தி. பரீட்சைக்காக மார்க்குக்காக படிக்கிறத விட என்னிக்கும் மறக்காத அளவுக்கு மனசுல ஏத்திக்கறது தான் ஒசத்தி. சரி பாடத்த ஆரம்பிப்போமா?'

'ஏன் மாமா, ஒரு கேள்வி கூட கேட்க மாட்டேளா நேத்திக்கு நீங்க சொல்லிக் கொடுத்ததுல?'

'சரி கேள்வின்னு வேண்டாம். நேத்திக்கு கிளாஸ்ல என்ன கத்துண்டேன்னு நீயே சொல்லு.'

சந்தியாவந்தனத்தில் இருக்கும் மூன்று பிரதான விஷயங்களான அர்க்ய பிரதானம் பிராணாயாமம் ஜபம் இவற்றில் ஆரம்பித்து ஸ்நான வகைகள் முடிய அவர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் வரிசையாக கூறுகிறேன்.

'சபாஷ் சபாஷ்.... பரவாயில்லையே எதையும் மறக்காம புட்டு புட்டு வெக்கறயே.'

பெருமித வெட்கம் கலந்த சிரிப்பு என்னிடத்தில். அதோடு நான் அமர்ந்து இருந்த பிரப்பம் பாய் பறக்கும் பாயாக நொடிப்பொழுதில் மாறி மன்னார்குடி முழுவதும் சுற்றிவிட்டு மடத்திற்கு வந்த உணர்வு. இருக்காதா பின்ன? அசத்திட்டோமுல்ல.

'பாஸு, டெய்லி சந்தியாவந்தனம் பண்றியே. அது ரெண்டு பார்ட்டா இருக்கிற மாதிரி தோண்றதா நோக்கு?'

'ஆமாம் மாமா. காயத்ரி ஜபம் பண்றதுக்கு முன்னாடியும் பின்னாடியுமா ரெண்டு பகுதியா இருக்கிற மாதிரி எனக்கும் தோண்றது மாமா.'

'நீ சொல்றது சரிதான். சந்தியாவந்தனத்த ரெண்டு பாகமா பிரிச்சுதான் வெச்சிருக்கா. பூர்வ பாகம் அப்படின்னு ஒண்ணும் உத்தர பாகம் அப்படின்னு ஒண்ணுமா வடிவமச்சிருக்கா.'

'பூர்வ பாகத்துல ஆசமனம், பிள்ளையார் துதி, பிராணாயாமம், சங்கல்பம், மார்ஜனம், ப்ராசனம், புனர் மார்ஜனம், அர்க்ய பிரதானம், பிராயச்சித்தார்த்தம், ஐக்யானுஸந்தானம், தேவ தர்ப்பணம்.... இதெல்லாம் வரது.'

'சிலதுக்கு மந்திரங்கள் உனக்கு தெரிஞ்சிருந்தாலும் நான் சொல்ற தலைப்புகள் சிலது உனக்கு புரிபடாம இருக்கலாம். கவலப்படாத. நான் நிறுத்தி நிதானமா உனக்கு சொல்லி தரேன். சரியா?'

'இந்த உத்தர பாகத்தில என்னென்ன வரது? ஜப சங்கல்பம் வரது. அப்புறம் பிரணவ ஜபம், பிராணாயாமம், காயத்ரி ஆவாஹனம், காயத்ரீ ஜபம், காயத்ரி உபஸ்தானம், சூரிய உபஸ்தானம், சமஷ்டி அபிவாதம், அப்புறம் திக்குகள நோக்கி திசைகளோட அதிபதிகள வந்தனம் செய்யறது, எமன துதிக்கறது, ருத்ரன துதிக்கறது, அப்பறம் ஸ்ரீமன் நாராயணன சூரியநாராயண வடிவுல த்யானம் பண்ணி நமஸ்காரம் பண்றது. கடைசியா சமர்ப்பணம் பண்ணி ரக்ஷ இட்டுக்கறது. எதையும் விடலன்னு தான் நெனைக்கிறேன்.'
  
'என்னடா அடுக்கிண்டே போறாளே மாமா. நாம இவ்வளவுமா பண்றோம்ன்னு பிரமிப்பா இருக்கா உனக்கு? இந்த லிஸ்ட்ல காயத்ரி ஜபத்தை தவிர மத்த எல்லாமே சித்த சித்த நேரம் எடுக்கிற மந்திரங்கள் தானே. அதனால பெருசா போட்டு மண்டைய ஒடச்சுக்காத. மந்திரங்கள் எல்லாம் மனப்பாடமா தெரிஞ்சுடுத்துன்னா காயத்ரீ ஜபத்தை தவிர மத்த எல்லாத்துக்குமே மொத்தமாவே பத்து நிமிஷத்துக்கு மேல ஆகாது.'

'பாதி பேரு என்ன நெனைக்கிறான்னா சந்தியாவந்தனம் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும். நம்மளோட மத்த வேலைகள் எல்லாம் கெட்டுப் போயிடும்னு அப்படின்னு தனக்குத் தானே சந்தியாவந்தனத்து மேல பயத்த கொடுத்துண்டுடறா?'

'நீ இப்ப சந்தியாவந்தனத்த பத்தி தெரிஞ்சிக்கிற மாதிரி எல்லாரும் தெரிஞ்சுண்டா இத செய்யறதுல எவ்வளவு பலன்கள் இருக்கு அப்படின்னு புரியும். நாங்கள்லாம் இதை எல்லாத்தையும் எடுத்து சொன்னாலும் அசிரத்தையோடத்தான் இருக்கா. என்ன பண்றது?'

'மாமா ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா உங்கள?'

'கேளு பாஸு. எந்த விஷயத்தை கத்துக்கும் போதும் சந்தேகத்தை மனசுல வெச்சுண்டு கத்துக்க கூடாது. தாராளமா கேளு.'

'பிராமணா மாத்திரம்தான் பூணல் போட்டுப்பாளா?'

'யார் சொன்னா அப்படி? க்ஷத்ரியா போடுப்பா வைசியா போடுப்பா. அவாளுக்கும் மந்திரம் ஜபங்கள் எல்லாம் உண்டு. என்ன ஒண்ணு பிராமணா எட்டு வயசுக்குள்ள உபநயனம் பண்ணிண்டனும். ஆனா அவாளுக்கு 12, 16 வயசுகள் வரைக்கும் அலவ்டு. புரிஞ்சுதா?'

'உபநயனம் பண்ணிண்டு சந்தியாவந்தனம் பண்ணாம இருக்கறவாள அசுத்தமானவா எந்தக் கர்மத்துக்கும் லாயக்கு இல்லாதவான்னு கூட சொல்லுவா. தீட்டு நாட்கள்ல கூட பிராணாயாமத்த மாத்ரம் தவிர்த்துட்டு சந்தியாவந்தனத்த செய்யணும்னுன்னே சொல்லியிருக்கு பல நூல்கள்ல.'

'சரி, இப்ப கொஞ்சம் கொஞ்சமா சந்தியாவந்தனத்துக்கு உள்ளே போகலாமா? முதல்ல பூர்வ பாக மந்திரங்களோட அர்த்தங்கள்லேந்து ஆரம்பிப்போம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயத்தை சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன். சரியா?'

'பிரம்மாவோட தவப் பயனால தோன்றிய பரதேவதை க்கு பேரு ஸந்த்யா. அந்த தேவதையை ஹ்ருதயத்துக்குள்ள கொண்டு வந்து அதாவது நம்ம மனசுல அவள கெட்டியமா ஆசனம் போட்டு உட்கார வச்சுட்டு லோகத்துக்கே பிரத்யக்ஷாமா சாட்சியா இருக்கற சூரிய பகவான பிரார்த்தன பண்றதுக்கு பேர்தான் சந்தியாவந்தனம். டெய்லி எப்ப சூரியன் வரும்? டெய்லி எப்ப சூரியன் அஸ்தமனம் ஆகும்? கார்த்தால உதயம் சாயந்தரம் அஸ்தமனம் இல்லையா? அந்த ரெண்டு நேரமும் ரொம்ப விசேஷமானது. ஏன்னா ராத்திரி முடிஞ்சி பகல். பகல் முடிஞ்சு ராத்திரி. அந்த நேரங்கள தான் சந்தி அப்படின்னு சொல்லுவா. பகலும் இரவும் சந்திக்கிறது அப்படின்னு தமிழ்ல புரிஞ்சுக்கோ. தினமும் வர இந்த ரெண்டு நேரமும் நமக்கு நிறைய ஸம்பத்துக்கள சூரியக் கதிர்கள் மூலம் கொடுக்கக்கூடியது. அதனால இந்த இரண்டு நேரங்கள நாம தவறாம பயன்படுத்தி, அதாவது சூரிய பகவான பிரார்த்தனை பண்ணி ஸந்தியா தேவதையோட அனுக்கிரஹத்தை பெறணும். இந்த ஒட்டுமொத்த பிரார்த்தனை மந்திர ஒலிகள் மூலமாகவும், யோக வழிகள் மூலமாகவும், ஜபங்களோட சக்திகள் மூலமாவும் நடக்கணும். எந்த காரணத்தைக் கொண்டும் இந்த ரெண்டு சந்தியா வேளைகள்ல நாம எதையும் சாப்பிடக்கூடாது அப்புறம் தூங்கவே கூடாது.'

'மாமா எனக்கு ஒரு டவுட். நீங்க சொல்றதைப் பார்த்தா சந்தி நேரங்கள் கார்த்தாலயும் சாயந்திரமும் தானே வர்றது. அப்படின்னா மாத்யான்னிகம்னு ஒன்னு இருக்கே. அது ஏன் மாமா?'

'அவசர குடுக்கை. சொல்லாம விட்டுடுவேனா. கொஞ்சம் பொறுமை வேணும் உனக்கு. நானே பிற்பாடு சொல்றேன் மாத்யான்னிகம் எதுக்கு பண்ணனும்னு.'

'சாரி மாமா. டக்குனு தோணித்து. கேட்டுட்டேன்.'

'பரவாயில்ல பாஸு. கத்துகிறதல நோக்கு ஆர்வம் இருக்கிறதால தானே கேள்விகள் வர்றது உன்கிட்டேந்து. இதுல தப்பு ஒண்ணும் இல்ல.'

'மாமா எனக்கு இன்னொரு கேள்வி கேட்கணும் போல இருக்கு. கேட்கட்டுமா?'

'கேளேன். தெரிஞ்சா சொல்றேன்.'

'மாமா இதான வேண்டாங்கறது.'

சிரித்துக்கொண்டே என்னை கேட்க சொல்கிறார்.

'நீங்க பேசும்போது யோக வழிகள் என்று சொன்னேளே. யோகத்திற்கும் சந்தியாவந்தனத்துக்கும் சம்பந்தம் இருக்கா மாமா?'

'நல்ல கேள்வி பாஸு. கண்டிப்பா இந்த சந்தியாவந்தனமே யோகத்தை மையப்படுத்திதான் அமஞ்சிருக்குன்னு கூட சொல்லலாம். மனச‌ ஒரு நிலைப் படுத்தறது, மூச்சுப்பயிற்சி, மந்திரங்களோட சேர்ந்து மனச சுத்தப்படுத்தறது, சில நியதிகளோட முத்திரைகள பிரயோகம் பண்றது... இவை எல்லாமே யோகம் சம்பந்தப்பட்டது.'

'எக்ஸலண்ட் மாமா.'

'பார்த்தியா. சிஷ்யன் கிட்டேயே பாரட்ட வாங்கிட்டேன்.'

'போங்கோ மாமா. வேணும்னே என்ன மடக்கறேள்.'

'சரி சரி சரி சரி. நடுப்பற நடுப்பற இப்படி எல்லாமும் ஹாஸ்யமா பேசிண்டே கத்துண்டாத்தான ஸ்வாரஸ்யமா இருக்கும்? அதான் அப்படி சொன்னேன்.'

'சரி பாஸு. இன்னிக்கு இதோட நிறுத்திக்கலாம். வேணு மாமாவாத்துல நாளைக்கு சிரார்த்தம். அவாத்துக்கு போய் அது விஷயமா சித்த பேச வேண்டியிருக்கு. இரண்டு நாள் மாமா பிசி. நானே உங்க ஆத்துல வந்து நீ எப்ப அடுத்த கிளாஸுக்கு வரணும்னு முதல் நாளே வந்து சொல்றேன். அப்ப வந்தா போதும்.'

மடத்தின் ஜன்னல்களை சாத்துகிறேன். உள்ளே இருக்கும் கதவுகளை சாத்தி தாழ்பாள் போடுகிறேன். வாசல் கதவை அவர் சாத்தி பூட்டு போட நான் வழக்கம்போல இழுத்துப் பார்த்துவிட்டு இருவரும் கிளம்புகிறோம்.

தொடரும்

மனதோடுயாகம் - பகுதி 4

பகுதி 4

இரு தினங்களில் மீண்டும் எங்களது சந்திப்பு பாண்டுரங்க மடத்தில்.

'உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா பாஸு.  சரியா டயத்துக்கு வந்துடறது தான்.'

இப்படி ரகு சாஸ்திரிகள் சொன்னவுடன் கொஞ்சம் கூலா இருந்தது எனக்கு.  இருப்பினும் ஒரு சிரிப்பு.  அதில் என் கள்ளத்தனம் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

'ஏண்டா சிரிக்கிற?  சரியாத்தானே சொல்றேன்.'

'ஒண்ணுமில்ல மாமா.  அதுக்கு காரணம் எங்க அம்மாவும் தான்.  அடிக்கடி ஞாபக படுத்திண்டே இருப்பா.  மாமா உனக்காக காத்துண்டு இருப்பா... அவர் கோச்சுக்கிர மாதிரி லேட்டா போக கூடாதுன்னு தார் குச்சி போட்டுண்டே இருப்பா.'

'அதான் விஷயமா?'

'எனக்கும் டயத்துக்கு வரணும்னு தோணும்.  அம்மாவும் ஞாபகப்படுத்திண்டே இருக்கறதால மறக்கறதுக்கு சான்ஸே இருக்காது.'

தலையிலே ஒரு செல்லக்குட்டு அவரிடமிருந்து.

'சரி ஆரம்பிச்சுடுவோமா?'

வழக்கம்போல கிழக்கு மேற்காக உட்காருகிறோம்.  தேக்கு மணையில் அவர்.  பிரப்பம்பாயில் நான்.

'மாமா நமஸ்காரம் பண்றேன்.'

'ஸ்வாமிக்கு முதல்ல பண்ணிட்டு அப்புறம் எனக்கு பண்ணு.'

அப்படியே செய்துவிட்டு அவர் முன் அமர்கிறேன். 

'சந்தியாவந்தனமே மூணு விஷயத்தில்தான் இருக்கு.  ஒண்ணு அர்க்ய பிரதானம் இரண்டாவது பிராணாயாமம் அப்புறம் ஜபம் அதாவது காயத்ரி ஜபம்.'

'இதுல அர்க்ய பிரதானம் தான் சந்தியாவந்தனத்துக்கே ஜீவநாடியா இருக்கு.  இந்த அர்க்ய பிரதானத்துல மார்ஜனமும் ப்ராசனமும் அடக்கம்.  என்னடா புதுசு புதுசா மார்ஜனம் ப்ராசனம் அப்படி இப்படின்னு என்னென்னவோ சொல்றேனேன்னு நெனைக்கறியா.  முதல்ல சொல்றத நன்னா காது கொடுத்து கேட்டுக்கோ.  அப்புறம் ஒவ்வொன்னா சொல்லி புரிய வெக்கறேன்.'

'பிரம்ம தேஜஸ நமக்கு கொடுக்கப் போற சக்திவாய்ந்த காயத்ரி முன்னாடி நாம நிக்கறதுக்குள்ள நாம நம்மள சுத்தப்படுத்திண்டு நம்மள சுத்தி இருக்கிற சூழலையும் சுத்தப்படுத்திக்கணும்.  தூய தமிழ்ல சொல்றதா இருந்தா அகத்தூய்மை புறத்தூய்மை ரெண்டுலயும் நாம கவனமா இருக்கணும்.  இப்படி நம்மள தூய்மைப்படுத்தறதுக்கு சில மந்திரங்கள் சந்தியாவந்தனத்தில இருக்கு.  ப்ரோக்ஷன மந்திரம்னு சுருக்கமா கூட சொல்லலாம்.'

இந்த இடத்தில் சற்று நிறுத்தி என்னைப் பார்க்கிறார்.  அவரிடம் கேட்க நினைக்கும் கேள்வி என் நெற்றியில் மெல்லிய சந்தேக ரேகையாக அவர் பார்த்திருக்க வேண்டும்.

'நீ என்ன கேட்கப் போறேங்க.றது எனக்கு புரியறது.  நாமதான் கை கால் முகம் எல்லாம் அலம்பிண்டு நெத்தி இட்டுண்டு சுத்தமா தானே சந்தி பண்ண உட்கார்றோம்.  அப்புறம் எதுக்கு தனியா மார்ஜனம்? ப்ரோக்ஷணம்? அப்படின்னு தானே கேட்க நெனைக்கறே?'

இதுதான் குருவுக்கும் சிஷ்யக்கும் இடையே நடக்கும் டிரான்ஸ்மிஷனா?  நான் கேட்க நினைப்பதை அவர் புரிந்துகொண்டு அந்தக் கேள்வியை அவரே எடுத்துரைத்துவிட்டு தொடர்வது சிக்ஷையின் பிரத்தியேகம் போலிருக்கிறது.

என்னுடைய ஆமோதிக்கும் அசட்டு சிரிப்பை பார்த்துவிட்டு அவரே தொடர்கிறார்.

'ஸ்நானத்துல அஞ்சு தினுஸு இருக்கு டா பாஸு.  சாதாரணமா பக்கெட்டையும் மக்கையும் (mug) வெச்சிண்டு உடம்புல ஊத்திண்டு ஸ்னானம் பண்றது.  கிணத்திலேந்து எறைச்சி ஊத்திக்கிறது, ஆறு குளங்கள்ல இறங்கி குளிக்கறது ... இதெல்லாம் வாருணம்னு பேரு.  வருணன் சம்பந்தப்பட்டதால இத வாருணம் அப்படின்னு சொல்றா.  இதுலேயே முக்கிய ஸ்நானம்னா நீர்நிலைல இறங்கி குளிக்கிறது தான்.  மத்ததெல்லாம் ரெண்டாம் பட்சம்தான்.'

'அடுத்தாப்புல பார்த்தோம்னா விபூதி ஸ்நானம்.  இது அக்னி சம்பந்தப்பட்டது.  பசுவோட விறட்டிய பஸ்பமாக்கி ஜலம் விட்டு குழைக்காம அப்படியே பூசிக்கிறது.  இத ஆக்நேயம்னு  சொல்லுவா இல்லாட்டி பஸ்மோ தூளனம்னும் சொல்லுவா.'

'உனக்கு மூணாவதா ஒரு ஆச்சரியமான ஸ்நானத்தை பத்தி சொல்ல போறேன்.  பசுக்கள் கூட்டமா போயிண்டு இருக்கறபோது கிளம்புகிற குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கா ரிஷிகள்லாம். அத ‘கோ தூளி' ன்னு சொல்லுவா.  பகவான் பாலக்ருஷ்ணனே இப்படித்தான் நீல மேக ச்யாமள ரூபத்துல பசுக்களின் தூள் சந்தனப் பொடி தூவினாற் போலப் படிஞ்சு “கோதூளீ தூஸரித”னாக இருந்தானாம். பசுக்கள் மந்தை சந்தையாக போற போது, காத்துல சலனம் அங்கே ஜாஸ்தியாகி, குளம்படி மண் நிறையக் கிளம்பும். இந்த கோதூளி நம்மை அபிஷேகம் பண்ணும்படியாக அங்க போய் நிண்ணுண்டா அதுவும் அஞ்சுல ஒரு தினுஸு ஸ்நானம் தான். இதுக்கு  ‘வாயவ்யம்’ என்று பெயர் சூட்டியிருக்கா – அதாவது வாயு என்கிற காற்றின் ஸம்பந்தமுடையதுன்னு அர்த்தம். காற்றால் தானே தூளி பறக்கிறது இல்லையா?'

'அடுத்தது நாம பேசப்போறது திவ்ய ஸநானத்த பத்தி.  இது ஒரு ஆச்சரியமான ஸ்னானம்.  இன்னும் சொல்லப் போனா இந்த ஸ்தானத்துக்கு  கொடுத்து வெச்சிருக்கணும்னு கூட சொல்லலாம்.  அபூர்வமாக சில சமயம் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பெய்யுமோன்னோ? பார்த்துருக்கியா?அந்த மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்கு ஸமானம். அதனால அந்த ஜலத்தில் குளிக்கறதுக்கு ‘திவ்யஸ்நானம்’ னு பேர். எப்போதாவது இப்படி வெய்யிலோடு மழையும்  பெய்ஞ்சா உடனே நாம அதில் போய் நின்னுண்டணும்.'

'கடைசியா நாம பாக்கப் போகற ஸ்னானம் ப்ராஹ்மம்.  நாங்க வாத்யாரெல்லாம் சேர்ந்து பூஜை பண்ணும்போது பார்த்திருப்பியே.  ஒரு கலசத்தை வெச்சு மந்திரம் எல்லாம் ஜபிச்சு கடைசியா எல்லாருக்கும் தர்ப்பை கட்டால ப்ரோக்ஷணம் செய்வோமே?  அந்த மாதிரி வகை தான் வேத ஸ்நானாம் அல்லது ப்ராஹ்ம ஸ்நானம் அப்படின்னு சொல்லுவா.  புரிஞ்சுதா நோக்கு?'

'பார்க்கப்போனா எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான்! எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈஸ்வர ஸ்மரணையோடு, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்றதாத்தானே அத்தன ஆசாரங்களும் உருவாக்கியிருக்கா இல்லையா? அதுலேயே சிறப்பா வருணனையோ, வேறு ஒரு தேவதையையோ மந்திரபூர்வமாக ஒரு கும்பத்தில ஆவாஹனம் பண்ணி அதுக்கப்புறம் அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்றதுக்கு ‘ப்ராஹ்மம்’ னு பேர் வந்திருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும்.'

'உடம்பு அசக்தமாய் எந்த விதத்திலும் வாருண ஸ்நானம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த மந்திர தீர்த்த ப்ரோக்ஷணமே ‘கௌண’ ஸ்நானமாகறது.

பஞ்சபூதங்கள் என்னும் அஞ்சு பூதங்கள ஐந்து ஸ்நானங்களோட ஒப்பிட்டு  பார்த்தோமேயானால், வாருணம்தான் அப்பு; ஆக்நேயம் (விபூதி) என்பது தேயு; கோதூளி என்கிற வாயவ்யம் வாயு. இவை தவிர ப்ராஹ்மம், திவ்யம் என்று இரண்டு சொன்னேன் இல்லையா?   பஞ்ச பூதங்களில் பிருத்வியும் ஆகாசமும் விட்டுப் போயிருக்கோன்னோ? மந்தரங்களெல்லாம் ஆகாசத்தில்தான் சப்த தன்மாத்ரையாக வியாபித்திருக்கின்றன; அவற்றையே ரிஷிகள், யோக சக்தியால் நமக்குப் பிடிச்சு கொடுத்திருக்கா.'

'சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களை பஞ்சபூதங்களில் ஒவ்வொன்று ஆச்ரயித்திருப்பதாகச் சொல்லும்போது சப்தத்துக்குத்தான் ஆகாசம். இங்கே சப்தம் என்பது வேத மந்திரமே. ஆனதால் மந்திர தீர்த்தப் புரோக்ஷணமான ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ ஆகாச ஸம்பந்தமானதுன்னு புரிஞ்சிக்கலாம்.'

'வெய்யிலின்போது பெய்யும் மழையான ‘திவ்ய’மும் வானத்துலேந்து அதாவது தேவலோகத்திலேந்து – வரதாக சொல்ல படறதால ஒருவகையில் இது ஆகாச பூதத்தின் ஸம்பந்தமுடையதே.'

'பிருத்வி பாக்கி இருக்கிறது. ‘வாயவ்யம்’ என்று சொன்னதில் கோதூளியில் தானே நிக்கறோம்? காற்றினால் பூமிக்கு மேலே எழுந்து அந்தத் தூளிகள் நம்ம மேல படியதால அதுக்கு ‘வாயவ்யம்’ னு பேர் இருந்தாலும், வாஸ்தவத்தில் நம்மை அபிஷேகிக்கிற வாஸ்துவான குளம்படி மண்ணே பிருத்விதான். ஜெனரல் ரூலான வாருண ஸ்நானத்திலும் சுத்திக்காகத் தேய்த்துக் கொள்ளும் மிருத்திகை [புற்றுமண்] பிருத்விதான். 

'இப்படியாக ஐம் பூதங்களுக்காக ஐந்து ஸ்நான வகைகள். முடிவில் எதுவானாலும் ஆத்மாவைப் பாபம் போகக் குளிப்பாட்டுவதற்காகவே ஏற்படுத்தியிருக்கான்னு புரிஞ்சிக்கணும்.'

'ஸ்நானம் அஞ்சு வகை என்கறது மட்டுமில்லை. அவற்றில் ‘முக்ய’ ஸ்நானமான நீராடலுக்கே அஞ்சு அங்கங்கள் சொல்லியிருக்கு.  முடிஞ்சா அத அப்புறமா சொல்லித் தரேன்.'

'வேத ஸுக்தங்களைச் சொல்வது ‘ஸுக்த படனம்’. ‘மார்ஜனம்’ என்பது ‘ஆபோ ஹி ஷ்டா’முதலிய மந்திரத்தால் முதல்ல ஜலத்த புரோக்ஷணம் பண்ணிக்கறது'

நான் பிரமித்துப் போனேன்.  குளியல்னு நாம ஸாமான்யமாகத் சொல்றதுக்கு இத்தனை லக்ஷணங்களா! விதிகளா!!  மார்ஜனம்னு அவர் ஆரம்பிச்சு எவ்வளவு விஷயங்களை சொல்லி இருக்கார்?

அவர் எனக்கு உபதேசித்த ஸ்நான வகைகள் எனக்கு வியப்பை கொடுத்ததில் ஆச்சரியம் இருக்கா என்ன?

'என்ன பாஸு.  பிரமிப்பா இருக்காக்கும்.  ஸ்நானம் செய்யறதுக்கு இன்னம் அநேக ரூல்கள் இருக்கு. வெளி சுத்தத்துக்கு மாத்திரம்னா அழுக்குப் போக நன்றாகத் தேய்த்துக் குளித்தால் மட்டும் போதும்னு விட்டுடலாம்.  உள் சுத்தமும் நமக்கு தேவைங்கறத புரிஞ்சுண்டோன்னா  தெரியாத, புரியாத (பிடிக்காத கூடத்தான்!) ரூல்களையும் இப்படி சுத்தியான ரிஷிகள் கொடுத்துள்ள சாஸ்திரப்பிரகாரம் ஃபாலோ பண்ணணும்.  அதபத்தியெல்லாம் நாளைக்கு பேசுவோமா?'

'ஏன் மாமா நாளைக்கு?  எங்கேயாவது இப்ப வெளியே போக போறேளா?'

'அதுக்காக இல்ல பாஸு.  ஒரு சிஷ்யனுக்கு சொல்லிக்கொடுக்கிறச்சே அவன் மனசுல ரொம்ப பாடங்களோட பாரத்த ஏத்தக்கூடாது.  கொஞ்சம் கொஞ்சமா நீ கத்துண்டாதான் மனசுலயும் நிக்கும்.  எத்தனை வருஷம் ஆனாலும் மறக்கவும் மறக்காது.  நான் எங்க போப் போறேன்.  கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம் அவசரப்படாம.  சரியா?  நாளைக்கு நீ இங்க வரும்போது இன்னிக்கு நீ க்ரஹிச்சிண்ட விஷயத்துல கேள்வி கேட்பேன்.  கரெக்டா நீ பதில் சொல்றியான்னு பார்க்க போறேன்.'

'மாமா,  ஸ்கூல்ல தான் டெஸ்ட் வைக்கிறான்னா .... இங்கேயுமா?'

'நீதான் சமத்தாச்சே டா! கேள்விக்கெல்லாம் டாண் டாண்ணு  பதில் சொல்ல மாட்டியா என்ன?'

சிரிக்கிறேன்.  நமஸ்கரிக்கிறேன்.  மறுநாள் வருவதாக சொல்கிறேன். விடைபெறுகிறேன்.

தொடரும்.

மனதோடுயாகம் - பகுதி 3

பகுதி 3

பாண்டுரங்க மடத்திலிருந்து ஆத்துக்கு வரும்போது மணி ஒன்பதை தாண்டிவிட்டது.

'நன்னா கத்துண்டியா சந்தியாவந்தன மந்திரம் எல்லாத்தையும்.'

சாப்பிட்டுக் கொண்டே அம்மாவிடம் வாமனர் அவதாரம் பற்றிய அன்றைய சம்பாஷணைகளை சொல்கிறேன். என்னைப்போலவே அம்மாவும் ஆச்சரியத்துடன் அவைகளை கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாக இருந்தது.

'ஏம்மா இவ்வளவு உன்னிப்பா கேட்கிறியே. உனக்கு இந்த கதை தெரியாதா?'

'வாமனர்.. மூணடி மண்... தலையில் கால் வெச்சு அந்த அசுரன் கொட்டத்த அடக்கினது ... இது மாதிரி கொஞ்சமா தான் தெரியும். நீ இன்னிக்கு தெரிஞ்சுண்ட அளவுக்கு கூட தெரியாது. நீ நன்னா எல்லாத்தையும் கத்துக்கோ அது போதும். நீதான் பார்க்கறயே ... என்னோட உழைப்பு தான் என்னோட பகவான். நீ கத்துண்டு எனக்கு எல்லாத்தையும் டைம் கிடைக்கும்போது சொல்லிக் கொடு. தெரிஞ்சுக்கிறேன். '

அவளைச் சொல்லி குற்றமில்லை. எங்கள் வீட்டு நிலைமை ஒருத்தர் தேய்ந்தால்தான் இன்னொருத்தருடைய வளர்ச்சி. அம்மாவோட உழைப்புக்கும் என்னோட வளர்ச்சிக்கும் பகவான் குறுக்கே வந்து குழப்பம் செய்யாமல் இருந்தாலே போதும் என்கிற நிலையில்தான் கடவுள் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது என்பதைச் சொல்ல வருத்தமாக இருந்தாலும் அதுதானே உண்மை?

மறுநாள் டெஸ்ட்டுக்கான படிப்பை முடித்துவிட்டு படுக்க செல்கிறேன். உறக்கம் வருவதற்கு முன்பாக வாமன உருவம் ஓடிக்கொண்டிருந்தது.  

'ஒருத்தரை தண்டிக்கணும்னா வயசு வித்தியாசம் வேண்டாம் போல இருக்கே?'

இப்படியான கேள்விகளும் வந்து சென்ற பின்னர்தான் உடல் உறக்கம் கண்டது.

இரண்டு நாட்கள் கடந்தது தெரியாமல் சென்றது. ரகு சாஸ்திரிகள் என்னை மடத்துக்கு வரச்சொன்ன சனிக்கிழமை வந்துவிட்டது.

அவசர அவசரமாக சாயரட்சை சந்தியா வந்தனத்தை முடித்துக்கொண்டு மடத்துக்கு வந்துவிடுகிறேன். லேசாக சாத்தி வைத்திருந்த கதவை நான் திறந்து உள்ளே சென்றபோது ரகு சாஸ்திரிகள் தன் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தார். கதவை நான் திறந்தபோது ஏற்பட்ட க்ரீச் சத்தம் அவர் மௌனத்தை கலைத்திருக்க வேண்டும்.

சப்தம் வெளிப்படும் அளவிற்கு கதவை திறந்துவிட்டு மெல்ல திறந்து இருக்கலாமோ என்று வருத்தப்பட என்ன இருக்கிறது?

'வா பாஸு. பாண்டுரங்கனுக்கு நேவேத்தியம் காமிச்சிட்டு ஆரம்பிச்சுடலாம்.'

பாண்டுரங்க மடத்தில் அவர் காட்டும் நிவேதனத்தில் பல நாட்களில் சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ சுண்டலோ புளியோதரையோ நான் பார்த்தவரை இருந்ததில்லை. ஒரு மாம்பழம் அல்லது ஒரு சாத்துக்குடி அல்லது உதிர்த்த திராட்சைப் பழங்கள் பத்து பதினைந்து... இப்படித்தான் ஏதாவது இருக்கும். அன்றைக்கு இவைகள் கூட இல்லாமல் பத்து காய்ந்த திராட்சைகளை பாண்டுரங்கனுக்கு காண்பித்துவிட்டு இரண்டே இரண்டை தான் எடுத்துக்கொண்டு மற்ற எண்ணிக்கைகளை என்னிடமே கொடுத்துவிட்டார்.

கற்பூர ஆரத்திக்கு பிறகு என்னை பாண்டுரங்கனை நமஸ்கரிக்க சொல்லிவிட்டு அதன் பிறகு அவருக்கான என் நமஸ்காரத்தையும் அவர் ஏற்றுக்கொண்ட பின் மணைகளில் உட்காருகிறோம்.

'நாம அன்னிக்கு எந்த விஷயத்தைப் பத்தி பேசிண்டிருந்தோம்? ஞாபகம் இருக்கோண்ணோ பாஸு.'

அன்று அவரிடமிருந்து அறிந்த வாமனர் அவதாரம் பற்றிய விஷயங்களை முடிந்தவரை ஞாபகப்படுத்தி சொல்கிறேன்.

'பாஸு, அன்னிக்கி வாமனருக்கு எப்படி உபநயனம் நடந்ததுன்னு கேட்டியோன்னோ என்னை?'

'நீயே ஆர்வமா கேட்டதால சுருக்கமா சொல்லிட்டு நாம சந்தியா வந்தனத்துக்கு போகலாமா?'

சரி என்று சொல்லும் விதமாக என்னிடமிருந்து மண்டை ஆட்டல் கிடைத்தவுடன் ஆரம்பிக்கிறார்.

'வாமன மூர்த்தியாக அவதரிச்ச பகவானுக்கு உபநயனம் எப்பட நடந்ததுன்னு ஸ்ரீமத் பாகவதம் பிரமாதமா வர்ணிச்சிருக்கு.'

'வாமனருக்கு லோகத்துக்கே இன்னிக்கும் பிரத்யக்ஷமா இருக்கிற சூரிய பகவான்தான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிக்கிறார். பூணூலை தன் கையாலேயே பிரகஸ்பதி போட்டுவிடறார். பிரம்மச்சரியத்துக்கு ரக்ஷ மாதிரி இருக்கிற மூஞ்சி கயிற கஸ்யபர் பகவான் இடுப்புல கட்டறார். ஆயுளை விருத்தி பண்ணக்கூடிய சக்தி கொண்ட மான் தோல பூமாதேவி போத்தறாள். அதே மாதிரி பலாச தண்டம்னு ஒண்ண உன் கையில தண்டம் கொடுத்தாளே நோக்கு பூணூல் போடறச்சே? அத பகவானுக்கு யார் கொடுத்தா தெரியுமோ? ஓஷதிகளுக்கெல்லாம் அதிபதியான சோமன். அம்மா அதிதி கௌபீனத்த கட்டி விடுறா. கௌபீனம்னா என்னன்னு தெரியுமோன்னோ?'

இந்தக் கேள்விக்கு என்னிடமிருந்த வந்த வெட்கத்தையும் சிரிப்பையும் ரசித்துவிட்டு தொடர்கிறார்.

'அப்புறம் பிரம்மாவே அவருக்கு கமண்டலத்தை தன் கையால கொடுக்கிறார். ஞானத்தை கொடுக்கக்கூடிய சரஸ்வதி ஜெபமாலை கொடுக்கிறாள். குபேரன் பிக்ஷை பாத்திரத்தை கொடுத்தோண்ண உமாதேவியை வந்து பிக்ஷை இடறா. இப்படி எல்லாரும் வந்து இந்த உபநயனத்த வாமனருக்கு நடத்திக் கொடுத்ததால அவர் பிரம்ம தேஜஸோட ரொம்ப பிரகாசமா இருந்தார் அப்படின்னு ஸ்ரீமத் பாகவதம் ஸ்லாகிக்கிறது.'

'எனக்கும் இப்படி நடந்திருந்தா பிரம்ம தேஜஸ் கிடைச்சிருக்கும் இல்ல மாமா?'

அப்பாவியாக என்னுடைய கேள்வி இருந்தது என்பது எனக்கே தெரியும். இருவரும் சிரிக்கிறோம். ஆனாலும் அவருடைய பதில் எனக்கு ஆச்சரியமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.

'சரியான வயசுல உபநயனம் பண்ணிண்ட எந்த பாலகனும் அன்னிக்கு பிரம்ம தேஜஸோட தான் கண்ணுக்கு தெரியுவான். நீயும் அன்னிக்கு என் கண்ணுக்கு அப்படித்தான் தெரிஞ்ச.' 

'நான் சொன்னா நம்பணும். இப்படி சிரிக்க கூடாது. அன்னிக்கு இருந்த பிரம்ம தேஜஸ எப்போதும் காப்பாத்திக்கறது உன் கையில மட்டும்தானே இருக்கு. வேளா வேளைக்குக்கு சந்தி பண்ணிண்டு மந்திரங்களை உள்வாங்கி ஜபிச்சிண்டு பிரம்மச்சரியத்தை கடப்பிடிச்சுண்டு வந்தா நம்மள விட்டு எங்க போயிட போறது பிரம்ம தேஜஸ்?'

அவரிடம் பேசும்போது நிறைய உரிமைகளை எடுத்துக்கொள்வேன். குரு சிஷ்யன் என்ற நிலையைத் தாண்டி ஏதோ ஒரு தாய் மாமா பந்தம் இருந்தது என்றால் அது மிகையல்ல.

நான் உரிமைகளை எடுத்துக் கொள்வதற்கு அவர் என்றும் என்னை கண்டிக்காமல் இருந்தது கூட காரணமாக இருந்திருக்கலாம். என்னுடைய அசட்டுத்தனமான கேள்விகள் கூட பல சமயங்களில் விடைகள் பெற்றிருக்கின்றன.

'பாஸு நோக்கு இப்ப ஞாபகம் இருக்குமான்னு தெரியல. உபநயனம் அன்னிக்கி உன்ன ஒரு கல்லு மேல நிக்க வச்சு ஒரு மந்திரம் சொன்னேனே அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?'

என் முகத்தில் வெளிப்பட்ட ஆச்சர்யமும் ஆர்வமும் அவரை தொடர வைத்தது.

'இந்த கல்லு மாதிரி உடம்பும் உறுதிகொண்ட மனசும் உள்ளவனா நீ இருக்கணும். உன்னோட வாழ்க்கைக்கு தடையா இருக்கிறவாள நீ கிட்டக்க சேர்க்கப்ப்படாது.... இதுதான் அந்த மந்திரத்தோட அர்த்தம்.'

'மாமா, அந்த மந்திரத்தை எனக்காக ஒரு தடவை சொல்றேளா? ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.'

'ஓ.... தாராளமா சொல்றேனே.'

'ஆதிஷ்டேமம் அச்மானம்,
அஸ்ம இவ த்வம் ஸ்திரோ பவ/
அபிதிஷ்ட்ட ப்ரு தன்யத:/
ஸகஸ்வ ப்ருதனாயத://

'அதோட மாத்திரம் அந்த மந்திரம் முடியல. நீ பிரம்மச்சாரி ஆயிட்ட, சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யணும். முழிச்சுக்கோ தூங்காத.... அப்படின்னு பூணூல் போட்டுக்கர பசங்களுக்கான இன்ஸ்ட்ரக்ஷனோட அந்த மந்திரம் முடியும்.'

'இதிலேருந்து என்ன தெரியறது? உபநயனம் ஒரு பையனுக்கு பண்ணி வைக்கும் போது சொல்லப்படற மந்திரங்கள் அவனுக்கு பிரம்மதேஜஸ கொடுக்கும். அதுலேந்து அவன் தெனமும் செஞ்சிண்டு வர சந்தியாவந்தனம் அவனுக்கு அசாத்திய பலத்தையும் மனோ தைரியத்தையும் அவன் வாழ்க்கைக்கு தேவையான எல்லா அறிவையும் சந்தேகமில்லாமல் கொடுக்கறது. புரியறதா நன்னா உனக்கு?'

'நீ எதேச்சையா வாமனர் படத்த பார்க்கப் போயி எவ்வளவு கத்துண்டிருக்க பார்! உபநயனத்துல அளிக்கப்படற காயத்ரி மந்திரோபதேசம் தான் எல்லாத்தையும் முதலாவதாக இருக்கிறதால அத பிரம்ம உபதேசம் அப்படின்னு சொல்றா எல்லாரும்.'

ஏதோ என் மேல் மெல்ல மெல்ல அவர் மின்சாரத்தை எனக்கு தெரியாமலேயே பாய்ச்சிக் கொண்டிருந்த உணர்வு.

எதேச்சையாக நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நம்மை அறிவுப்பாதையில் அழைத்துச் செல்கிறது போல இருக்கிறது.

'மாமா, ஒரு நிமிஷம் டைம் தரேளா?'

இப்படி கேட்டுவிட்டு வாமனர் படத்தின் அருகே சென்று பகவானை உற்று நோக்குகிறேன்.

படத்தை பார்த்துவிட்டு உண்மையிலேயே அவர் ஸ்லாகித்த பிரம்ம தேஜஸ் என்னையும் பற்றிக் கொள்ளாதோ என்ற ஏக்கத்தில் அவரிடம் திரும்ப வருகிறேன்.

என் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் குளத்தால் அரை பார்வையோடு அவர் முன் அமர்கிறேன்.

'இன்னிக்கே மத்ததையும் ஆரம்பிக்கலாமா பாஸு?'

தெய்வ உணர்வில் பூரணமாக இருந்ததால் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது சாத்தியமாக இல்லை.

அதை புரிந்து கொண்டதாலோ என்னவோ தொடர்ச்சியை மற்றொரு நாளைக்கு அவராகவே தள்ளிப் போடுகிறார்.

தொடரும்.

மனதோடுயாகம் - பகுதி 2

பகுதி 2

மாலை விளையாட்டுக்கள் முடிந்து பரபரப்போடு ஆத்துக்குள் வருகிறேன். கடிகாரத்தை பார்க்கிறேன். மணி ஆறரை. கம்பி கொடியில் தொங்கிக்கொண்டிருந்த பிள்ளையார் துண்டை ஒரு சர்ர்ர்ர்.....

கைகால் மூஞ்சி அலம்பிண்டாச்சு. தொடச்சிண்டாச்சு. நெத்திக்கு இட்டுண்டாச்சு.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அம்மா கேட்கிறாள்:‌ 'சார் எந்த ட்ரெயினை பிடிக்க போறார்? அவசரம் அவசரமா எங்க கிளம்பறார்?'

சொல்கிறேன் அம்மாவிடம். எல்லாவற்றையும். அம்மாவுக்கு சந்தோஷம்.

'இந்தா 50 பைசா. இந்தா தனியா ஒரு பத்து பைசா வெச்சிக்கோ. போறச்சே தாத்தா கடைல வெத்தலை பாக்கு பழம் வாங்கிக்கோ. இந்த 50 பைசா வையும் தட்டுல வெச்சி மாமா கிட்ட குடுத்துட்டு நமஸ்காரம் பண்ணிக்கோ. அவர் சொல்லிக் கொடுக்கிறத நன்னா கிரஹிச்சுண்டு நன்னா கத்துக்கோ.'

'சரிம்மா.'

'அடுப்படியில உனக்காக கோதுமை கஞ்சி வச்சிருக்கேன். அதுல ரெண்டு டம்ளர் வளமுடன் குடிச்சிட்டு போ. கொஞ்சம் முன்ன பின்ன ஆனா நோக்கு பசி தாங்காது. கஞ்சிய குடிச்சிட்டு போனா கொஞ்சம் தெம்பா இருக்கும். மறக்காம அவர் நோக்கு குடுத்த சந்தியா வந்தன புஸ்தகத்தையும் மறக்காம எடுத்துண்டு போ.'

ஓட்டமும் நடையுமாக மடம் வந்து சேர்ந்தபோது சரியாக மணி ஏழு.

'வாடா பாஸு. மறந்துட்டியோன்னு நினைச்சேன். சந்தி பண்ணிட்டியோன்னோ?'

'இல்ல மாமா. லேட்டாயிடுத்துன்னு ஓடி வந்துட்டேன்.'

'அங்க இருக்கு பாரு பஞ்ச பாத்ர உத்ரணி. சந்திய முடிச்சுட்டு வா. வெயிட் பண்றேன். இன்னைக்கு கண்டிப்பா ஆரம்பிச்சு வெச்சுடறேன்.'

அரை மணி நேரம் காத்திருக்கிறார் என் மாலை வேளை சந்தியாவந்தனம் முடியும் வரை.

'இது என்னடா பொட்டலம்?'

'அது ஒன்னும் இல்ல மாமா. அம்மா கிட்ட சொன்னேன் நீங்க எனக்கு சந்தியாவந்தன கிளாஸ் எடுக்கப் போறதா. வெத்தல பாக்கு பழத்த குடுத்துட்டு நமஸ்காரம் பண்ணி உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டு கத்துக்க சொன்னா.'

அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது எனக்கும் புரிந்தது.

அவருக்கு ரெண்டுக்கு நாலு பெரிய தேக்கு மரப் பலகை. எனக்கு ஒரு சிறிய கோரைப்பாய். நானே ஏற்பாடுகளை செய்துவிட்டு நமஸ்கரிக்கிறேன்.

அவர் அமர்ந்துவிட்டார் மனையில். நான் உட்காரும்போது சட்டென்று அந்த மடத்தில் இருந்த ஒரு படத்தை பார்க்கிறேன். எனக்கு விசித்திரமாக இருந்தது அந்தப் படம். அந்தப் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து என்னை பார்த்து என்னை கேட்கிறார்.

'அப்படி என்ன அங்க பார்த்துண்டு இருக்க?'

'ஒன்னும் இல்ல மாமா. நீங்க ஆரம்பிங்கோ.'

'உன் கவனம் முழுக்க இன்னோண்ணுல இருக்கறச்சே எப்படி நான் சொல்றதுல ஈடுபாடு வரும்? எத பார்த்துண்டு இருந்த? அதை முதல்ல சொல்லு.'

'அதான் மாமா. அங்க ஒரு படம் தொங்கிண்டிருக்கே. அதுல கூட ஒரு சின்ன பையன் ஒருத்தர காலால உதைக்கிற மாதிரி இருக்கே. இதுவரைக்கும் இந்த படத்த இங்க பார்த்த மாதிரி ஞாபகம் இல்லையே மாமா எனக்கு.'

'ஓ. அதுவா. அது வாமனரோட படம். நேத்திகித்தான் பஞ்சாமி மாமா கொடுத்தார் மடத்துல மாட்டச் சொல்லி. வாமன அவதாரம் பத்தி நோக்கு ஏதாவது தெரியுமா?'

உதட்டை பிதுக்கி மண்டையை ஆட்டி எனக்குத் தெரியாது என்பதை அவருக்கு உணர்த்துகிறேன்.

தெரியாமல் இந்தப்படம் என் கண்ணில் பட்டு சந்தியா வந்தன வகுப்பு தாமதமாகிறதே என்று எனக்கு தோன்றுகிறது. இருப்பினும் அவர் சொன்ன வாமன அவதார கதையையும் சுருக்கமாக கேட்க வேண்டும் என்ற விருப்பமும் கூடவே இல்லாமலும் இல்லை.

'நீ சந்தியாவந்தனம் மந்திரங்கள கத்துக்க வந்திருக்கேன்னு வாமனருக்கே தெரிஞ்சிருக்கு பாரு.'

'வாமனருக்கும் சந்தியாவந்தனத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா மாமா.'

'ஓ... கண்டிப்பா இருக்கே.'

இப்படி ஆரம்பித்து மிக சுருக்கமாக வாமன அவதாரத்தை பற்றி சொல்கிறார். எனக்குள் ஆயிரம் கேள்விகள். எதைக் கேட்பது எதைக் கேட்காமல் விடுவது என்ற சந்தேகத்திலேயே மறைந்தன பல வினாக்கள்.

சட்டுனு ஒரு கேள்வி கேட்கணும். அவர் பதில் நீண்டு கொண்டு போய்விட்டால் என்ற ஒரு சந்தேகம் வேறு. கிளாஸ முடிச்சிட்டு ஆத்துக்கும் சீக்கிரம் போகணும் இல்லையா? நாம கத்துக்க வந்தது சந்தியாவந்தனத்தைப் பற்றி. நாம ஏதாவது வாமன அவதார கதைக்குள் கேட்கப்போய் அது பற்றிய ஸ்லாகிப்பு நீண்டுண்டே போயிடுத்துன்னா?

நான் அமைதியாக இருந்தது அவருக்கு சந்தேகத்தை கொடுத்திருக்க வேண்டும்.

'என்ன பாஸு. ஏதோ கேட்க நினைக்கிறாப்போல இருக்கே? எதுவானாலும் கேளு.'

அவர் கேட்டதற்காக ஒரு கேள்வி என்னிடத்திலிருந்து.

'வாமனர் பிரம்மச்சாரியா மாமா?'

எப்படிப்பட்ட கேள்வி இது என்று எனக்கு அப்போது தெரியாது. கேட்க வேண்டுமே ஏதாவது என்ற விதத்தில் தான் அந்த கேள்வியை நான் கேட்டேன் என்பதுதான் உண்மை.

'ஆமாம் பாஸு. உபநயனம் பண்ணிண்ட பிரம்மச்சாரி.'

'அந்த வாமனனுக்கு யார் மாமா பூணூல் போட்டு விட்டா? அவரோட அப்பாவா?'

'உனக்கு உங்க அப்பாவா போட்டுவிட்டா? அப்பா இல்லாத உனக்கு பெரியப்பா போட்டு விட்டாளோன்னோ. அதுமாதிரி வாமனருக்கும் தேவாதி தேவரெல்லாம் சேர்ந்து போட்டுவிட்டா. பாகவதத்துல இந்த வாமனாரோட உபநயனத்த பிரமாதமா சொல்லியிருக்கா.'

எனக்கு இப்போது சந்தியாவந்தன மந்திர அர்த்தங்கள் கற்கவேண்டிய ஆர்வம் சற்று பின்னடைவு பெருகிறது. வாமனருக்கு எப்படி பூணூல் கல்யாணம் நடந்தது அப்படிங்கறத தெரிஞ்சுகிறதுல ஆர்வம்.

'சுருக்கமாக சொல்றேளா அத பத்தி. கேட்கிறேனே.'

'சரி சொல்றேன். அதுக்கு முன்னாடி உபநயனம்னா என்னங்கறத சொல்றேன் முதல்ல. 'உப' ப்ளஸ் 'நயனம்' உபநயனம் ஆகறது. உப அப்படிங்கிற வார்த்தைக்கு பிரம்மத்துக்கு பக்கத்துல அப்படின்னு மீனிங். நயனம் அப்படின்னு சொன்னா அழைச்சிண்டு போறது அப்படின்னு அர்த்தம். யார் அழச்சிண்டு போவா? சிஷ்யனை குரு அழைச்சிண்டு போகணும். அதாவது தன்னுடைய சிஷ்யன ஜாக்கிரதையா கைய புடிச்சிண்டு பிரம்மத்துக்கு பக்கத்துல அழைச்சிண்டு போறததான் உபநயனம் அப்படின்னு சொல்றா. அப்படி அழைச்சிண்டு போற சிஷ்யன் பூணல் போட்டதிலிருந்து துவிஜன்னு பேர் எடுக்கறான். பிறக்கும்போது எல்லாரும் ஒண்ணுதான். ஆனா பிரம்மத்தை நோக்கி மந்திரங்கள் எல்லாம் சொல்லிண்டு டிராவல் பண்ணும் போது அவன் இரண்டாவது பிறப்புல பயணிக்கிறான் என்று அர்த்தம். புரிஞ்சுதா?'

புரியாவிட்டாலும் புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டியதால் அவரே தொடர்கிறார்.

'பிராமண குழந்தைகள் எல்லாம் எட்டு வயசுக்குள்ள பூநூல் போட்டுண்டனும். அதாவது காம சிந்தனைகள் ஒருத்தனுக்கு வரதுக்கு முன்னாடி போட்டுண்டுடணும். உபநயன தீக்ஷ எடுத்துண்டனும்.'

'அப்பாடி... எனக்கு ஆறு வயசுலயே போட்டாச்சு.'

என்னுடைய வெகுளித்தனமான தற்பெருமையை ரசிக்கிறார்.

'பூணூல் போட்டுண்டா மாத்திரம் ப்ரயோஜனம் இல்ல. பிரம்மத்தை நோக்கி போகணும் இல்லையா? பூணூல் போடும்போது வாத்தியார் அதுக்குண்டான மந்திரங்கள சிம்பாலிக்கா காட்டிடறார். அத நன்னா கெட்டியாப் பிடிச்சிண்டு விடாம மந்திரங்கள தொடர்ந்துண்டு பிரம்மத்தை அடையற வழிய நாமதான் பார்த்துக்கணும். பிற்காலத்துல கல்யாணம் பண்ணிண்டாலும் இந்த சந்தியா வந்தன பாதைகளையும் மறக்காம விடாம தொடர்ந்து செஞ்சிண்டு வரும்போது நம்மளோட அல்டிமேட் கோலான பிரம்மத்தை அடையறது சுலபமா போயிடறது. புரிஞ்சுதா?'

'மாமா என்னமோ சொன்னேளே துவிஜன் அப்படின்னு. அதப் பத்தி எனக்கு புரியற மாதிரி சொல்றேளா?'

அப்போது அவர் கேட்ட போது நான் சொல்ல தயங்கியதை இப்போது கேட்கிறேன்.

'நீ பக்ஷிகளோட முட்டையை பார்த்து இருக்கியா பாஸு? கோழி முட்டை வாத்து முட்டை அப்படி இப்படின்னு ஏதாவது?'

'ஏன் மாமா திடும்னு இப்படிக் கேட்கிறேள்? பார்த்து இருக்கேன் மாமா. வாணக்கார தெருவுல இருக்குற என்ற பிரெண்ட் ஆத்துல கோழி முட்டை பாத்திருக்கேன்.'

'அந்த முட்டைக்குள்ள என்ன இருக்கு தெரியுமா உனக்கு?'

'இது கூட தெரியாதா மாமா எனக்கு? கோழிக்குஞ்சு தானே இருக்கும் அதுக்குள்ள.'

'குஞ்சு முட்டைக்குள்ள இருக்கும்போது அதோட லோகம் அந்த முட்டை ஓட்டுக்குள்ள மட்டும்தான இருக்கும். அதுவே முட்டையை ஒடச்சிண்டு வெளிய வந்துட்டா அதோட லோகம் பெருசா ஆயிடறது இல்லையா? அப்படின்னா ஒரு பொறப்புக்குள்ள ரெண்டு லோகத்தை பார்க்கிற மாதிரி பூணூல் போடறதுக்கு முன்னாடி விளையாட்டுத்தனமா இருக்கிற ஒண்ணும் பகவத் சிந்தனையோட பூணூல் போட்டுண்டுதக்கு அப்புறம் ஒண்ணுமா ரெண்டு பிறப்பாயிடறது வாழ்க்கை. இப்ப நன்னா புரிஞ்சுதா நோக்கு?'

'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போறது மாமா.'

'பசிக்கலையா நோக்கு. மணி ஒம்போது ஆப்போறதே?'

'ஒம்போதாஆஆஆஆ. நேரம் போனதே தெரியல மாமா. நாளைக்கு சரித்திர பாடத்துல டெஸ்ட் வேற இருக்கு. நான் போகணும். இன்னும் வாமனர் பத்தி தெரிஞ்சுக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா ஆத்துக்கு போயே ஆகணும் மாமா.'

'சரி கிளம்பலாம்.'

மடத்தின் ஜன்னல்கள் கதவுகள் ஒவ்வொன்றாக சாத்துகிறேன். அவர் மடத்தின் வாசல் கதவை சாத்தி பூட்டு போட நான் அதை இழுத்து பார்க்க, இருவரும் கிளம்புகிறோம்.

'வர சனிக்கிழமை வா இதே டயத்துக்கு. மத்தத சொல்றேன்.'

தொடரும்...