Thursday, January 02, 2020

அடுப்புச் சாப்பாடு

சுட்டது :

படித்ததில் மனம் விட்டு சிரித்தது, copy  செய்து paste  பண்ணி உள்ளேன் from another group:

I have gone through this verbatim years ago! Sure,many of senior citizens too..

அடுப்புச் சாப்பாடு

நந்து சுந்து
___________________________________________________________________

“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.

அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள்.

விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.

“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.

குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.

நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

தராசு என்பது பெரிதாக இருக்கும்.  சாதாரண துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.

“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க...போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.

“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.

‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை.

இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.

 நம்முடைய இரண்டு கைகளையும்  நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.

நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.

கால் மணி நேரத்தில்  விறகை வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்‌ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.

“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார். 

அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?

விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.

அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும்.  சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.

இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர். 

இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும். 

சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.

சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும். 

“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.

அண்ணன் போய் ஊதுவான். 

“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.

குழல் ஊதும்  அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.

விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.

அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.

விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.

பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.

சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல்  வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.

சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.

அதுவும் ஒரு டெக்னிக் தான்.

விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.
 
‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான்.  

சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் அம் பார்.

கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.

ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன். 

மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.

கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்‌ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.

இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.

ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.

இதோ இப்போதும்  கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.

“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”

ஒரே ஒரு வித்தியாசம். 

கேட்டது சமையல்காரம்மா.

அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பான
பொய்கள்.

மருத்துவமனை
தொட்டிலில்
நான்
முதன்முறையாக
அழுதபோது..
கடன்வாங்கி
கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாக
பொய் சொல்லியும்..

நடந்து
பழகுகையில்..
கல்தட்டி
விழுந்து
அழும்போது..
கல்லை
குச்சியால் தட்டி,
அந்த
கல் ,
அழுவதாக
பொய் சொல்லியும்..

இரவுகளில்
பேய்க்கனவு
கண்டு..
பாதியில்
எழுந்து
அழும்போது,,
தோள்களில்
இறுக்கமாய்
அணைத்துக்கொண்டு
பேய்
ஓடிப்போனதாக
பொய்சொல்லியும்..

முதல்நாள்
பள்ளியில்
அமர்வதற்கு
அழுதபோது..
இரண்டு
தினங்களில்,
தானும்
பள்ளியில்
சேரப்போவதாக
பொய் சொல்லியும்..

குலதெய்வம்
கோவிலில்..
காது
குத்திக்கொண்டு
அழுதபோது,,
இன்றிலிருந்து
சாமியோடு
"டூ "
விட்டுவிட்டதாக
பொய் சொல்லியும்..

காய்ச்சலுறும்
தருணங்களில்,,
ஊசி
வேண்டாமென
அழும்போது..
மாத்திரை
மட்டும்
தரச்சொல்லி
மருத்துவரிடம்
சொல்லியிருப்பதாக
பொய் சொல்லியும்..

குறைந்த
மதிப்பெண்ணிற்காக,
அம்மாவிடம்
திட்டு
வாங்கிக்கொண்டு
அழுதபோது..
வாத்தியாருக்கு
படிக்க
தெரியவில்லை,,
என
பொய் சொல்லியும்..

திருமணம்
முடிந்து,,,
புகுந்தவீடு
செல்வதற்கு
அழுதபோது..
மகிழ்வோடு
வழியனுப்புவதாக
பொய் சொல்லியும்..

என்னை
ஏமாற்றிய
அப்பா...

தோள்மீது
பேத்தி ஏறியதும்,,
தொடர்ச்சியாக
பலமுறை
இருமிவிட்டு..
துளியளவு
தைலத்தில்
எல்லாமே
சரியாகிப்போனதாக,
எனது
மகளிடம்,
மீண்டும்
ஏமாற்ற துவங்குகிறார்...!!
ஐ லவ் யூ அப்பா...

நன்று தீது

டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேள தாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல எண்ணத்தையே சீர்குலைத்து கெடுத்துவிடும்.

இதனால் நிகழ்ச்சியில் நல்ல இல்லாத காட்சிகள் TVக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள்  நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆய்வு ஆகும்.

அதை சமயம் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.

ஆம்...!!!

உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...

இதனால் கண்பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம், மன அழுத்தம், மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து.....

இதன் தொடர்ச்சியாக...

இதற்கு எல்லாம்  முக்கியமான காரணம்...

பிறரை எப்படிக்கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது....

குடும்பத்தினருக்குள் மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை சந்தேகப்படுவது,  சகுனிவேலை பார்ப்பது, எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது!!! கற்றுக்கொள்ளலாம்

அதோடு...!!

நேர்மையான அரசு அதிகாரிகளை எப்படி லஞ்சம் வாங்கியது போல் திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது

பிறர் தொழிலை எப்படி கெடுப்பது? எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது  என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு  மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட பெரிய பேரிழப்பு

உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுய லாபத்துக்காக இப்படி பட்ட மக்களைச் சீரழிக்கும் டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..

இது போன்ற கேவலமான நாடகங்களை புறக்கணியுங்கள்.. நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்தால்  தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் தான்

எனவே உங்கள் விலைமத்ப்பில்லா  ஓய்வு நேரத்தை  அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்

குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் மற்ற நேரங்களில் நல்ல புத்தகங்களை படியுங்கள்... கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள்

இல்லையேல் வரும் பலன்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் தான் அவற்றை TV பார்த்து  உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்...

அல்லதை விடுத்து நண்பர்களே...!!

நல்லதை 
பாருங்கள்; 
கேளுங்கள்; 
பேசுங்கள்;
சிந்தியுங்கள்;
வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும் ...

தீதும் நன்றும் பிறர் தர வாரா நம்மைச்சுற்றி நடப்பனவற்றுக்கு  நாமே பொறுப்பு......

அவரின் பார்வை

கடவுளின் பார்வை யார் மீது படும்...

1)யார் கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் படைத்தவரோ அவர் மீது 

2)சத்தியத்தின்படி நடப்பவர் மீது

3)உள்ளொன்று புறமொன்று இல்லாதவர் மீது

4)சுயநலமற்ற அன்புள்ளவர் மீது

5)யார் மனதையும் புண்படுத்தாதவர்  மீது 

6)நேர்மையானவர் மீது நிலை தவறாதவர் மீது

7)விருப்பு வெறுப்பின்றி பிறருக்கு உதவுபவர் மீது

8) எந்த சூழ்நிலையிலும் யாரையும் ஏமாற்றதவர் மீது 

9) அனைவரும் நம்மைப் போன்ற உயிர்கள் என்று உணர்பவர் மீது

10) எதற்கும் கவலைப்படாமல் நன்னெறியில் மகிழ்ச்சியாக நடப்பவர் மீது

11) கோபம் வெறுப்பு ஆவேசம் பொறாமை இல்லாதவர் மீது

12) தீய உள்நோக்கம் கொண்ட பார்வை இல்லாதவர் மீது

13) பிறரை மதிப்பவர் மீது

14) பணிவுடன் நடந்து கொள்பவர் மீது

15) இனிமையான வார்த்தைகளை நெஞ்சில் நஞ்சில்லாமல் பேசுபவர் மீது 

16) மரியாதையின் படி நடப்பவர்கள் மீது மரியாதை கொடுப்பவர்கள் மீது

17) உழைப்பின் உண்மையை உணர்ந்து உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மீது

18) பிறரை மனம் சொல் செயலால் துக்கப்படுத்தாதவர்கள் மீது 

19) ஏழ்மையிலும் தர்மத்தை மீறாதவர்கள் மீது 

20) பொய்யுரைக்காதவர்கள் மீது

21) பிறர் மீது பழி சுமத்தாதவர்கள் மீது 

21) பிறரை மன்னிப்பவர்கள்மீது 

22) நேரத்தை வீணடிக்காதவர்கள் மீது 

23) சுறுசுறுப்பாக தன் கடமையை தர்மத்தின்படி செய்பவர்கள் மீது 

24) எந்த நிலையிலும் பிறரை ஏளனம் செய்யாதவர்கள் மீது 

25) கருணை மனம் கொண்டவர் மீது

26) சத்தியத்திற்காக அச்சப்படாமல் வாழ்பவர் மீது

27) நன்மை செய்வதற்காக சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்பவர் மீது

28) நடந்த முடிந்த தவறுக்கு வினாடியில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஏன் எதற்கு என்ற குழப்பத்தில் வராமல் மீண்டும் நாணயமாக முன்னேறி செல்லக்கூடிய முயற்சி செய்பவர் மீது

29) எப்படிப்பட்டவரையும் உயர்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பவர் மீது 

30) எந்த சூழ்நிலையிலும் கடும் வார்த்தை பேசாதவர் மீது

31) மூடநம்பிக்கைகளை புறந்தள்ளி எப்பொழுதும் எனக்கு இறைவன் உதவுவார் என்று பரிபூரணமாக நம்புபவர் மீது 

32) பாவம் செய்யாதவர் மீது பிறரை பாவம் செய்ய தூண்டாதவர் மீது 

33) எல்லாம் இறைவன் கொடுத்தது என்று வாழ்பவர் மீது

34) நான் எனது என்று சொல்லாதவர் மீது யாவும் நன்மைக்கே நடக்கின்றது என நினைப்பவர் மீது

35) விரோதிகளையும் மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர் மீது

36) வித்தியாசம் வேறுபாடு இல்லாத சமநோக்கு பார்வை உடையவர் மீது

37) சுயம், தொழில், குடும்பம்,சம்பந்தம் இவற்றில் தர்மத்தை மீறாதவர் மீது 

38) நல்ல சகவாசத்துடன் இருப்பவர் மீது 

39) பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் மீது

40)நல்லதை பேசி பிறரது மனதை அமைதிப்படுத்துபவர் மீது

41) நன்றி மறவாதவர்கள் மீது

42) மலர்முகம் மாறாதவர்கள் மீது

43) பசியாற்றுபவர் மீது 

44) நம்பிக்கை துரோகம் செய்யாதவர் மீது 

45) சந்தேக புத்தி இல்லாமல் இறைவனான தன்னை பரிபூரணமாக நம்புபவர்கள் மீது

46) மங்களமான எண்ணம் சுபமான வார்த்தைகள் உற்சாகம் கொடுக்கக் கூடிய செயல்கள் இம்மூன்றும் உள்ளவர் மீது

47) இறைவனான தன்னையே நினைத்து தன் நினைவை பிறருக்கும் ஏற்படுத்துபவர் மீது

48) பிறரது தவறுகளை தனது தவறுகளாக எண்ணி மறப்பவர் மன்னிப்பவர் மீது 

49) சலிப்பின்றி உற்சாகத்துடன் பிறருக்கு உதவி செய்பவர் மீது 

50) நிலையற்ற இந்த வாழ்க்கையில் நிலையானது அன்புதான் என்றெண்ணி வாழ்பவர் மீது

51) தினசரி இறைவனுக்கு செய்யும் கடமைகளில் தவறாதவர் மீது

52) மகிழ்ச்சியுடன் உணவு உபசரிப்பவர் மீது 

53) உணவை பிரசாதம் என்றும் நீரை தீர்த்தம் என்றும் அருந்தி மகிழ்ந்து தனது வாழ்வு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று வாழ்பவர் மீது 

54) இறை நெறியிலும் இறைவனிடத்திலும் மாறாத அன்புள்ளவர் மீது

55) இறைவனின் புகழையே சதாகாலமும் பாடிக்கொண்டே இருப்பவர் மீது 

56) இறை போதனைகளின் வழிப்படி நடந்து பிறருக்கு அதை போதிப்பவர் மீது

57)இது இறைவனின் விருப்பம் என்றெண்ணி  அமைதியாக அவரது நினைவில் இருப்பவர் மீது

58) மௌனத்தில் தியானமும் சப்தத்தில் ஞானமும் மட்டுமே வெளிப்படுபவர் மீது 

59) தெய்வீக தேஜஸால் தனது தோற்றத்தின் மூலம் இறைவனை வெளிப்படுத்துபவர் மீது

60) இறைவன் கொடுத்த செல்வத்தை தவறான வழிகளில் செலவு செய்யாதவர் மீது

61) தகுதியறிந்து தானம் கொடுப்பவர் மீது

62) தனது அன்றாட கணக்கு வழக்குகளை இறைவனிடம் ஒப்படைப்பவர்மீது 

63) ஒவ்வொரு விசயத்திற்கும் இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துபவர் மீது

64) அனைவரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒருவர் மீது

65) சமாதானம் செய்து மனதை ஆற்றுப்படுத்துபவர் மீது 

66) எளிமையாகவும் உதாரணமாகவும் வாழ்பவர் மீது

67) அனைவரையும் உளமார வாழ்த்துபவர்கள் மீது 

68) உணவு,உடல், உடை,இருப்பிடம்,செயல் யாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர் மீது 

69)நிதானமாக இருப்பவர் மீது பிறருக்கு நிம்மதியை தருபவர் மீது

70)குணங்கள் நிறைந்த குணவான் மீது

71) அறியாமையில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் மீது

72) சர்வ சம்பந்தங்களையும் இறைவன் மீது வைத்துள்ளவர் மீது 

73) இந்த உடலில் இருந்து ஆன்மா தான் அனைத்தும் செய்கின்றது என்று கவனம் வைத்திருப்பவர் மீது

74)அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள் என்று உணர்ந்து நடப்பவர் மீது

75)சகித்துக்கொண்டு பொறுமை காப்பவர் மீது

76)மனதாலும் செயலாலும் யாருக்கும் ஹிம்சை கொடுக்காத அஹிம்சாவாதி மீது 

77) எப்பொழுதும் திருப்தியாக இருப்பவர் மீது

78) மனிதாபிமானத்துடன் நடப்பவர் மீது

79) செயலின் விளைவை அறிந்து காரியம் செய்பவர் மீது

80) பாவம் செய்வதற்கு அஞ்சி நடப்பவர் மீது

81)ஆசிகள் கொடுப்பவர் ஆசிகள் அடையப் பெற்றவர் மீது

82) சொல்லும் செயலும் சமநிலையில் இருப்பவர் மீது

83)உலக நன்மைக்கான காரியத்தில் காரணம் சொல்லாதவர் மீது 

84) வாயால் சொல்லாமல் அனுபவப்பூர்வமாக இறைவனை வெளிப்படுத்துபவர் மீது

85) ஒவ்வொரு நிமிடமும் இறைவன் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்று வாழ்பவர் மீது

86) சம்பந்தம் தொடர்பில் வருபவருக்கு ஏதாவது ஒரு நற்குணம் என்ற பரிசை அளிப்பவர் மீது 

87) இறை நியமத்தின் பூர்வமாக பிறருக்கு மகிழ்ச்சி அளிப்பவர் மீது

88)தான் வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களை பிறருக்கு கூறி நல்வழிப்படுத்துபவர் மீது 

89)எப்பொழுதும் இறைவனின் தொடர்பில் இருந்து தன்னை இவ்வுலகில்  பாதுகாத்துக் கொள்பவர் மீது 

90) தீயதை பார்க்காமல் கேட்காமல் சொல்லாமல் நினைக்காமல் இருப்பவர் மீது

91) சோதனைகளில் எடுத்துக்காட்டாக வாழ்பவர் மீது

92) புண்ணிய காரியங்களை மட்டுமே செய்பவர் மீது

93) ஆன்மாவின் ஆனந்த நிலையில் நிலைத்து இருந்து பரமாத்மாவின் பேரானந்த நிலையில் மூழ்கி இருப்பவர் மீது

94) உடல் ஒரு ஆலயம் எனப் புரிந்து அதை ஆரோக்கியமாக வைத்திருப்பவர் மீது

95) தினசரி சுயமுன்னேற்ற பயிற்சியில் காலம் தவறாமல் ஈடுபடுபவர் மீது

96)தன்னை தாயாய் கவனிக்கும் பஞ்ச தத்துவங்களுக்கு இறைவனிடமிருந்து சக்தியை வாங்கி வழங்குபவர் மீது 

97)அன்பாகவும் விலகியும் தாமரை மலர் போல் பற்றற்று  வாழ்பவர் மீது 

98)தவசீலராகவும் குணசீலராகவும் இருந்து பிறருக்கு நன்மை செய்பவர் மீது

99) மனமுடைந்து போனவருக்கும் நம்பிக்கையை வழங்கி அவரை வலிமை உடையவராக மாற்றுபவர் மீது

100)செய்பவரும் செய்விப்பவரும்  அவரே 
என்றுணர்ந்து அவரே உலகம் என்று சிவனே என்றிருப்பவர் மீது

ஆத்திச்சூடி

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...

சைக்கிள் சவாரி

" சைக்கிள் சவாரி.." 

அப்போதெல்லாம் 
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது. 

அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், 
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது 
சைக்கிள் ஓட்டத் தெரியாமல், 
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். 
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?

அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. 

இப்போதும் 
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன. 
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும். 
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள், 
கேரியர்இல்லாத சைக்கிள், 
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள். 

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே, 
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள். 

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும் 
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள். 
அந்த ஒரு பத்து நிமிஷம், 
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள். 

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள். 

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு. 
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது. 

அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன, 
உப்புத்தாள் கொண்டு, 
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன... 
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன். 
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி. 

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன. 

‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.

பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று 
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள். 

ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்...
என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில் 
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும். 
அதேபோல், 
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது, 
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும். 

‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.

அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு, 
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி, 
ஹேண்டில் பார் கைப்பிடி, 
சீட்டுக்கு முன்னே இருக்கும் 
பார் பகுதிக்கு ஒரு கவர், 
சீட்டுக்கு குஷன் கவர், 

இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது 
ஒரு கலை. 

இன்னும் சிலர், 
சின்னச்சின்ன மணிகளை, 
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.

 டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது 
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம். 
கறிவேப்பிலை வாங்கவே, 
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம். 

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு, 
கெத்துக் காட்டுவோம். 

சைக்கிளின் ரெண்டுபக்கமும் 
பெல் வைத்து, 
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.

மாற்றங்கள்...
வேகங்கள்..

சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

 ‘என்னடா மாப்ளே... 
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே. 
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா. 
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள், 
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம் 
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன. 
அப்பாவுக்கு பைக், 
மனைவிக்கு ஆக்டீவா,  
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன. 

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை. 

’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்... 
தொப்பையைக் குறைக்கவும் 
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். 

ஸ்டாண்ட் போட்டு, 
சைக்கிளிங் பண்ணுவதற்கு, 
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது. 
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும், 
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

உங்கள் நினைவுகளை 
கொஞ்சம் தட்டி விடுங்கள்....

old days or times

அந்த காலம் தான் 
நன்றாக இருந்தது...

ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே 
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு, 

பேருந்துக்குள் கொண்டுவந்து 
மாலைமுரசு விற்பார்கள்,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு 
இருந்தார்.

ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால் 
ஒரு மாதம்அலசுவோம்

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.

கல்யாண வீடுகளில் 
பாய் போட்டு சாப்பாடு

கபில் தேவின் 
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH

குமுதம், விகடன் 
நேர்மையாக இருந்தது.

எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், 
கேசட்டிலும் பாடல் கேட்பது 
சுகமானது, 

வீடுகளின் முன் பெண்கள் 
காலையில் கோலமிட்டார்கள், 
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் 
அரட்டை அடிப்பார்கள், 

சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு 
முன்பே திட்டமிடுவோம், 

தீபாவளி பண்டிகையை கொண்டாட 
ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம், 

புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS

டான்ஸில் ஆபரேஷன்தான் 
பெரிய ஆபரேஷன் 
நிறைய பேர் 
பண்ணி கொண்டார்கள், 

வானொலி நாடகங்களை 
ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் அரசு பள்ளிகளில் 
படித்தோம்.,

சாலையில் எப்போதாவது 
வண்டி வரும்.,

மழை நின்று 
நிதானமாக பொழியும, 
 
தமிழ் ஆசிரியர்கள் 
தன்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் 
எந்த குடும்பத்திற்க்கும் 
பாரமாயில்லை, 

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை
 வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக 
பத்து ரூபாய் போதும்.,

அம்மா பக்கத்தில் உறங்கினோம், 

கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம், 

முடி வெட்ட 
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைஸா, 

பருவ பெண்கள் பாவாடை 
தாவணி உடுத்தினர் ..
சிலின்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும் 
விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிறுமிகள் 
பல்லாங்குழி ஆடுவார்கள். 
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

டாக்டர் வீட்டுக்கே வருவார், 

காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது, 

சினிமா பாட்டு புஸ்தகம் கிடைக்கும்,

எழுத்தளர் சுஜாதா கதைகள் 
சிக்கு்னு இருக்கும்,

மயில் இறகுகள் 
குட்டி போட்டன புத்தகத்தில்.,

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு 
அப்பாவிடம் அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து 
மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை 
அரைக்கால் டவுசர்.,

மொத்தத்தில் மரியாதை இருந்தது.

தொலைந்து போனவை 
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்.!!

நினைவை விட்டு அகலவில்லை..

New year wishes

Considering the furore on everything, soon our greeting may become like this.
------------------------
Hello,
I wanted to send some sort of holiday greeting to you, my friends, but it is so difficult in today's world to know exactly what to say without offending someone.So I met with my lawyer(s) yesterday, and on their advice. I wish to say the following to you my dear friends:

"Please accept with no obligation, implied or implicit, my best wishes for an environmentally conscious, socially responsible, low stress, non-addictive, gender neutral celebration of the winter solstice holiday, practiced with the most enjoyable traditions of religious persuasion or secular practices of your choice with respect for the religious/ secular persuasions and/or traditions of others, or their choice not to practice religious or secular traditions at all.

l also wish you a fiscally successful, personally fulfilling and medically uncomplicated recognition of the onset of the generally accepted calendar year 2020, but not without due respect for the calendars of choice of other cultures whose contributions to society have helped make our country great (not to imply that India is necessarily greater than any other country) and without regard to the race, creed, colour, age, physical ability, religious faith or sexual preference of the wishes.

By accepting this greeting, you are accepting these terms. 
This greeting is subject to clarification or withdrawal.
It is freely transferable with no alteration to the original greeting.

It implies no promise by the wisher to actually implement any of the wishes for her/himself or others and is void where prohibited by law, and is revocable at the sole discretion of the wisher.

This wish is warranted to perform as expected within the usual application of good tidings for a period of one year or until the issuance of a subsequent holiday greeting, whichever comes first, and warranty is limited to replacement of this wish or issuance of a new wish at the sole discretion of the wisher."

Disclaimer: No trees were harmed in the sending of this message; however, a significant number of electrons were slightly inconvenienced.

மனைவி!!!?!

கவிஞர்களில் எத்தனை வித்தியாசமான மனைவிகள் இவர்களுடன் சண்டை போடுகிறார்கள்: - 

பைலட்டின் மனைவி: - அதிகமாக பறக்காதீர்கள்

ஆசிரியரின் மனைவி: - எனக்கு கற்பிக்காதே

ஓவியர் மனைவி: - மிகவும் வண்ணமயமான நிறம்

டோபியின் மனைவி: - வாஷ்
 
நடிகரின் மனைவி: - அதிகமாக விளையாடாதே
 
பல்மருத்துவர்: - பாட்டி உடைந்து விடும்
 
மார்வாடியின் மனைவி: - கணக்கு வைத்திருங்கள்
 
பொறியாளரின் மனைவி: - அனைத்து பகுதிகளிலும் தளர்த்தப்படும்

கட்டிடக்கலை மனைவியிடம்: - கவனமாக இருங்கள் அல்லது தாபாத்தின் வடிவமைப்பு மாற்றவும்
 
சுனரின் மனைவி: - ரூட் செய்வேன்
 
பண்டிதனின் மனைவி: - மல்லுக்கு ஒலிக்கும்
 
இசைஞானி மனைவி: - டோல் பாஜ் தேஜேஜ்
 
டிரைவர் மனைவி: - அதை உடைத்து 
கட்டிடம் மனைவி: - செங்கல் கொண்டு செங்கல்
 
டாக்டர்ஸ் மனைவி: - சரியான சிகிச்சை செய்வார்
 
வழக்கறிஞர் கி மனைவி: - உங்கள் வழக்கறிஞரை நீதிமன்றத்திற்கு வரம்பிடவும் ....

மற்றும் சிறந்த ஒரு .....

நிர்வாகி மனைவி: - குழுவை நீக்கு ....