Thursday, January 02, 2020

old days or times

அந்த காலம் தான் 
நன்றாக இருந்தது...

ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே 
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு, 

பேருந்துக்குள் கொண்டுவந்து 
மாலைமுரசு விற்பார்கள்,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு 
இருந்தார்.

ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால் 
ஒரு மாதம்அலசுவோம்

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.

கல்யாண வீடுகளில் 
பாய் போட்டு சாப்பாடு

கபில் தேவின் 
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH

குமுதம், விகடன் 
நேர்மையாக இருந்தது.

எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், 
கேசட்டிலும் பாடல் கேட்பது 
சுகமானது, 

வீடுகளின் முன் பெண்கள் 
காலையில் கோலமிட்டார்கள், 
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் 
அரட்டை அடிப்பார்கள், 

சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு 
முன்பே திட்டமிடுவோம், 

தீபாவளி பண்டிகையை கொண்டாட 
ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம், 

புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS

டான்ஸில் ஆபரேஷன்தான் 
பெரிய ஆபரேஷன் 
நிறைய பேர் 
பண்ணி கொண்டார்கள், 

வானொலி நாடகங்களை 
ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் அரசு பள்ளிகளில் 
படித்தோம்.,

சாலையில் எப்போதாவது 
வண்டி வரும்.,

மழை நின்று 
நிதானமாக பொழியும, 
 
தமிழ் ஆசிரியர்கள் 
தன்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் 
எந்த குடும்பத்திற்க்கும் 
பாரமாயில்லை, 

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை
 வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக 
பத்து ரூபாய் போதும்.,

அம்மா பக்கத்தில் உறங்கினோம், 

கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம், 

முடி வெட்ட 
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைஸா, 

பருவ பெண்கள் பாவாடை 
தாவணி உடுத்தினர் ..
சிலின்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும் 
விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிறுமிகள் 
பல்லாங்குழி ஆடுவார்கள். 
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

டாக்டர் வீட்டுக்கே வருவார், 

காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது, 

சினிமா பாட்டு புஸ்தகம் கிடைக்கும்,

எழுத்தளர் சுஜாதா கதைகள் 
சிக்கு்னு இருக்கும்,

மயில் இறகுகள் 
குட்டி போட்டன புத்தகத்தில்.,

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு 
அப்பாவிடம் அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து 
மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை 
அரைக்கால் டவுசர்.,

மொத்தத்தில் மரியாதை இருந்தது.

தொலைந்து போனவை 
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்.!!

நினைவை விட்டு அகலவில்லை..

No comments: