Thursday, January 02, 2020
அடுப்புச் சாப்பாடு
அப்பாவின் அன்பு
நன்று தீது
அவரின் பார்வை
ஆத்திச்சூடி
சைக்கிள் சவாரி
old days or times
New year wishes
மனைவி!!!?!
Sunday, October 20, 2019
நான் கூட எனக்குதான் ஏதோ பிரச்சனைனு நினைச்சுகிட்டு இருந்தன்.. நாகரீகமா வளர்த்துருக்காங்க போல..
பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?
Decoy effect
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ....நோ பீஸ் ஆப் மைண்ட் ...
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …!!
அப்பா எனக்கு நோட்புக்குகளுக்கு பிரவுன் கலர் அட்டை போட்டுத் தருவதை!!!
எங்கள் அப்பா அதிகம் படித்தவர். எங்களை நன்கு படிக்க வைத்தார்..! தன்னால் பாடங்கள் சொல்லித்தர no time எங்கள் ஸ்கூல் காலம் வரையிலும் அவர் எங்கள் நோட்புக்குகளுக்கு பிரவுன் கலர் அட்டை போட்டுத் தருவதை ஒரு தவம் போல் செய்வார்..! ஸ்கூல் திறந்து, புது புத்தகங்கள், நோட்புக்குகள் வந்ததுமே குதூகலமாகி, மைலாப்பூர் சீத்தாராமன் அண்டு கோவிலிருந்து அட்டை பேப்பர் வாங்கி வருவார்..! இரவு 9 மணிக்கு நாங்கள் புத்தகங்கள், நோட்டுகளை கொண்டு வந்து வைத்து விட வேண்டும்..! ஏதோ கிழங்கு + மைதாமாவில் வீட்டிலேயே செய்யும் கோந்து அம்மா ரெடி பண்ண வேண்டும்..! ஒரு நூல் கண்டு, கத்திரிக்கோல், பிளேடு, கோந்து எல்லாவற்றையும் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு தரையில் அமர்வார். அவசரம் இல்லாமல், கால்குலேட் செய்து, பேப்பர் வேஸ்ட் ஆகாத வண்ணம், சரியான அளவுகளில், அட்டைப் பேப்பரை மடித்து, அந்த மடிப்புக்குள் நூலை வைத்து, ஒரு பக்கத்திலிருந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இழுத்தால் கச்சிதமாய்க் கிழியும் பேப்பர்...! பின்னர் புக்/நோட்டை அதற்குள் வைத்து, ஸ்கேல் வைத்து, மிகச் சரியான 'செண்டர்' பார்ப்பார்..! அதை பென்சிலில் மார்க் செய்து கொண்டு, அந்த இடத்தில், கத்திரிக்கோலால் ஒரு quadrangular cut..! அதே போல, கவரின் கார்னர்களில் சுகுரான triangular cuts..! இதெல்லாம் ஒரு நிதானம் இருந்தால் மட்டுமே முடியும்..! பின்னர் புக்கை உள்ளே வைத்து அட்டையை மடித்தால், அது பெர்ஃபெக்ட்டாக இருக்கும்..! கார்னரிலோ, நடுவிலோ அட்டை துருத்தாது..! Fringes இருக்காது..! பின்னர், கோந்தைத் தடவி ஒட்டுவதிலும் பெர்ஃபெக்க்ஷன்..! அதிகமாக கோந்தை வைத்தால் பேப்பர் சுருங்கும்..! ஒட்டி விட்டு, ஒரு துணியால் அழுத்தித் துடைத்து விட்டுப் பார்த்தால், அட்டை புக்கோடு ஒட்டியே செய்யப்பட்டதோ என்று தோன்றும்..! அவ்வளவு பக்காவாக, டைட்ட்டாக, அதே சமயம் திறந்து மூட லகுவாக இருக்கும்..! அத்தனை புக்குகள், நோட்டுகளுக்கும் நிதானத்துடன், சிரத்தையுடன், விடிய விடியச் செய்வார்..! அட்டை போட்டு விட்டு, மேல் வலது கார்னரில், Bril Inks லேபில்களையும் ஒட்டி அவர் கொடுத்தால், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும்..!
பல ஆண்டுகளுக்குப் பின், என் பெண் ஸ்கூல் படிக்கும் போது, அவள் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர எனக்கு நேரம் இருக்கவில்லை..! அதற்கு என்று சில கடைகள் இருக்க, அங்கே கொடுத்து போட்டுக் கொள்வதுதான்..! ஒரே ஒரு தடவை அவசரம் என்று என் பெண் ஒரு நோட்டை என்னிடம் கொடுத்து அட்டை போட்டுத் தரச் சொன்னாள். நானும் முடிந்த அளவு செய்து கொடுத்தேன். அட்டை தொளதொளவென்று இருந்தது..! செண்டரில் சரியாய் கட் செய்யாமல் உள்ளிருக்கும் நோட்புக் துருத்தியது. முன்னும் பின்னும் லீவரேஜ் அளவில் வித்யாசம்..! ஆனால் அதைச் செய்வதற்குள்ளேயே எனக்கு முதுகுவலியும், அதனால் எரிச்சலும் வந்தது..! எப்படியோ முடித்து விட்டு, 'அப்பாடா..' என்று, பெருமூச்சு விட்டு, அதை என் மகளிடம் கொடுத்து.. "என்னம்மா நல்லா இருக்கா..?" அவள்: "தேங்கஸ்பா..! பரவாயில்லையே..! எப்டி இவ்ளோ நல்லா அட்டை போடுற..?"என் மனதிற்குள் என் அப்பா வந்தார்..! என் கண்களின் ஓரம் நீர் வந்தது..!
எனக்கு காது கேட்கவில்லையா?
Tuesday, August 20, 2019
Business struggling or Economy struggling
Economy is not struggling...the business models are changing.
Below is a very interesting insight :
Often heard nowadays that
"indian Economy is struggling".
Sit back & dispassionately think "is the economy really struggling *or* are business models struggling ?"
Some food for thought:
1) Car sales are going down... but Ola / Uber are rising.
2) Restaurants are going empty... but home delivery is rising
3) Tuition classes are not getting students but online studying is rising
4) Traders are struggling but online market sites and reference based direct selling are breaking all records in sales.
5) Old commission based businesses are snivelling... but online services, at low cost, are finding takers.
6) Cell phone bills have reduced & internet penetration is increasing.
7) Stable (read "Govt Jobs") are dwindling but "Start up jobs" offering equity & Flexi work time are expanding.
8) Jobs seekers are reducing but job creaters are on the rise. Working 40 hrs a week for 40 years is trend of past. Working for few years and spending quality time in contributing to society is the trend.
If truth be told what we are experiencing is a transition phase.
& Any transition is painful for the "well set"...... "the masters of the past".
It's challenging for those who's business models are based on ancient data....
It's a mystery for those who have never looked beyond traditional methods or have assiduously resisted change of any kind.
Economy is not struggling...the business models are changing.
Friday, August 16, 2019
தேவி
The 9 avataars of a Devi in our everyday lives....
PART I
1. Morning rush hour, office work... Ashtabhujangni.
2. Teaching her children.... Saraswati.
3. Saves money from her household expenses... Mahalakshmi.
4. Puts food on a plate for her family.... Annapurani.
5. Stands firmly with her family in the hour of need.... Parvathi.
PART II
6. Hubby puts a used wet towel on the bed... Durga Devi.
7. Hubby doesn't want to discuss about the Holiday Plans... Kali Devi.
8. Hubby Doesn't appreciate her Saree... Mahishasurasam mardhini.
9. Hubby praises qualities in another woman... Bhavani.
புராண கதை
முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து, பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..
'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..
குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..
மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..
ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...
மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...
அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..
இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...
அடேயப்பா....எத்தனை வழிகள்...
ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..
கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..
'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..
'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...
'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..
'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....
'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...
'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...
'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...
என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...
குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..
கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..
'மவராசியா இரு...'
வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..
நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!
'இங்கென்ன செய்கிறீர்..!!'
* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*
'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..
* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*
'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'
* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*
'அப்படியென்றால்..??'
* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....
பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..
தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...
நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *
'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..
* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *
'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'
* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...
உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண, நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...
பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்.
புன்னகைத்தார் கடவுள்!
🙏 ஒரு அற்புதமான பதிவு. முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து, பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:🙏