எங்கள் அப்பா அதிகம் படித்தவர். எங்களை நன்கு படிக்க வைத்தார்..! தன்னால் பாடங்கள் சொல்லித்தர no time எங்கள் ஸ்கூல் காலம் வரையிலும் அவர் எங்கள் நோட்புக்குகளுக்கு பிரவுன் கலர் அட்டை போட்டுத் தருவதை ஒரு தவம் போல் செய்வார்..! ஸ்கூல் திறந்து, புது புத்தகங்கள், நோட்புக்குகள் வந்ததுமே குதூகலமாகி, மைலாப்பூர் சீத்தாராமன் அண்டு கோவிலிருந்து அட்டை பேப்பர் வாங்கி வருவார்..! இரவு 9 மணிக்கு நாங்கள் புத்தகங்கள், நோட்டுகளை கொண்டு வந்து வைத்து விட வேண்டும்..! ஏதோ கிழங்கு + மைதாமாவில் வீட்டிலேயே செய்யும் கோந்து அம்மா ரெடி பண்ண வேண்டும்..! ஒரு நூல் கண்டு, கத்திரிக்கோல், பிளேடு, கோந்து எல்லாவற்றையும் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு தரையில் அமர்வார். அவசரம் இல்லாமல், கால்குலேட் செய்து, பேப்பர் வேஸ்ட் ஆகாத வண்ணம், சரியான அளவுகளில், அட்டைப் பேப்பரை மடித்து, அந்த மடிப்புக்குள் நூலை வைத்து, ஒரு பக்கத்திலிருந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இழுத்தால் கச்சிதமாய்க் கிழியும் பேப்பர்...! பின்னர் புக்/நோட்டை அதற்குள் வைத்து, ஸ்கேல் வைத்து, மிகச் சரியான 'செண்டர்' பார்ப்பார்..! அதை பென்சிலில் மார்க் செய்து கொண்டு, அந்த இடத்தில், கத்திரிக்கோலால் ஒரு quadrangular cut..! அதே போல, கவரின் கார்னர்களில் சுகுரான triangular cuts..! இதெல்லாம் ஒரு நிதானம் இருந்தால் மட்டுமே முடியும்..! பின்னர் புக்கை உள்ளே வைத்து அட்டையை மடித்தால், அது பெர்ஃபெக்ட்டாக இருக்கும்..! கார்னரிலோ, நடுவிலோ அட்டை துருத்தாது..! Fringes இருக்காது..! பின்னர், கோந்தைத் தடவி ஒட்டுவதிலும் பெர்ஃபெக்க்ஷன்..! அதிகமாக கோந்தை வைத்தால் பேப்பர் சுருங்கும்..! ஒட்டி விட்டு, ஒரு துணியால் அழுத்தித் துடைத்து விட்டுப் பார்த்தால், அட்டை புக்கோடு ஒட்டியே செய்யப்பட்டதோ என்று தோன்றும்..! அவ்வளவு பக்காவாக, டைட்ட்டாக, அதே சமயம் திறந்து மூட லகுவாக இருக்கும்..! அத்தனை புக்குகள், நோட்டுகளுக்கும் நிதானத்துடன், சிரத்தையுடன், விடிய விடியச் செய்வார்..! அட்டை போட்டு விட்டு, மேல் வலது கார்னரில், Bril Inks லேபில்களையும் ஒட்டி அவர் கொடுத்தால், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும்..!
பல ஆண்டுகளுக்குப் பின், என் பெண் ஸ்கூல் படிக்கும் போது, அவள் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர எனக்கு நேரம் இருக்கவில்லை..! அதற்கு என்று சில கடைகள் இருக்க, அங்கே கொடுத்து போட்டுக் கொள்வதுதான்..! ஒரே ஒரு தடவை அவசரம் என்று என் பெண் ஒரு நோட்டை என்னிடம் கொடுத்து அட்டை போட்டுத் தரச் சொன்னாள். நானும் முடிந்த அளவு செய்து கொடுத்தேன். அட்டை தொளதொளவென்று இருந்தது..! செண்டரில் சரியாய் கட் செய்யாமல் உள்ளிருக்கும் நோட்புக் துருத்தியது. முன்னும் பின்னும் லீவரேஜ் அளவில் வித்யாசம்..! ஆனால் அதைச் செய்வதற்குள்ளேயே எனக்கு முதுகுவலியும், அதனால் எரிச்சலும் வந்தது..! எப்படியோ முடித்து விட்டு, 'அப்பாடா..' என்று, பெருமூச்சு விட்டு, அதை என் மகளிடம் கொடுத்து.. "என்னம்மா நல்லா இருக்கா..?" அவள்: "தேங்கஸ்பா..! பரவாயில்லையே..! எப்டி இவ்ளோ நல்லா அட்டை போடுற..?"என் மனதிற்குள் என் அப்பா வந்தார்..! என் கண்களின் ஓரம் நீர் வந்தது..!